என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rainfall alert"

    • இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
    • நள்ளிரவு முதல் மழை பெய்ததை அடுத்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து இருந்தது.

    அதன்படி நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகள், சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நள்ளிரவு முதல் மழை பெய்ததை அடுத்து சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

    இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாக இருப்பதை ஒட்டி தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    • இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
    • சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது.

    வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து இருந்தது.

    இன்று அதிகாலை தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை உள்பட பத்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பத்து மாட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
    • தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியானது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், இன்று பிற்பகல் வேளையில் சென்னை ஒட்டிய பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் இன்று நள்ளிரவு மற்றும் நாளை காலை முதல் அதிகனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மெல்ல மேற்கு திசையில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்து இருந்தது. 

    • இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.
    • கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 -ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (டிசம்பர் 10) துவங்கி நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில், கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதே போல் சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது.

    நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் படி பேரிடர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

    ×