என் மலர்
நீங்கள் தேடியது "policemen"
பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 14 டி.எஸ்.பி.க்கள் உள்பட 104 போலீசாரை நியமித்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். #PonManickavel
சென்னை:
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியான பொன். மாணிக்கவேல் ஓய்வு பெற்றதையடுத்து அவரை ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி 14 டி.எஸ்.பி.க்கள் உள்பட 104 போலீசாரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமித்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதில் கூடுதல் டி.எஸ்.பி. ஒருவரும் இடம் பெற்றுள்ளார். 14 இன்ஸ்பெக்டர்கள், 43 சப்-இன்ஸ்பெக்டர்களும் புதிய குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பொன்.மாணிக்கவேலுக்கு கீழ் பணியாற்றுவார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக போலீசார் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இதனை காரணம் காட்டி, பணி நீட்டிப்பை ரத்துசெய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் தான் டி.ஜி.பி ராஜேந்திரன் புதிய போலீசாரை பொன். மாணிக்கவேலுக்கு கீழ் பணியாற்ற நியமித்துள்ளார்.
பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான தகவல்களை அரசுக்கு முறையாக தெரிவிப்பது இல்லை என்று தமிழக அரசின் சார்பில் கோர்ட்டில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்ற பின்னர் சிலை கடத்தல் விவகாரத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை கைது செய்தார். தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வருகிறார். ஒருசில கருத்து வேறுபாடுகள் காரணமாக பொன். மாணிக்கவேலுக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. #PonManickavel
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியான பொன். மாணிக்கவேல் ஓய்வு பெற்றதையடுத்து அவரை ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி 14 டி.எஸ்.பி.க்கள் உள்பட 104 போலீசாரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமித்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதில் கூடுதல் டி.எஸ்.பி. ஒருவரும் இடம் பெற்றுள்ளார். 14 இன்ஸ்பெக்டர்கள், 43 சப்-இன்ஸ்பெக்டர்களும் புதிய குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பொன்.மாணிக்கவேலுக்கு கீழ் பணியாற்றுவார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக போலீசார் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இதனை காரணம் காட்டி, பணி நீட்டிப்பை ரத்துசெய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் தான் டி.ஜி.பி ராஜேந்திரன் புதிய போலீசாரை பொன். மாணிக்கவேலுக்கு கீழ் பணியாற்ற நியமித்துள்ளார்.
பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான தகவல்களை அரசுக்கு முறையாக தெரிவிப்பது இல்லை என்று தமிழக அரசின் சார்பில் கோர்ட்டில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்ற பின்னர் சிலை கடத்தல் விவகாரத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை கைது செய்தார். தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வருகிறார். ஒருசில கருத்து வேறுபாடுகள் காரணமாக பொன். மாணிக்கவேலுக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. #PonManickavel
மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து நேற்று 400 போலீசார் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். #Madhyapradesh #Policemen #Holiday
போபால்:

பதவி ஏற்றதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தற்போது மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என்பதை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தது.
இதை அப்போதே போலீசாரின் குடும்பத்தினர் வரவேற்று இருந்தனர். இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் பணியாற்றும் போலீசாருக்கு புத்தாண்டு பரிசாக வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று 400 போலீசார் வார விடுமுறை எடுத்து மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். மாநிலத்தில் மொத்தம் 1 லட்சம் போலீசார் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
போலீசார் ஏற்கனவே ஈட்டிய விடுப்பு உள்பட மற்ற விடுமுறைகளை எடுத்து வந்தாலும் வார விடுமுறை மட்டும் அனுபவிக்காமல் இருந்தனர். அவர்களுக்கு தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டதால் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்தனர்.
போபால் சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா கூறுகையில், நான் 1981-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேன். இதுவரை வார விடுமுறை எடுக்காமல் பணியாற்றினேன். இப்போது 38 ஆண்டுக்குப்பின் வார விடுமுறை கிடைத்துள்ளது. எனது குடும்பத்துடன் பொழுதை கழித்தேன். சொந்த பணிகளையும் கவனிக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் சர்மா கூறுகையில், ‘‘நான் முதல்முறையாக வார விடுமுறை எடுத்ததும் எனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். மாலையில் திரும்ப அழைத்து வந்தேன். மற்ற நேரங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தேன். முதல் முறையாக 24 மணிநேரமும் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தேன்’’ என்றார். #Madhyapradesh #Policemen #Holiday
மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

பதவி ஏற்றதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தற்போது மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என்பதை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தது.
இதை அப்போதே போலீசாரின் குடும்பத்தினர் வரவேற்று இருந்தனர். இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் பணியாற்றும் போலீசாருக்கு புத்தாண்டு பரிசாக வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று 400 போலீசார் வார விடுமுறை எடுத்து மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். மாநிலத்தில் மொத்தம் 1 லட்சம் போலீசார் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
போலீசார் ஏற்கனவே ஈட்டிய விடுப்பு உள்பட மற்ற விடுமுறைகளை எடுத்து வந்தாலும் வார விடுமுறை மட்டும் அனுபவிக்காமல் இருந்தனர். அவர்களுக்கு தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டதால் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்தனர்.
போபால் சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா கூறுகையில், நான் 1981-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேன். இதுவரை வார விடுமுறை எடுக்காமல் பணியாற்றினேன். இப்போது 38 ஆண்டுக்குப்பின் வார விடுமுறை கிடைத்துள்ளது. எனது குடும்பத்துடன் பொழுதை கழித்தேன். சொந்த பணிகளையும் கவனிக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் சர்மா கூறுகையில், ‘‘நான் முதல்முறையாக வார விடுமுறை எடுத்ததும் எனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். மாலையில் திரும்ப அழைத்து வந்தேன். மற்ற நேரங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தேன். முதல் முறையாக 24 மணிநேரமும் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தேன்’’ என்றார். #Madhyapradesh #Policemen #Holiday
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருப்பதால் வருகிற 5, 6-ந்தேதிகளில் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். #Sabarimala #SabarimalaTemple
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17-ந்தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறந்த நாளில் இருந்து நடை அடைக்கப்பட்ட 21-ந்தேதி வரை சபரிமலை போராட்டக்களமாக காட்சி அளித்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துவருகிறார்கள். நேற்று வரை 3305 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஸ்ரீசித்திரை திருநாள் பிறந்தநாள் விழாவுக்காக நடை திறக்கப்படுகிறது.
அன்று மன்னர் குடும்பத்தினர் தரிசனம் செய்த பின்னர் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 6-ந்தேதி இரவு கோவில்நடை அடைக்கப்பட இருக்கிறது.
வருகிற 6-ந்தேதி தீபாவளி திருநாளாகும். எனவே ஐயப்பனை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வர வாய்ப்புள்ளது. மேலும் ஒருநாள் மட்டுமே நடை திறக்கப்பட்டிருக்கும் என்பதால் உள்ளூர் மக்களே அதிகளவில் வருவார்கள் என்று கூறப்படுகிறது.
சபரிமலையில் போராட்டங்கள் ஓய்ந்திருக்கும் நிலையில் இப்போது மீண்டும் நடை திறக்க இருப்பதால் சபரிமலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதையடுத்து சபரிமலையில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பத்தினம் திட்டை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
போலீசாருடன் வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எருமேலியில் இருந்து வனப்பாதை வழியாக யாரும் சபரிமலைக்குள் சென்று விடாமல் இருக்க அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் போர்வையில் போராட்டக்காரர்கள் ஊடுருவி விடாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18-ந்தேதி நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 5-ந்தேதி திறக்கப்பட்டு 6-ந்தேதி மூடப்படும். அதன் பிறகு 10 நாட்களுக்கு பிறகு மண்டல பூஜை விழாவிற்காக மீண்டும் 16-ந்தேதி நடை திறக்கப்படும். அதன் பிறகு டிசம்பர் மாதம் 27-ந்தேதி 41 நாட்கள் நடை திறந்திருக்கும். 27-ந்தேதி மண்டல பூஜைக்கு பிறகே நடை அடைக்கப்படும்.
3 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 30-ந்தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படும். அதன் பிறகு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். #Sabarimala #SabarimalaTemple
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17-ந்தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறந்த நாளில் இருந்து நடை அடைக்கப்பட்ட 21-ந்தேதி வரை சபரிமலை போராட்டக்களமாக காட்சி அளித்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துவருகிறார்கள். நேற்று வரை 3305 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஸ்ரீசித்திரை திருநாள் பிறந்தநாள் விழாவுக்காக நடை திறக்கப்படுகிறது.
அன்று மன்னர் குடும்பத்தினர் தரிசனம் செய்த பின்னர் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 6-ந்தேதி இரவு கோவில்நடை அடைக்கப்பட இருக்கிறது.
வருகிற 6-ந்தேதி தீபாவளி திருநாளாகும். எனவே ஐயப்பனை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வர வாய்ப்புள்ளது. மேலும் ஒருநாள் மட்டுமே நடை திறக்கப்பட்டிருக்கும் என்பதால் உள்ளூர் மக்களே அதிகளவில் வருவார்கள் என்று கூறப்படுகிறது.
சபரிமலையில் போராட்டங்கள் ஓய்ந்திருக்கும் நிலையில் இப்போது மீண்டும் நடை திறக்க இருப்பதால் சபரிமலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதையடுத்து சபரிமலையில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பத்தினம் திட்டை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
போலீசாருடன் வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எருமேலியில் இருந்து வனப்பாதை வழியாக யாரும் சபரிமலைக்குள் சென்று விடாமல் இருக்க அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் போர்வையில் போராட்டக்காரர்கள் ஊடுருவி விடாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18-ந்தேதி நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 5-ந்தேதி திறக்கப்பட்டு 6-ந்தேதி மூடப்படும். அதன் பிறகு 10 நாட்களுக்கு பிறகு மண்டல பூஜை விழாவிற்காக மீண்டும் 16-ந்தேதி நடை திறக்கப்படும். அதன் பிறகு டிசம்பர் மாதம் 27-ந்தேதி 41 நாட்கள் நடை திறந்திருக்கும். 27-ந்தேதி மண்டல பூஜைக்கு பிறகே நடை அடைக்கப்படும்.
3 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 30-ந்தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படும். அதன் பிறகு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். #Sabarimala #SabarimalaTemple
ஈராக் நாட்டில் போலீஸ் சோதனை சாவடி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். #Iraq #IS #SucideAttack
பாக்தாத்:
ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சோதனைச் சாவடியில் இருந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசின் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கிர்குக் நகரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில், வெடி பொருட்கள் நிரம்பிய காரை தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிக்கச் செய்தான். இதன்மூலம் அங்கு பணியில் இருந்த 2 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், இதுபோன்ற தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பினரால் தான் அதிகமாக நடத்தப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Iraq #IS #SucideAttack
ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சோதனைச் சாவடியில் இருந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசின் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கிர்குக் நகரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில், வெடி பொருட்கள் நிரம்பிய காரை தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிக்கச் செய்தான். இதன்மூலம் அங்கு பணியில் இருந்த 2 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், இதுபோன்ற தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பினரால் தான் அதிகமாக நடத்தப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Iraq #IS #SucideAttack
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்.பி கரிய முண்டாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கடத்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீட்கப்பட்டனர். #Policemenrescued
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பா.ஜ.க. எம்.பி. கரியமுண்டா வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த 4 அதிகாரிகள் கடத்தப்பட்டதாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர்.
இந்நிலையில், டிலிங் பாரா பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கடத்தப்பட்ட 4 காவல் அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய காவல்துறை இயக்குனர் பாண்டே, உள்ளூர் மக்களின் உதவியுடன் அதிகாரிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மீட்கப்பட்ட அதிகாரி கூறுகையில், பாதல்கர்கி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தாங்கள் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக 3 காவல் அதிகாரிகள் மட்டுமே கடத்தப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த காவல்துறை இயக்குனர், 4-ம் அதிகாரி விடுமுறையில் இருப்பதாக எண்ணியிருந்ததாகவும், மீட்கப்பட்ட பின்னரே 4 பேர் என உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார். #PolicemenRescued
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பா.ஜ.க. எம்.பி. கரியமுண்டா வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த 4 அதிகாரிகள் கடத்தப்பட்டதாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர்.
இந்நிலையில், டிலிங் பாரா பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கடத்தப்பட்ட 4 காவல் அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய காவல்துறை இயக்குனர் பாண்டே, உள்ளூர் மக்களின் உதவியுடன் அதிகாரிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மீட்கப்பட்ட அதிகாரி கூறுகையில், பாதல்கர்கி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தாங்கள் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக 3 காவல் அதிகாரிகள் மட்டுமே கடத்தப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த காவல்துறை இயக்குனர், 4-ம் அதிகாரி விடுமுறையில் இருப்பதாக எண்ணியிருந்ததாகவும், மீட்கப்பட்ட பின்னரே 4 பேர் என உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார். #PolicemenRescued
தஞ்சையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற யோகா பயிற்சியில் 340 இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் பணியாற்றும் போலீசாருக்கு அதிகளவில் பணிசுமை உள்ளதாகவும், இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர் வரை தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்தன. இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயர் அதிகாரிகளின் டார்ச்சர் மற்றும் பணிசுமை காரணமாக மன அழுத்தம் போலீசாருக்கு ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டப்படுவதாக தெரிய வந்தது.
இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அவ்வப்போது யோகா பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த யோகா பயிற்சி காரணமாக மன அழுத்தம் குறைந்து தற்கொலைக்கு தூண்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும் போலீசார் புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உதவுகிறது.
இந்த நிலையில் தஞ்சையில் உள்ள இளநிலை போலீஸ் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான யோகா பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தஞ்சை, வல்லம், திருவையாறு ஆகிய சப்-டிவிசன்களில் இருந்து இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 340 பேர் கலந்து கொண்டனர். காவலர்களுக்கு யோகா செய்வது குறித்த பயிற்சியை திருச்சி யோகா மாஸ்டர் ராமசாமி வழங்கினார்.
தமிழகத்தில் பணியாற்றும் போலீசாருக்கு அதிகளவில் பணிசுமை உள்ளதாகவும், இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர் வரை தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்தன. இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயர் அதிகாரிகளின் டார்ச்சர் மற்றும் பணிசுமை காரணமாக மன அழுத்தம் போலீசாருக்கு ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டப்படுவதாக தெரிய வந்தது.
இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அவ்வப்போது யோகா பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த யோகா பயிற்சி காரணமாக மன அழுத்தம் குறைந்து தற்கொலைக்கு தூண்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும் போலீசார் புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உதவுகிறது.
இந்த நிலையில் தஞ்சையில் உள்ள இளநிலை போலீஸ் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான யோகா பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தஞ்சை, வல்லம், திருவையாறு ஆகிய சப்-டிவிசன்களில் இருந்து இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 340 பேர் கலந்து கொண்டனர். காவலர்களுக்கு யோகா செய்வது குறித்த பயிற்சியை திருச்சி யோகா மாஸ்டர் ராமசாமி வழங்கினார்.