என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radha-Krishnan"

    • காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.
    • யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

    1.சந்தான கோபால கிருஷ்ணர்:- யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

    2.பால கிருஷ்ணன்:- தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.

    3.காளிய கிருஷ்ணன்:- காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

    4.கோவர்த்தன தாரி:- கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

    5.ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்):- வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

    6.முரளீதரன்:- இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

    7.மதன கோபால்:- அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

    8.பார்த்தசாரதி:- அர்ஜூன னுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

    • சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
    • மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை.

    சென்னை :

    சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் 100 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் 42 சதவீத வடிகால் பணிகள் முடிந்துள்ளன.

    கடந்த இரண்டரை ஆண்டுகளில் 876 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால்கள் போடப்பட்டுள்ளன. 876 கி.மீ. பணிகள் நடைபெற்றதால் தான் 60 விழுக்காடு தண்ணீர் 48 மணி நேரத்திற்குள் வடிந்தது.

    சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை. மருத்துவ முகாம்கள் தொடரும் என்றார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார். #JayaDeathProbe #TNHealthSecretary #Radhakrishnan
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரிகள், போயஸ் கார்டன் ஊழியர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    தமிழக சுகதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் 2-வது முறையாக இன்றும் ஆஜராகி அவர் விளக்கம் அளித்தார்.


    ஆணையத்தில் ஆஜர் ஆவதற்காக காலை 10 மணியளவில் எழிலகத்துக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். காலை 10.20 மணிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்.

    பிற்பகல் 1 மணி வரை அவர் விசாரணை முடிந்து வெளியில் வரவில்லை. #JayaDeathProbe #TNHealthSecretary #Radhakrishnan
    ×