என் மலர்
நீங்கள் தேடியது "Pennsylvania"
- இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
- பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
வாஷிங்டன்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாக, மகிழ்ச்சியாக இந்தப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாண மேலவையில் செனட்டர்கள் அறிமுகப்படுத்தினர். இதையடுத்து, இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அங்கு தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெபோராவை 38 முறை கத்தியால் குத்தினார்
- துப்பு கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை
அமெரிக்காவில், கடந்த 2021-ல், 34-வயதான டனேலோ சவுசா கேவல்கான்டே எனும் பிரேசில் நாட்டை சேர்ந்தவர், 33 வயதான டெபோரா பிராண்டாவோ எனும் தனது தோழியை, அவரது 2 குழந்தைகளின் கண் முன்னே 38 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு கடந்த மாதம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இதனையடுத்து, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், ஃபிலடெல்ஃபியாவிற்கு 50 கிலோமீட்டர் தொலைவில் பொகோப்சான் டவுன்ஷிப் பகுதியில் உள்ள செஸ்டர் கவுன்டி சிறைச்சாலையில் சவுசா கேவல்கான்டே அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 அன்று கேவல்கான்டே சிறையில் இருந்து சவுசா தப்பித்தார். இவரை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினருடன் ஹெலிகாப்டர்களும், டிரோன்கள் மற்றும் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேடுதல் வேட்டை குறித்து இவரது புகைப்படத்தை வெளியிட்டு பொது மக்களை செஸ்டர் கவுன்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் எச்சரித்து இருக்கிறது.
அதில், "மக்கள் தங்கள் வீடுகளை பூட்டி கொண்டு பத்திரமாக இருக்க வேண்டும். கார்களையும், உடைமைகளையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். மேலும் தங்களை சுற்றி ஏதேனும் வித்தியாசமாக நடைபெறுகிறதா என விழிப்புடன் கவனிக்க வேண்டும்," என்று அந்த அலுவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆங்காங்கே இவரை கண்டதாக சில தகவல்கள் காவல்துறைக்கு வருகிறது. கேவல்கான்டே தப்பிய விதம் குறித்து சிறைத்துறை வெளியிட்டுள்ள வீடியோவில் வெள்ளை நிற டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்த இவர் இரு சுவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில் கைகளை வைத்து நகர்ந்து மேற்கூரைக்கு சென்று அங்கிருந்து தப்பியோடுவது தெரிகிறது.
தப்பியவர் மீது மேலும் பல கொடூர குற்றசாட்டுகள் பிரேசில் நாட்டிலும் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வட்டார பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இவரை கண்டுபிடிக்க துப்பு கொடுப்பவர்களுக்கு சுமார் ரூ.8.3 லட்சம் ($10000) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோல்டன்டூடுல் நாய்கள் வளர்ப்பவர்களிடம் அதிக விசுவாசம் கொண்டவை
- வங்கி தரப்பிலிருந்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது
அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் உள்ளது பிட்ஸ்பர்க் (Pittsburgh) நகரம்.
பிட்ஸ்பர்க் நகரத்தில் வசித்து வருபவர்கள் 34 வயதாகும் க்ளேட்டன் லா (Clayton Law) மற்றும் அவரது குடும்பத்தினர். இவர்கள் செசில் (Cecil) என பெயரிட்ட கோல்டன்டூடுல் (Goldendoodle) வகை நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். செசிலுக்கு 7 வயதாகிறது.
கடந்த டிசம்பர் மாதம், லா, தனது வீட்டை சுற்றி புதிய வேலி அமைக்க விரும்பினார். இதற்காக தனது வங்கி கணக்கிலிருந்து $4000 கரன்சி நோட்டுக்களை எடுத்து வந்தார். அப்பணத்தை தம்பதியினர் தங்கள் சமையலறை மேடையின் மீது வைத்து விட்டு வேறு ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக செசில், அந்த ரூபாய் நோட்டுக்கள் முழுவதையும் தின்று விட்டது.
செசில் உண்ட பிறகே ஓடி வந்து அதை கண்ட லா குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். இழந்த பணத்திற்காகவும், தங்கள் செல்ல பிராணியின் உடல்நலத்திற்காகவும் ஒரே சமயத்தில் அவர்கள் கவலைப்பட தொடங்கினர்.
க்ளேட்டனின் மனைவி, கேரி உடனடியாக கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டார். நாயின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இல்லாத வரை அச்சப்பட வேண்டாம் என மருத்துவர் கூறியதை அடுத்து இழந்த பணம் குறித்து யோசித்தனர்.
கேரி, இணையதளத்தில் "பணத்தை நாய் சாப்பிட்டால் என்ன செய்வது?" என கேட்டு மீட்கும் வழிமுறைகளை தேட தொடங்கினார்.
வங்கியை தொடர்பு கொண்டு லா சம்பவத்தை தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினர்.
சில மணி நேரம் கடந்ததும் சில கரன்சி நோட்டுக்களை செசில் வாந்தி எடுத்தது; சிலவற்றை உடலிலிருந்து கழிவில் வெளியேற்றியது.
மிகுந்த சகிப்புத்தன்மையுடன் கிடைத்த கரன்சிகளை எடுத்து சுத்தப்படுத்தி எண்ணி பார்த்ததில் சுமார் $3,550 கரன்சிகள் அவர்களுக்கு மீண்டும் கிடைத்தது.
வரிசை எண்கள் (சீரியல் நம்பர்கள்) சேதமடையாத கரன்சிகள் அவர்களுக்கு வங்கியில் மாற்றி தரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட இழந்த தொகையில் பெரும் பகுதி அவர்களுக்கு திரும்ப கிடைத்தது.
இத்தனை போராட்டங்களுக்கு பிறகும் லா தம்பதியினருக்கு செசில் மீதான அன்பு குறையவில்லை.
சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதை தொடர்ந்து "நாய்க்கு இவ்வளவு விலையுயர்ந்த உணவா?" என பயனர்கள் கிண்டல் செய்து பதிவிடுகின்றனர்.
- வயதானதால் பைடனால் வேகமாக செயல்பட முடியவில்லை என பத்திரிகைகள் விமர்சித்தன
- டிரம்ப் வென்றால் ஜனநாயகம் தோற்று விடும் என்றார் பைடன்
இவ்வருடம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களம் இறங்கி உள்ளனர்.
தற்போது 81 வயதாவதால் ஜோ பைடனால் பிரசாரங்களை வேகமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை என்றும் டிரம்பை காட்டிலும் செயலாற்றுவதில் பைடன் பின் தங்கி இருப்பதாகவும் சில பத்திரிகைகள் விமர்சித்து வந்தன.
இதை தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் பைடன் இறங்கி உள்ளார்.
சுமார் 250 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன், பென்சில்வேனியா மாநிலத்தில் வேலி ஃபோர்ஜ் (Valley Forge) எனும் பகுதியில் அமெரிக்க படைகளை ஒருங்கிணைத்த இடத்திலேயே தனது முதல் உரையை ஜோ பைடன் தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார். அவர் நமது ஜனநாயகத்தை தியாகம் செய்ய துணிந்து விட்டார்.
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடந்ததற்கு அவர்தான் முழு பொறுப்பு.
தன்னை எதிர்ப்பவர்கள் மீது விஷம் கக்குகிறார். அமெரிக்கர்களின் ரத்தம் விஷமாகி விடுமென அவர் கூறுவது நாஜிக்களின் ஜெர்மனியை நினைவு படுத்துவது போல் உள்ளது.
ஆக்ரமிப்பு எண்ணம் கொண்ட வட கொரிய அதிபருடனும், ரஷிய அதிபருடனும் டிரம்ப் ஒட்டி உறவாடுகிறார்.
டிரம்ப் வென்று அவர் உறுதியளிக்கும் எதிர்காலம் தோன்றினால் அங்கு ஜனநாயகம் தோற்று விடும். உங்கள் சுதந்திரம் உங்கள் வாக்குச்சீட்டில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அமெரிக்க ஜனநாயகத்தை நான் கட்டி காப்பேன் என உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி விட்ட நிலையில், வரும் வாரங்களில், தேர்தல் களம் சூடு பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- தடுக்க வந்த காதலியின் அண்ணனையும் கத்தியால் தாக்கி உள்ளார்.
- கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பென்சில்வேனியா:
பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து அவர்களது மகள் குறித்த புகாரில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார். அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள்.
ஆனால் தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆலன்டவுன் என்கிற நகரம் உள்ளது. இங்கு உள்ள தெரு முனை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காரின் அருகே நின்றுகொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
கார் வெடித்து சிதறியது எப்படி? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அதே சமயம் இது பயங்கரவாத தாக்குதல் கிடையாது என்றும் பொதுமக்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் உறுதிபட தெரிவித்தனர். #Pennsylvania #CarExplosion