search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "post-treatment"

    • இந்நிலையில் சம்பவத்தன்று ராம்பாக்கம் மின்மாற்றியில் பழுது செய்ய மின்கம்பத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.
    • இதுகுறித்து வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    வளவனூர் அருகே கொங்கம்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49) இவர் சொர்ணாவூர் மேல்பாதி பகுதியில் மின்ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ராம்பாக்கம் மின்மாற்றியில் பழுது செய்ய மின்கம்பத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து படுகாயமடைந்த ஏழுமழையை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு ஏழுமலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×