என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pillaiyarpatti"

    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.
    • வருடத்தின் முதல் நாளில் தரிசிப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.



    பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 

     திருப்பத்தூர்

    தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    குடவறை கோவிலான இங்கு மூலவர் விநாயகரை வருடத்தின் முதல் நாளில் தரிசிப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    அதன்படி தமிழ் புத்தாண்டான இன்று காலை முதல் சிவகங்கை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கா லையில் கோவில் தெப்பத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ராமேசுவரம், ராமநாதசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    ×