என் மலர்
நீங்கள் தேடியது "Poondi"
- ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் 100 கன அடி மட்டும் திறக்கப்பட உள்ளது.
- செம்பரம்பாக்கம் ஏரியில் 3220 மில்லியன் கன அடி நீரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர்;
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.
இதன் மொத்த கொள்ளளவு, 3231 மில்லியன் கன அடி, நீர்மட்டம் 35 அடி ஆகும். பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வந்தது.
தற்போது மழை நின்றதால் நீர்வரத்து ஏரிக்கு குறைந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 200 கன அடி நீர் மட்டும் வந்து கொண்டு இருக்கிறது.
ஏரியில் தற்போது 3058 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்மட்டம் 34.73 அடியாக (மொத்தம் உயரம் 35 அடி) உள்ளது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் 100 கன அடி மட்டும் திறக்கப்பட உள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் 6 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதேபோல் புழல் ஏரியில் 3018 மில்லியன் கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3220 மில்லியன் கன அடி நீரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பருவ மழை மூலம் கிடைக்கும் நீர் இந்த ஏரிகளின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
- புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
சென்னை:
சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது. இதில் பூண்டி ஏரிக்கு தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. நீர், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படுகிறது. அதேபோல், பருவ மழை மூலம் கிடைக்கும் நீர் இந்த ஏரிகளின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இதற்கிடையே ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் போதிய நீர் ஏரிகளில் சேமிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் 3.231 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 3.231 டி.எம்.சி. அதாவது 100 சதவீதம் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. அதேபோல் 1.081 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 346 மில்லியன் கன அடி இருப்பு மூலம் 32.01 சதவீதம் நீர் உள்ளது.

இதேபோல் 3.300 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3.136 டி.எம்.சி. இருப்பு மூலம் 95.03 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 471 மில்லியன் கன அடி இருப்பு மூலம் 94.20 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 3.645 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3.289 டி.எம்.சி. இருப்பு மூலம் 90.23 சதவீதம் நீர் இருப்பு இருக்கிறது.
1.465 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 1.465 மில்லியன் கன அடி இருப்பு மூலம் ஏரி 100 சதவீதம் நிரம்பி உள்ளது.
13.222 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த 6 ஏரிகளிலும் சேர்த்து 11.938 டி.எம்.சி. நீர் இருப்பதன் மூலம் 90.29 சதவீதம் நீர் மொத்த இருப்பு உள்ளது. இதன் மூலம் அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான நீர் கையிருப்பில் உள்ளது. பூண்டி மற்றும் வீராணம் ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. தொடர்ந்து புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளன. இதனால் அனைத்து ஏரிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
இங்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயிலும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயிலும் திறந்து விடப்படுகின்றன.
கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் நீர் இருப்பு மிகவும் குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி புழல் ஏரிக்கும், மே மாதம் 21-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆகஸ்டு 27-ந்தேதி பேபி கால்வாயில் தண்ணீர் அனுப்புவதும் நின்று போனது.
முற்றிலுமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து நிலவியது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதினர்.
இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 29-ந்தேதி பூண்டிக்கு வந்தடைந்தது.
தொடக்கத்தில் வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து அதிகமானது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 620 கனஅடி வீதம் வந்து தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையிலிருந்து வரும் தண்ணீர் பூண்டி ஏரியில் முழுவதுமாக பரவுவதை தவிர்த்து நேராக லிங்க் கால்வாயில் தண்ணீர் வந்து சேர்வதற்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டம் வகுத்து உள்ளனர்.
அதன்படி கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் தண்ணீர் வந்து சேரும் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள லிங்க் கால்வாய் மதகு வரை கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றன.
பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் நடை பெற்று வரும் இப்பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்தால் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை நேராக லிங்க் கால்வாய் வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விட முடியும்.
பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 198 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
ஊத்துக்கோட்டை:
கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த 22-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 1200 கன அடியாக திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் கடந்த 29-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 146 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 620 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சென்னை குடிநீருக்கு பேபி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் படி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பொதுப் பணித்துறை அதிகாரிகளை கேட்டு கொண்டனர்.
அதன் படி நேற்று மாலை பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாயில் 20 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பொதுப் பணித்துறை முதன்மை பொறியாளர் ஜெயராமன், செயற் பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரகுமார் மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் வீராணம் ஏரி, போரூர் ஏரிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர், மீஞ்சூரில் உள்ள கடல் நீர் குடிநீராக்கும் மையத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.
இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
போதிய அளவில் பருவ மழை பெய்யாததாலும், கோடை வெயில் காரணமாகவும் பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இதன் காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.
கோடை வெயிலின் தாக்கத்தால் பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருகிறது. இன்று காலை 6 மணியளவில் ஏரியில் வெறும் 175 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.
இந்த ஏரியின் பரப்பளவு 70 சதுர கிலோ மீட்டர். ஏரியை சுற்றி அம்பேத்கார் நகர், புல்லரம்பாக்கம், சதுரங்க பேட்டை, நெய்வேலி, அரியத்தூர், நம்பாக்கம், வெள்ளாத்துகோட்டை, சென்றாம்பாளையம், ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர் உள்பட 45 கிராமங்கள் உள்ளன.
இப்பகுதிகள் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளாகும். பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருவதால் மேற்கூறப்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன் இந்த கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இக்கிணறுகளில் உள்ள மின் மோட்டார்கள், இரும்பு பைப்புகள் சேதமடைந்து ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் நீர் இறைக்கும் போது கசிவதால் ஆழ்துளை கிணறுகளிலிருந்து மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் சரிவர வினியோகம் ஆவதில்லை என்று கிராம பொது மக்கள் தெரிவித்தனர்.
பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருவதால் கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீர் செய்ய நிதி ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.