என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajya sabha"

    • ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார்.
    • அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா..." என்று தமிழில் கூறினார்.

    கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

    வக்பு மசோதா நிறைவேற்றம் உள்ளிட்டவற்றால் பாராளுமன்றம் கடந்த நாட்களில் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மதிமுக எம்.பி வைகோவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.

    வக்பு மசோதா மீதான விவாதத்தின்போது உத்தரப்பிரதேச பாஜக எம்பி சுதான்ஷூ திரிவேதி, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என பொருள்படும்படி பேசினார். இதற்கு எதிர்க்கட்சி இருக்கையில் இருதவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், சுதான்ஷூ திரிவேதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

    அப்போது ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார். அவருக்கு ஆதரவாக தமிழக எம்பிக்களும் எழுந்து குரல் எழுப்பினர்.

    அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா... என்று தமிழில் கூறிவிட்டு, சபாநாயகரை நோக்கி வைகோ குறித்து முறைப்பாடு வைக்கத் தொடங்கினார்.

    அவர் கூறியதாவது, வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர், ஆனால் இப்போது அவர் பயன்படுத்திய மொழியை பொறுத்துக்கொள்ள முடியாது. நீ தமிழ்நாட்டுல கால் வை பாக்குறேன், நீ தமிழ்நாட்டுல நுழஞ்சுடுவியா நான் பாக்குறேன் என்ற அவர் பேசுகிறார். இது ரொம்ப தப்பு என சபாநாயகரிடம் முறையிட்டார்.

    மேலும் வைகோ பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அதன்படி வைகோவின் பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.   

    • 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனைப் படைத்துள்ளோம்.
    • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகு சட்டம் நடைமுறைக்கு வரும்.

    நேற்று முன்தினம் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. மதியம் தொடங்கிய விவாதம், நள்ளிரவு வரை நடைபெற்று அதன்பின் வாக்கெடுப்பு நடைபெற்றது.

    அதேபோன்று மாநிலங்களவையிலும் நேற்று மதியம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. நேற்று 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடைபெற்றதாக சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிண் ரிஜிஜு கூறியதாவது:-

    நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நாம் ஒரு முக்கியமாக சாதனைப் படைத்துள்ளோம். 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனைப் படைத்துள்ளோம். இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது.

    இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

    • மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. வாக்களித்தனர்.
    • பா.ம.க. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. வாக்களித்தனர்.

    பா.ம.க. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடையாது.

    மாநிலங்களவையில் தமிழகத்தில் இருந்து வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை ஆதரித்து ஒற்றை ஓட்டு பதிவானது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மட்டும் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்துள்ளார்.

    • மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
    • அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.

    புதுடெல்லி:

    வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288

    வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.

    இதற்கிடையே, பாராளுமன்ற மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் , எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    • வக்பு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது.
    • அரசியலமைப்புச் சட்டத்த்துக்கும், மதச் சார்பின்மைக்கும் எதிரானது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

    விவாதத்தின்போது திமுக எம்.பி. திருச்சி சிவா மசோதாவை எதிர்த்து கடுமையாக பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    வக்பு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது. அரசியலமைப்பு சட்டத்த்துக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது. வக்பு நிர்வாகத்தையே கைப்பற்றுவதற்குத்தான் இந்த திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    அரசியல், சட்ட ரீதியாக தவறான வக்பு மசோதாவை நாங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம். மத்திய பாஜக அரசு குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைத்து சட்டத்தை இயற்றுவது ஏன்?. நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சுதந்திரத்தின்போது இது எங்கள் நாடு, இங்கேதான் இருப்போம் என்று தெரிவித்தனர்.

    அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறும் பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு மட்டும் வேறு கொள்கையை கடைபிடிக்கிறது. பாஜக அரசின் செயலால் அந்நியப்படுத்தப்படும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணருகிறார்கள்.

    கண்கள் இருந்தும் மக்கள் படும் துயரங்களை ஆளுங்கட்சியினர் பார்ப்பதில்லை. ஆளுங்கட்சியினருக்கு காதுகள் இருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சியினரின் பேச்சை கேட்பதே இல்லை. வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக சட்டத் திருத்தம் எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது.

    இவ்வாறு திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்தார்.

    • வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்காது, மேற்பார்வையிட மட்டுமே செய்யும்.
    • திருத்தப்பட்ட வக்பு மசோதா பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கோரினார்.

    தாக்கல் செய்து கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    * வக்பு வாரியத்தின் கீழ் 2004-ல் 4.9 லட்சம் சொத்துகள் இருந்தனர். இன்று 8.72 லட்சம் சொத்துகள் உள்ளன.

    * முந்தைய அரசுகளின் நிறைவேற்றப்படாத பணிகளை நிறைவேற்றுவதே வக்பு மசோதாவின் நோக்கமாகும்.

    * நாங்கள் யாருடைய மத உணர்வையும் புண்படுத்த விரும்பவில்லை.

    * வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்காது, மேற்பார்வையிட மட்டுமே செய்யும்.

    * திருத்தப்பட்ட வக்பு மசோதா பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.

    * வக்பு மசோதா கோடிக்கணக்கான ஏழை முஸ்லிம்களுக்கு பயனளிக்கும், வக்ஃப் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்.

    இவ்வாறு கிரிண் ரிஜிஜு தெரிவித்தார்.

    • தன மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் என கார்கே சவால்
    • காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன

    மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே குடும்பத்தினர், வக்பு சொத்துகளை ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அனுராக் தாகூர் குற்றசாட்டு குறித்து மாநிலங்களவையில் பேசிய கார்கே, "தன் மீது அப்பட்டமான குற்றச்சாட்டை பாஜக முன்வைத்துள்ளது.அனுராக் தாக்கூரின் பேச்சு தன்னை கடுமையாக பாதித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் ராஜினாமா செய்யத் தயார். நிரூபிக்காவிட்டால் அனுராக் ராஜினாமா செய்வாரா?

    கார்கே மீதான குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

    • பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
    • மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே, பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி ஒப்புதளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிறகு மசோதா சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிதியின் நிர்வாகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ஈடுபடவில்லை.
    • யாருக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா 2024 மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமரின் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் போது பி.எம்.கேர் நிதி நிறுவப்பட்டது.

    காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பிரதமரின் நிவாரண நிதியின் மீது ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதமர் நிவாரண நிதியின் உறுப்பினராக இருந்தார். இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்?

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ராஜீவ்காந்தி அறக்கட்டளை பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து நிதியைப் பெற்றது

    பொதுத்துறை நிறுவனங்கள் கூட அறக்கட்டளைக்கு நிதி அளித்தன. அவர்களின் காலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிதியைப் பயன்படுத்துவதை ஆராய எந்தக் குழுவும் இல்லை.

    மாறாக, பி.எம்.கேர் நிதியின் நிர்வாகத்தில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் உள்பட முதல் ஐந்து அமைச்சர்கள் அறங்காவலர்களாக உள்ளனர்.

    5 செயலாளர்களைக் கொண்ட குழு அதன் செலவினங்களை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கிறது. பி.எம்.கேர் நிதி வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசி போன்ற முக்கியமான COVID-19 உள்கட்டமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டது.

    நிதியின் நிர்வாகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ஈடுபடவில்லை. யாருக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

    காங்கிரஸ் கட்சி அதன் முந்தைய நிதி மேலாண்மை நடைமுறைகளை விளக்குமா என சவால் விடுத்தார்.

    • மக்களவையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் எழுப்பப்பட்டது.
    • மாநிலங்களவையில் பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் இன்று காலை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய அலுவல் நேரத்தில் பல்வேறு மசோதாக்கள் குறித்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    தி.மு.க. எம்.பி. வில்சன் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர், "மாநிலங்களவையில் இன்று நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும். 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ள நிலையில் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    எனவே சட்டவிதி 267-ன்கீழ் அனைத்து அலு வல்க ளையும் ரத்து செய்து தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்க அளிக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது. இதை வலியுறுத்தி தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள்.

    அப்போது மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசினார். அப்போது, கர்நாடகா மாநிலத்தில் மத ரீதியிலான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் இடம் ஒதுக்கீடு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. மத ரீதியிலான இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. கர்நாடகா காங்கிரஸ் கட்சி சட்டத்துக்கு எதிராக நடந்து வருகிறது.

    கர்நாடகா மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அரசியல் சாசனத்தை மாற்ற நினைக்கிறார். தங்கள் கட்சிக்கு சாதகமாக இட ஒதுக்கீட்டை செய்ய இருப்பது சரியானது அல்ல. இதை காங்கிரஸ் தலைவர் கார்கே ஏற்கிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்," என்றார்.

    ஜே.பி.நட்டா பேசியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் கார்கே பேசும் போது, "நட்டாவின் பேச்சுகளை ஏற்க இயலாது. இஸ்லாமியர்களுக்கு நன்மை தரும் இட ஒதுக்கீட்டை யாராலும் அகற்றி விட முடியாது," என்று கூறினார்.

    இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்குரல் கொடுத்தனர். இதனால் மாநிலங்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை இன்று 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

    அப்போது சமாஜ்வாடி எம்.பி.க்கள் எழுந்து உத்தர பிரதேசத்தில் கொலை-கொள்ளை அதிகரித்து விட்டது. அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்தார். உடனே சமாஜ்வாடி எம்.பி.க்கள் உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பிடித்தனர்.

    இதை கண்டதும் சபாநாயகர் ஓம்பிர்லா கோபம் அடைந்தார். இப்படி நடந்து கொண்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து மக்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    • உலகம் முழுவதும் விண்வெளியை அடைந்து, அதன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ஒரு கல்லறையைத் தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.
    • தலித்துகள் நம்மோட உட்கார்ந்து சாப்பிட முடியாது, கோவிலுக்குப் போக முடியாதுன்னு எந்த முஸ்லிம் சொன்னாருன்னு எங்களுக்குக் சொல்லுங்க பார்ப்போம்.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இன்று உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தின் போது குற்றம் முதல் சட்டம் வகுப்புவாத வன்முறைகள் அதிகரிப்பு குறித்து ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். 

    மகாராஷ்டிராவில் அமைந்துள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை இடிப்பது தொடர்பாக இந்து அமைப்புகள் தீவிரம் காட்டி  வந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக நாக்பூரில் கலவரம் ஏற்பட்டது.

    இதை முன்வைத்து அவையில் பேசிய சஞ்சய் சிங், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் 94 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், உங்கள் ஆட்கள் (பாஜகவினர்) நாடு முழுவதும் ஆத்திரமூட்டும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார்கள்.

    உலகம் முழுவதும் விண்வெளியை அடைந்து, அதன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ஒரு கல்லறையைத் தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.

    எந்த வரலாற்றை நீங்கள் கற்பிக்க விரும்புகிறீர்கள், தலித்துகள் முன்னாடி பானை கட்டிக்கிட்டு நடக்கணும், தலித்துகள் நம்மோட உட்கார்ந்து சாப்பிட முடியாது, கோவிலுக்குப் போக முடியாதுன்னு எந்த முஸ்லிம் சொன்னாருன்னு எங்களுக்கு சொல்லுங்க. எந்த முஸ்லிம், விலங்குகள் குளத்தில் தண்ணீர் குடிக்கலாம், ஆனால் ஒரு தலித் குடிக்க கூடாது என்று சொன்னான் என்று எனக்கு  சொல்லுங்க பார்ப்போம்.

     

    நீங்கள் வங்கதேசம்-வங்கதேசம் என்ற பாடலைத் திரும்பத் திரும்பப் பாடுகிறீர்கள். நாட்டில் நரேந்திர மோடியின் அரசு 11 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது, அமித் ஷா உள்துறை அமைச்சர் ஆக இருக்கிறார். இரு நாட்டின் எல்லை மேற்கு வங்காளத்துடனும் அசாமுடனும் உள்ளது. அப்படியிருக்க ஊடுருவல்காரர் எல்லையைக் கடந்து டெல்லிக்கு எப்படி வருகிறார்?.

    பிரதமர், ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் வசிக்கும் டெல்லி குற்றங்களின் கோட்டையாக மாறிவிட்டது. இங்குள்ள காவல்துறை நேரடியாக உள்துறை அமைச்சரின் கீழ் வருகிறது.

    பெண்கள், குழந்தைகள் மற்றும் எஸ்சி-எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பான அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் இரட்டை எஞ்சின் அரசு செயலிழந்துவிட்டதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.      

    • மேற்கு வங்க வாக்காளர் அட்டையில் இடம் பிடித்துள்ள எபிக் எண், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர் அட்டையில் இடம் பெற்றுள்ளது.
    • இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு, போலி வாக்காளர் அடையாள அட்டை எண் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதுடன், வெளிநடப்பு செய்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை {EPIC (Electoral Photo Identity Card)} தொடர்பாக குறுகிய கால விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் உங்களுடைய பரிந்துரை மிகவும் சிறந்த பரிந்துரை. இது தொடர்பாக நான் பரிசீலனை செய்வேன் என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுவேந்து சேகர் ராய் "மாநிலங்களவையில் 267 விதியின் கீழ் வழங்கப்படும் நோட்டீஸ் 176 ஆவது விதியின் கீழ் மாற்றப்படுவதற்கான முன் நிகழ்வுகள் நடந்தள்ளது. இதனால் 267 விதியின் கீழ் உள்ள நோட்டீஸை 176 விதியின் கீழ் உங்களுடைய விருப்ப அதிகாரத்தை பயன்படுத்தி குறுகிய கால விவாத்திற்கு அனுமிக்க வேண்டுகோள் வைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    அதற்கு ஜெகதீப் தன்கர் "எம்.பி.யின் திறமையை பாராட்டுகிறேன். சிறந்த பரிந்துரையை வழங்கியுள்ளார். இதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பேன்" என்றார்.

    மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள எபிக் நம்பர், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் இடம் பிடித்துள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

    வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான எபிக் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம். இந்த எண்ணை பொருட்படுத்தாமல் அதில் உள்ள தொகுதி, வார்டு ஆகியவற்றை கொண்டு மக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த விளக்கம் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×