என் மலர்
நீங்கள் தேடியது "Potato Chips"
- லேஸ் சிப்ஸ் பாமாயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- லேஸ் சிப்சை பாமாயில் பயன்படுத்தாமல் சூரியகாந்தி எண்ணெய் கொண்டு தயாரிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் உருளைக்கிழங்கு சிப்ஸ் பிராண்டான லேஸ் சிப்ஸ் இந்தியாவில் மிக பிரபலமானது. இந்த லேஸ் சிப்ஸ் பாமாயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
பாமாயில் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் ஆரோக்கியமற்றது என்ற எண்ணம் இந்திய மக்களிடம் பொதுவாக உள்ளது.
ஆகவே லேஸ் சிப்சை பாமாயில் பயன்படுத்தாமல் சூரியகாந்தி எண்ணெய் கொண்டு தயாரிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் லேஸ் சிப்ஸ்களில் உப்பின் அளவையும் குறைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 1 கலோரிக்கு 1.3 மில்லி கிராம் அளவுக்கு மேல் சோடியம் இருக்க கூடாது என்று அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பல தின்பண்டங்கள் பாமாயில் கொண்டே தயாரிக்க படுகிறது. ஏனெனில் சூரியகாந்தி எண்ணெயை விட பாமாயில் விலை குறைவானது என்பதே இதற்கு காரணம்.
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
உப்பு - 1/2 டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.
இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!
காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
குறிப்பு :
உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.