என் மலர்
நீங்கள் தேடியது "Reading habit"
- புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள்.
- படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள்.
குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.
படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள். ஒரு குழந்தையை நேரிய வழியில் நடக்க வைப்பதற்கும் சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் பங்கு வகிப்பது புத்தகங்களே.

புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம்சிந்தனையைத் தூண்டவும், சிந்தனையைப் புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள். நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்கள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும். புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.
படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அவற்றை கூறச் செய்யலாம். கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன.
முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும். தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும்.
- வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்கும்போது புதிய புதிய சொற்கள், வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
- புத்தகம் வாசிப்பது மனதளவில் நெருக்கமாக உணர வைக்கும்.
இன்றைய டிஜிட்டல் யுகம் பொழுதுபோக்குக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பதால் பலரும் அதிலேயே மூழ்கி நேரத்தை பாழ்படுத்திக்கொள்கிறார்கள். அதனால் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வாசிப்பு பழக்கத்தை வாழ்வின் ஒரு அங்கமாக பின்பற்ற வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்காக காரணங்கள் குறித்தும், வாசிப்பு பழக்கம் ஏன் அவசியமானது என்பது குறித்தும் பார்ப்போம்.
அறிவை அளிக்கும்
ஒவ்வொரு புத்தகங்களில் இடம் பெறும் தலைப்பும் ஏதோ ஒரு வகையில் கற்பனை செய்து பார்க்கக்கூடிய பரந்த அளவிலான அறிவை வழங்குகின்றன. அறிவியல், வரலாறு, தத்துவம் பற்றிய புத்தகங்களை படிக்கும்போது அவை சார்ந்த விஷயங்களை ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும். அது சார்ந்த தேடலில் மனதை ஈடுபட வைக்கும்.
சொற்களஞ்சியம்
வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்கும்போது புதிய புதிய சொற்கள், வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தகவல் தொடர்பு திறனையும், புரிதலையும் மேம்படுத்தும்.
அழுத்தம்
புத்தகம் வாசிப்பது மனதளவில் நெருக்கமாக உணர வைக்கும். நாவல், கதை போன்றவற்றை வாசிக்கும்போது அதில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் மனதோடு பேசும் உணர்வை ஏற்படுத்திக்கொடுக்கும். மனக்கவலைகளில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க வைக்கும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் தராமல் மனதை இலகுவாக்கும். மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிடுக்கும். வாசித்து முடித்த பிறகு மனத்தெளிவை ஏற்படுத்திக்கொடுக்கும். மனம் ஓய்வெடுக்கவும் வழிவகை செய்யும்.
கவனிக்கும் திறன்
இன்றைய அவசர உலகில் கவனச்சிதறல் காரணமாக சின்ன சின்ன வேலைகளை கூட சரியாக முடிக்க முடியாமல் பலரும் தடுமாறுகிறார்கள். வாசிப்பு மீது கவனத்தை பதிக்கும்போது தேவையற்ற கவனச்சிதறல்களை தடுக்க முடியும். கவனத்தை ஒரு இடத்தில் குவிக்கும் திறன் மேம்படும்.
நினைவாற்றல்
நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை கூர்மைப்படுத்தவும் வாசிப்பு பழக்கம் உதவும். மனதை சுறுசுறுப்பாகவும், ஈடுபாட்டுடனும் வைத்திருக்க உதவும் என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
படைப்பாற்றல்
வாசிப்பு பழக்கம் புதிய யோசனைகள் மற்றும் சிந்தனைகளை மெருகேற்ற வழிவகை செய்யும். படைப்பாற்றல் திறனையும் அதிகரிக்க செய்யும். எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சிக்கலை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்பட ஊக்கப்படுத்தும்.
எழுத்தார்வம்
புத்தகம் வாசிக்கும்போது அதில் இடம்பெறும் எழுத்து நடை, வாக்கிய அமைப்பு போன்றவற்றை படிக்கும்போது அதுபோன்று எழுதும் ஆர்வம் மேலோங்கும். ஒட்டுமொத்த தகவல்தொடர்பு திறனையும் மேம்படுத்தும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆவலை தூண்டும்.
தூக்கம்
தூங்குவதற்கு முன்பு செல்போன் திரையில் பொழுதை போக்குவதற்கு பதிலாக சில நிமிடங்கள் புத்தகம் வாசிப்பது மனதை அமைதிபடுத்தும். உடலையும், உள்ளத்தையும் ஓய்வெடுப்பதற்கு தயார்படுத்தும். அதில் இடம்பெற்றிருக்கும் நல்ல கருத்துக்களை படிக்கும்போது மனம் ஆனந்தம் கொள்ளும். நன்றாக தூங்குவதற்கான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.
புதிய உலகம்
புத்தகத்தில் இடம் பெற்ற சம்பவங்கள், கதாபாத்திரங்களுடன் நம்மையும் பயணிக்க வைத்து வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லும். புதிய உலகத்திற்குள்ளும் நுழைய வைக்கும். சிலிர்ப்பூட்டும் சாகச இடங்கள், வரலாற்று நிகழ்வுகள், பயணங்களுக்குள் நம்மையும் பயணிக்க வைத்துவிடும்.
கற்றல்
வாசிப்பு என்பது தொடர்ச்சியான கற்றல் அனுபவத்தை கொடுக்கும். வயது, ஆர்வத்தை பொருட்படுத்தாமல், எப்போதும் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள தூண்டிக்கொண்டே இருக்கும். மற்றவர்களுடன் எந்தவொரு தலைப்பிலும் துணிச்சலாக கலந்துரையாடுவதற்கான தகுதியை வளர்த்தெடுக்கும்.
- தினசரி குழந்தை தூங்கப் போகும் முன் ஒர் புத்தகத்தை படித்து காட்ட வேண்டும்.
- குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதை சொல்ல வேண்டும்.
குழந்தைகளிடம் சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் அறிவை விரிவாக்கும், உலகம் பற்றிய தெளிவான பார்வையை ஏற்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஊடக பிடியில் இருந்து அவர்களை விடுவிக்கும். சரி பெற்றோர்கள் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
குழந்தைகளின் மழலைப் பருவத்தில் இருந்தே அவர்களை புத்தக வாசகராக பெற்றோர் வளர்க்க முடியம். தினசரி குழந்தை தூங்கப் போகும் முன் ஒரு சிறுவர் கதை புத்தகத்தை அவர்களுக்கு படித்துக்காட்ட வேண்டும். அல்லது பெற்றோர் தாம் படித்த கதையை கூற வேண்டும்.

குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வகையிலும் கதை சொல்ல முயல வேண்டும். இப்படிச் செய்யும் போது, குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்தகங்கள் மீது ஆர்வம் பிறக்கும்.
குழந்தைகளை என்னதான் சொல்லி வளர்த்தாலும், பெற்றோர்கள் செய்யும் செயலைப் பார்த்துதான் அவர்கள் வளர்கின்றனர். அதைத்தான் மீண்டும் செய்கின்றனர். அந்த வகையில் பெற்றோர், புத்தகம், நாளிதழ் படிப்பதாக இருந்தால் குழந்தைகளின் கண் முன் வாசிக்க வேண்டும்.
தினமும் பெற்றோர்களின் வாசிப்பு பழக்கத்தை பார்க்கும் குழந்தைகள், தாமாகவே புத்தகத்தை எடுத்து புரட்டத் தொடங்குவார்கள்.
குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்துச் சென்றால், நிறைய புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது அவர்களுக்கு ஆச்சரியமாகவும், ஆசையாகவும் இருக்கும். வீட்டுக்கு அருகே உள்ள நூலகத்துக்கு பெற்றோர் தமது குழந்தையை வாரத்துக்கு ஒருமுறையாவது கூட்டிச் சென்றால், நூலகத்தில் அமர்ந்து படிப்பவர்களை பார்த்தும் புத்தகங்களை பார்த்தும் வாசிப்பு பழக்கம் வரத் தொடங்கும்.

புத்தகத்தில் ஒரே கதையை மீண்டும் மீண்டும் படித்து காட்டுவது பெற்றோருக்கு அயர்வை ஏற்ப ஏற்படுத்தலாம். ஆனால் குழந்தை அதை விரும்பிக் கேட்க வாய்ப்பு உள்ளது. எப்படி ஒரு பாடலை திரும்பத் திரும்ப கேட்டு குழந்தைகள் உற்சாகம் அடைகிறார்களோ அதைப் போலத்தான் இதுவும் குழந்தைகள் கதையிலோ, படங்களிலோ முதன்முதலில் தவறவிட்ட விஷயங்களை கண்டுபிடிக்க விரும்புவார்கள்.
அதனால், அவர்களின் கவனத்தை பெறவும், புத்தக வாசிப்பில் சலிப்பு தட்டாமல் இருக்கவும், அவர்களுக்கு பிடித்த கதைகளை மீண்டும் சொல்லிக் காட்ட அல்லது வாசிக்க வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எந்த மாதிரியான புத்தகங்களை கொடுக்கிறோம் என்பதை போல, எந்த இடத்தில் புத்தகம் படிக்கிறோம் என்பதும் முக்கியம். புத்தகம் வாசிக்கும்போதோ அல்லது குழந்தைக்கு கதை சொல்லும்போதோ, அறையில் விளையாட்டுப் பொருட்கள், இரைச்சல் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கவனம் முழுவதும் புத்தகத்தின் மேல் இருப்பது போன்ற சூழலை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்.
குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற எளிய, பெரிய எழுத்தில், படங்கள் அதிகம் கொண்ட புத்தகங்களை ஆரம்பத்தில் அவர்களுக்கு பெற்றோர் படிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தால் அதை பாராட்டி, பரிசு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.