என் மலர்
நீங்கள் தேடியது "passports"
- தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும்.
- நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக, சாலைகளில் தொழுகை நடத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மீரட் எஸ்.பி. ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும் என்றும், யாரும் சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். எச்சரிக்கையை மீறுபவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சிங் சவுத்ரி கூறுகையில்,
தனிநபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அவர்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.
நீதிமன்றத்தால் தனிநபர்கள் விடுவிக்கப்படும் வரை அத்தகைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா கூறுகையில், மாவட்ட மற்றும் காவல் நிலையங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பதட்டம் மிக்க பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைதியைப் பேணுவதற்கும், வரவிருக்கும் பண்டிகைகளை சீராகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்வாகம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
- கடந்த ஐந்தாண்டுகளாக ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர்ந்து முதல் இடத்தில் ஆதிக்கம்.
- ஆப்கானிஸ்தான் விசா இல்லாமல் வெறும் 28 நாடுகளுக்கு மட்டுமே அணுக அனுமதி.
சமீபத்தில் நடைபெற்ற ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய 6 நாடுகள் உலகளாவிய 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கின்றன. இதனால், 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த 6 நாடுகளும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் கொண்ட நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாக ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர்ந்து முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இருப்பினும், இந்த காலாண்டின் தரவரிசை ஐரோப்பிய நாடுகள் முன்னேறி வருவதை காட்டுகிறது. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் தென் கொரியாவுடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகள், 193 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்வதற்கான அனுமதியை வழங்குகின்றன.
ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் 192 இடங்களுக்கு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.

இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் உட்பட 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள குடிமக்கள் பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட் 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா தனது தற்போதைய தரவரிசையை உஸ்பெகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான் 101 வது இடத்தில் உள்ளது.
பட்டியலில் 166 கூடுதல் நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் பாக்கியத்தை முதல் தரவரிசையில் உள்ள நாடுகள் இப்போது அனுபவிக்கின்றன. ஆனால், ஆப்கானிஸ்தான் விசா இல்லாமல் வெறும் 28 நாடுகளுக்கு மட்டுமே அணுகக்கூடியது. 29 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் அணுகக்கூடிய சிரியா இரண்டாவது மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஈராக் 31 மற்றும் பாகிஸ்தான் 34 இடங்களைப் பிடித்துள்ளது.
- பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது.
சென்னை:
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் அவசியம் ஆகும். பாஸ்போர்ட் இல்லாமல் செல்பவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுகிறார்கள். வேலை, படிப்பு மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியர்கள் நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு பறந்து வருகிறார்கள்.
இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் 3 கோடியே 8 லட்சத்து 93 ஆயிரத்து 577 பெண்கள், 5 கோடியே 73 லட்சத்து 77 ஆயிரத்து 716 ஆண்கள் என மொத்தம் 8 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 293 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 42 லட்சத்து 17 ஆயிரத்து 661 பெண்கள், 56 லட்சத்து 75 ஆயிரத்து 179 ஆண்கள் என 98 லட்சத்து 92 ஆயிரத்து 840 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 40 லட்சத்து 75 ஆயிரத்து 512 பெண்கள், 57 லட்சத்து 35 ஆயிரத்து 854 ஆண்கள் என 98 லட்சத்து 11 ஆயிரத்து 366 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 89 பெண்கள், 70 லட்சத்து 58 ஆயிரத்து 703 ஆண்கள் என 87 லட்சத்து 85 ஆயிரத்து 792 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 28 லட்சத்து 7 ஆயிரத்து 509 பெண்கள், 55 லட்சத்து 47 ஆயிரத்து 383 ஆண்கள் என 83 லட்சத்து 54 ஆயிரத்து 892 பேர் பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்-லைன் பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்துதல் குறித்து போலீசாருக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆன்-லைன் மூலம் இ-சேவை பாஸ்போர்ட் கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தால் 3 நாட்களில் அவர்களுடைய சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை முடிக்க வேண்டும். டிஜிட்டல் கையெழுத்து பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து அவர்களுடைய சான்றிதழ்களை போலீசார் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த கையெழுத்தை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிவோர் வந்து போட்டு செல்ல காலதாமதம் ஏற்படுவதால் அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதற்கும் தாமதம் ஏற்படுகிறது.
மற்ற மாவட்டங்களில் 5 நாட்களுக்குள் இ-சேவை பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 30 நாட்களுக்கு மேல் ஆவதாக தெரியவந்துள்ளது. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு பணியை உடனுக்குடன் முடித்து விரைவாக பொது மக்களுக்கு பாஸ்போர்ட்டு கிடைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக மாவட்டத்தில் உள்ள 56 போலீஸ் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை பணியை மேற்கொள்ளும் போலீசாருக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விரைவாக பாஸ்போர்ட் சேவை பணியை முடிக்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 2,500 பேருக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தரப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.