search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rail Bridge"

    • குறுகலான ரெயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஒரு புதுமண தம்பதி ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
    • பாலத்தில் இருந்து புதுமண தம்பதி குதிக்கும் வீடியோ உறவினரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குறுகலான ரெயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஒரு புதுமண தம்பதி ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

    அப்போது ரெயில்வே தடத்தில் திடீரென ரயில் வந்ததால் பயத்தில் செய்வதறியாது 90 அடி பள்ளத்தில் கணவன் மனைவி இருவரும் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலத்தில் இருந்து புதுமண தம்பதி குதிக்கும் வீடியோ உறவினரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.

    குறைவான வேகத்தில் ரெயில் வந்து கொண்டிருந்ததால் புதுமண தம்பதியை பார்த்து உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ஆனால் ரெயில் நிற்பதற்கு முன்பாக அவர்கள் இருவரும் பாலத்தில் இருந்து குதித்துள்ளனர்.

    ரயிலை நிறுத்திய ஓட்டுநர்கள், கீழே விழுந்த ராகுல் - ஜான்வி தம்பதியை அவர்களின் நண்பர்களுடன் இணைந்து மீட்டனர். படுகாயம் அடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஐபில் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.
    • உலகின் மிகப்பெரிய ரெயில் பாலத்தின்மீது முதன்முறையாக ரயில் இயக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் சங்கல்தான் - ரியாசியை இணைக்கும் வகையில் உலகின் மிக உயரமான சென்னாப் ரெயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டமாக முதல் ரெயில் நேற்று இயக்கப்பட்டுள்ளது. இந்த சென்னாப் ரெயில்வே பாலம் (359 மீட்டர்கள்) பாரிஸில் உள்ள உயரத்துக்கு பிரசித்தி பெற்ற ஐபில் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.

    தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனை ஓட்டம் குறித்து ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், இந்த பாலத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாகவும், சுரங்கப்பாதை எண் ஒன்றில் மட்டும் மிச்சமுள்ள மீதி வேலைகள் முடிந்ததும் இன்னும் நான்கைந்து மாதத்துக்குள் சென்னாப் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சென்னாப் பாலம், சுமார் 272 கிலோமீட்டருக்கு போடப்படும் உத்தம்பூர் -ஸ்ரீநகர் - பாரமுல்லா (USBRL ) ரெயில்வே தடத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய ரெயில் பாலத்தின்மீது முதன்முறையாக ரெயில் இயக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது. இதற்கிடையில் இந்த ரயில் பாலம் இணையும் ரியாசி மாவட்டத்தில் சமீபத்தில் பக்தர்கள் சென்ற பேருந்தின்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×