என் மலர்
நீங்கள் தேடியது "Power Loom Owner Death"
சேலம் அருகே கொண்டலாம்பட்டியில் மின்சாரம் தாக்கி விசைத்தறி உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம், கொண்டலாம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் வீட்டில் விசைத்தறி வைத்து சேலைகள் உற்பத்தி செய்து வந்தார். மேலும் வீட்டில் நெய்யப்படும் இந்த சேலைகளை வெளியே கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் மணி விசைத்தறியில் சேலை நெய்து கொண்டிருந்தபோது, எந்திரத்தின் பெல்ட் திடீரென துண்டாக அறுந்தது. இதை மணி மாற்ற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே மணி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவரது மகன் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
சேலம், கொண்டலாம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் வீட்டில் விசைத்தறி வைத்து சேலைகள் உற்பத்தி செய்து வந்தார். மேலும் வீட்டில் நெய்யப்படும் இந்த சேலைகளை வெளியே கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் மணி விசைத்தறியில் சேலை நெய்து கொண்டிருந்தபோது, எந்திரத்தின் பெல்ட் திடீரென துண்டாக அறுந்தது. இதை மணி மாற்ற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே மணி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவரது மகன் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.