search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "post cyclone"

    • பிரதமர் மோடி தலைமையில் இன்று 7 கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
    • கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், எம்பிக்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

    தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று 7 கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், எம்பிக்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், வெப்ப அலை பாதிப்பு தொடர்பாக, பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    அப்போது, நாட்டில் நிலவும் வெயிலின் தாக்கம் குறித்து, அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    மேலும், ரீமால் புயல் பாதிப்பு குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    ×