என் மலர்
நீங்கள் தேடியது "Pokhran"
- உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
- இந்த ஒத்திகை பயிற்சியை பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியும் நடத்தப்பட்டது. சுமார் 50 நிமிடங்கள் இந்தப் பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் கடற்படை ஏவுகணைகள், விமானப்படை தேஜஸ் இலகுரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், டேங்கர்கள் உள்பட பல்வேறு ராணுவ உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
துல்லியமான வழிகாட்டும் ஏவுகணை, தகவல் தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு அமைப்பு போன்ற புது தொழில்நுட்பங்களும் பரிசோதிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த ஒத்திகை பயிற்சியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே ஆகியோரும் பார்வையிட்டனர். மேலும், 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பார்வையிட்டனர்.
- விசூரத்ஸ் ஏவுகணைகள், எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த கூடிய சிறிய வகை ஏவுகணையாகும்.
- பல்வேறு நவீன தொழில்நுட்பங்களும் அதில் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் துப்பாக்கி சூடு தளத்தில், ஏவுகணைகள் சோதனை நடந்தது. அப்போது குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கும் 3 ஏவுகணைகள் சோதித்து பார்க்கப்பட்டன. விசூரத்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணைகள் 4-வது தலைமுறை தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) மற்றும் இந்திய ராணுவம் இணைந்து இந்த ஏவுகணை சோதனையை நடத்தின. சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.
"டி.ஆர்.டி.ஓ., 4-வது தலைமுறை அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஏவுகணைகளுடன் கூடிய 3 விமானங்களை வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தியது" என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். அவர் ஆய்வுக் குழுவினருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
விசூரத்ஸ் ஏவுகணைகள், எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த கூடிய சிறிய வகை ஏவுகணையாகும். பல்வேறு நவீன தொழில்நுட்பங்களும் அதில் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

