என் மலர்
நீங்கள் தேடியது "PawanKalyan"
- தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
- பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதி அளித்து உதிவினர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் , பிரபாஸ், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதி அளித்து உதிவினர்.
இந்நிலையில் தமிழ் சினிமவின் முன்னணி நடிகரான சிம்பு 6 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். தமிழ் நடிகர் ஆந்திராவில் நடந்த பேரிடருக்காக நிதிக் கொடுத்தது மிகவும் பெருந்தன்மையான விஷயம் என்று நெட்டிசன்கள் சிம்புவை பாராட்டி வருகின்றனர்.
சிம்பு தற்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விரிவான விசாரணை நடத்துமாறு வேண்டுகோள்.
- பாதுகாத்தார்களா விற்று விட்டார்களா என்று சந்தேகம் எழுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 11 நாட்கள் விரதம் இருந்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க போவதாக துணை முதல் மந்திரி நடிகர் பவன் கல்யாண் அறிவித்தார்.
அதன்படி அவர் விரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் மீது நம்பிக்கையுடன் பக்தர்கள் தங்கள் சம்பாதித்த சொத்தை கடவுளுக்கு வழங்கும் பொருட்டு காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உள்ளிட்ட பல மாநிலங்களில் அசையா சொத்துக்கள் கோவிலுக்கு உள்ளன. மும்பை, ஐதராபாத் நகரங்களில் பல கட்டிடங்கள் உள்ளன.
சுவாமியின் சொத்துக்களை பாதுகாப்பதை விட அவற்றை விற்று விடுவதற்கு அப்போதைய அரசு அமைத்த தேவஸ்தான குழு துடித்தது ஏன்? அவர்களை அவ்வாறு வழி நடத்தியது யார்? என்பதை நாங்கள் வெளியே கொண்டு வருவோம்.
ஏழுமலையான் சொத்துக்களை முந்தைய அறங்காவலர் குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் பாதுகாத்தார்களா அவற்றை விற்று விட்டார்களா என்று சந்தேகம் எழுகிறது.
ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்து நகைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருப்பதியில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
- லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம் என்று கார்த்தி கூறியது சர்ச்சையானது.
கார்த்தி - அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் படம் தெலுங்கு மொழியில் 'சத்யம் சுந்தரம்' என்ற பெயரில் வெளியாகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.
அப்போது கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கிண்டலாக கூறினார்.
லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நான் தற்போது ஒரு சினிமா நிகழ்ச்சியில் பார்த்தேன். லட்டு குறித்து பேசினால் சர்ச்சையாகும் என கூறியுள்ளனர். அவ்வாறு சொல்லக் கூடாது. நான் உங்களை நடிகர்களாக மதிக்கிறேன். ஆனால் சனாதன தர்மத்தை பற்றி பேசும் போது, ஒன்றுக்கு 100 முறை யோசித்து பேச வேண்டும்" என தெரிவித்தார்.
இதனையடுத்து லட்டு குறித்து பேசியதற்கு கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "மரியாதைக்குரிய பவன் கல்யாண் அவர்களே, லட்டு குறித்து நான் பேசியதால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திருப்பதி பெருமாளின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நமது மரபுகளை கடைப்பிடித்து வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் ஏழுமலையான் கோவிலில் நேற்று மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
- கார்த்தி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் கார்த்தி தனது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி கோவிலுக்கு செல்லும் வழியில் தன்னை சந்திக்க வந்த மக்களுடன் நடிகர் கார்த்தி கைக்குலுக்கி, செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
முன்னதாக மெய்யழகன் படத்தின் தெலுங்கு பதிப்பின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கார்த்தி கிண்டலாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து கார்த்தி, பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
