என் மலர்
நீங்கள் தேடியது "RadhaRavi"

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இன்று காலை கொல்கத்தா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி விட்டதாக உங்கள் மீது வரும் விமர்சனங்கள்?
பதில்:- நான் பல்லக்கில் பவனி வர விரும்பவில்லை. பல்லக்குக்கு தோள் கொடுக்கவே விரும்புகிறேன். இதுவே என் வேலை. நான் பின்வாங்கி விட்டதாக வரும் விமர்சனங்கள் வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும். மக்களை நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்க உள்ளேன்.
ஒரு தொகுதியில் நான் நின்றிருந்தால் தொகுதி நலன் கருதி சுயநலத்துடன் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். 40 தொகுதிகளுக்கும் 2 முறையாவது செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
கேள்வி-: திடீர் மம்தா சந்திப்பு பயணம் ஏன்?

பதில்:- நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ராதாரவி ஒரு கலைஞராக இருந்துகொண்டு அப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு பாராட்டுகள்.
பதில்:- மக்களுக்கு சாத்தியப்பட்டதை தான் தேர்தல் பிரசாரத்தில் சொல்லி இருக்கிறோம். சாத்தியமில்லாத பெரும் கனவுகளை மக்களுக்கு காட்டி மயக்க விரும்பவில்லை.
தேர்தல் பிரசாரம் செய்வதற்கு முன் சாத்தியமா என்பதை வல்லுநர்களுடன் பேசி நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க முன் வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார். #RadhaRavi #DMK #KamalHaasan



சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து ராதாரவியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார். முடியவில்லை.
இப்போது என்னிடம் வந்து இருக்கிறார். என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. உண்மை மட்டுமே இருக்கிறது.
மலேசியாவில் ‘டத்தோ’ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார்.
நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது புதுக்கோட்டையில் இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் சென்னை திரும்புவேன். சென்னை வந்ததும் ஆதாரங்களை வெளியிடுவேன்.
சின்மயி வெளியிட்டு இருக்கும் கடிதமே போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Chinmayi Sripada #RadhaRavi
பினனணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூவில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். இந்த யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி.
யூனியனுக்கு சந்தா தொகை செலுத்தாததால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வாழ்நாள் சந்தா செலுத்தி விட்டதாக சின்மயி கூறினார்.
யூனியனில் இருந்து நீக்கப்பட்டதால் டப்பிங் பேசும் வாய்ப்பும் சின்மயிக்கு கிடைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தனது வாய்ப்புகள் பறிபோக காரணமான நடிகர் ராதாரவி மீது சின்மயி புதிய புகார் தெரிவித்துள்ளார். ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். இது மலேசியாவில் வழங்கப்படும் கவுரவ பட்டம்.
ஆனால் இந்த பட்டத்தை ராதாரவி தவறாக பயன் படுத்துகிறார். அவருக்கு அப்படி ஒரு பட்டமே வழங்கப்படவில்லை என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மலேசிய நாட்டின் மெலேகோ மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் ராதா ரவிக்கு அரசு எந்த பட்டமும் வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டிருப்பதாக அரசு செயலர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ராதாரவி பயன் படுத்துவது போலி பட்டம் என்று விமர்சித்துள்ளார். சின்மயி கிளப்பி இருக்கும் இந்த புதிய சர்ச்சை மீண்டும் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #Chinmayi #Radharavis


