என் மலர்
நீங்கள் தேடியது "Prabhas"
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதிபுருஷ்' .
- ‘ஆதிபுருஷ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜெய் ஸ்ரீராம்’ பாடலைக் கொண்ட மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.

ஆதிபுருஷ்
ஆனால், ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல் டீசரில் ராவணன் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து படக்குழு சார்பில் ராமநவமி அன்று படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

'ஆதிபுருஷ்' டீசரில் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற பாடலின் சிறு பகுதி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படத்தில் இருந்து 'ஜெய் ஸ்ரீராம்' என்ற பாடலைக் கொண்ட மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
జై శ్రీరామ్ ?#JaiShriRam lyrical motion poster out now!
— Prabhas (@PrabhasRaju) April 22, 2023
Telugu: https://t.co/CaPyy8NhXz
Hindi: https://t.co/mNUHCfqSMZ#Adipurush #Prabhas @omraut @TSeries @UV_Creations @Retrophiles1 pic.twitter.com/71rg5wr5VU
- வாட்ஸ் அப்-பில் இரண்டு நடிகர்களின் படம் வைப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்ப்பட்டது
- தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிகுமாரை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஏலூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பவன் கல்யாண் ரசிகர்.
அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஹரிகுமார். இவர் பிரபல நடிகரான பிரபாஸ் ரசிகர் மன்றத்தின் செயலாளராக உள்ளார்.
ஓவியர்களான இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் அத்திலிக்கு வேலை தேடி வந்தனர். நேற்று மாலை இருவரும் வேலை முடிந்து மது குடித்தனர். அப்போது ஹரிக்குமாரின் செல்போனில் நடிகர் பிரபாசின் படம் வைத்து இருந்தார்.
இதனைக் கண்ட கிஷோர் உன்னுடைய ஸ்டேட்டஸில் நடிகர் பவன் கல்யாண் படத்தை வைக்க வேண்டும் என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார் இரும்பு கம்பி மற்றும் கற்களால் கிஷோரை தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரி குமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஆதிபுருஷ்' .
- இப்படம் ஜூன் மாதம் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆதிபுருஷ்
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.
ஆனால், ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல் டீசரில் ராவணன் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து படக்குழு சார்பில் ராமநவமி அன்று படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

ஆதிபுருஷ்
இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் வருகிற மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
జై శ్రీరాం ?
— Prabhas (@PrabhasRaju) May 6, 2023
The Most Awaited Trailer of the Year #AdipurushTrailer ?is all set to be screened in the following theaters on 9th May.
Don't miss your chance to witness The Epic Saga of Courage & Devotion? on the big screen?#Adipurush #AdipurushTrailerOnMay9th#Prabhas… pic.twitter.com/uivV6auI1D
- இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' .
- இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.

ஆனால், ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல் டீசரில் ராவணன் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து படக்குழு சார்பில் ராமநவமி அன்று படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- நடிகர் பிரபாஸ், ஆதி புரூஷ் என்ற படத்தில் ராமர் வேடத்தில் நடித்து உள்ளார்.
- ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆதிபுருஷ்
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் பிரபாஸ் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.

ஆதிபுருஷ்
நேற்று தெலுங்கானாவில் உள்ள பத்ராச்சலம் ராமர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.பின்னர் கோவில் நிர்வாக அலுவலர் ரமாதேவியை சந்தித்து கோவில் அன்னதானத்திற்காகவும், கோசாலை விரிவாக்கத்திற்காகவும் ரூ.10 லட்சம் காசோலையை நன்கொடையாக வழங்கினார். இந்த செயல் பிரபாஸின் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
- நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
- இப்படம் வருகிற ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் பிரபாஸ் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், 'ஆதிபுருஷ்' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் ரூ.170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் பிபள் மீடியா கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை கைப்பற்றியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ப்ரொஜெக்ட் கே’.
- இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ப்ரொஜெக்ட் கே'(Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ப்ரொஜெக்ட் கே
மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை விஜயசாந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் -பிரபாஸ்
அதாவது, இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவர் நடிக்கும் காட்சிகள் 20 நாட்களில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்காக கமல்ஹாசன் ரூ.120 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' .
- இந்த திரைப்படம் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இணையத்தில் கீர்த்தி சனோன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் கீர்த்தி சனோன் சீதையாக நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

இது பல நிகழ்ச்சிகளில் அவர் யதார்த்தமாக கலந்து கொண்டது. அதற்கு இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் கீர்த்தியை விட படக்குழு இன்னும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு முன் வந்த எதிர்ப்புகளை சமாளித்து ரூ.100 கோடி கூடுதலாக செலவு செய்து ரிலீஸ் செய்யும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்காது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'.
- இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சலார்
கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் பிரபாள் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படம் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள 'ஆதிபுருஷ்' படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிரபாஸ்
இந்நிலையில் நடிகர் பிரபாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் பங்கேற்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' .
- இப்படம் வருகிற 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது.

ஆதிபுருஷ் போஸ்டர்
இந்நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை ஒதுக்குகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
- இப்படம் 3டி முறையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராமாயண கதையில் உருவாக்கப்பட்ட 'ஆதிபுருஷ்' திரைப்படம் 3டி முறையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு உள்ளது. 'ஆதிபுருஷ்' திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ள திரையரங்குகளின் முன் இருக்கையில் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்படும் என திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'ஆதிபுருஷ்' பட விழா இன்று இரவு திருப்பதி அருகே உள்ள தாரக ராமா மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ள வரும் ரசிகர்களுக்காக மைதானத்தின் உள்ளே பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள், பிரமாண்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தை சுற்றிலும் காவி கொடிகள், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு உள்ளது. விழாவில் 200 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் 'ஆதிபுருஷ்' கதாநாயகன் பிரபாஸ் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதியில் பிரபாஸ்
இதையடுத்து 'ஆதிபுருஷ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு நடிகர் பிரபாஸ் மற்றும் பட குழுவினர் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் திருப்பதிக்கு வந்தனர். நேற்று இரவு திருமலைக்கு வந்த நடிகர் பிரபாஸுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, பிரபாஸ் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
பிரபாஸ் இன்று அதிகாலை 4 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.