search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Party Integration"

    • அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
    • கூட்டணி விசயத்தில் சரியான முடி வெடுக்கவில்லை என்ற எண்ணம் இருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் அடுத்து வரும் 2026 சட்ட மன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

    தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி விசயத்தில் சரியான முடி வெடுக்கவில்லை என்ற எண்ணம் இருக்கிறது.

    இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் புகழேந்தி, பழனி சாமி ஆகிய 3 பேரும் இணைந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு என்று உருவாக்கி கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    இதுபற்றி அந்த தரப்பினர் கூறும்போது, கட்சியினர் அனைவரையும் ஒருங்கி ணைத்து கட்சியை பலப் படுத்த வேண்டியது கட்டாயம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் இன்று மரியாதை செலுத்தி விட்டு அந்த பணியை தொடங்கு கிறோம்.

    எல்லா தரப்பையும் சந்தித்து பேசி இணைப்பதற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளை அறிந்து அதை களையவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்கள்.

    அதைத் தொடர்ந்து சுமார் 10 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்படும். இந்த குழுவினர் அடுத்த கட்ட பணியை தொடர்ந்து செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த புதிய முயற்சி பலிக்குமா? என்பது பெரிய கேள்விக்குறி. ஏனெனில் பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோரையும் ஒன்று சேர்க்கவே இந்த குழு விரும்புகிறது.

    ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா? என்று தெரியவில்லை. நேற்று ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை இணைக்க வாய்ப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டதற்கு போனவர்கள் போன வர்கள்தான் என்றார்.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, 'தேசிய கட்சிகள் தேர்தலுக்கு மட்டும் நமமை பயன்படுத்திக் கொள்கின்றன.

    அதன் பிறகு கண்டு கொள்வதில்லை. இனிமேல் பா.ஜனதாவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளார். இந்த சிக்கல்களுக்கு தீர்வு கண்டு சமரச முயற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்பது போக போகத்தான் தெரியும் என்றனர் கட்சி நிர்வாகிகள்.

    ×