என் மலர்
நீங்கள் தேடியது "Remarriage"
- திருமணத்தை உலக மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
- ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை இருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற பாரபட்சம் காட்டுவது தவறாகும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுக்கூர். பிரபல வக்கீல்.
இவரது மனைவி டாக்டர் ஷீனா. மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். முஸ்லீம் தம்பதியான இவர்கள் இருவரும் கடந்த 1994-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
முஸ்லீம் ஷரியத் சட்டப்படி இவர்களின் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். முஸ்லீம் ஷரியத் சட்டப்படி சுக்கூர்-ஷீனா தம்பதியின் அனைத்து சொத்துக்களும் அவர்களின் மகள்களுக்கு கிடைக்காது. 3-ல் 2 பங்கு சொத்துக்கள் மட்டுமே கிடைக்கும்.
இதற்காக சிறப்பு திருமண சட்டப்படி சுக்கூர்-ஷீனா தம்பதியினர் மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுபற்றி சுக்கூர் கூறியதாவது:
முஸ்லீம் ஷரியத் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் சொத்தில் 3-ல் 2 பங்கு மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள சொத்துக்கள் அனைத்தும் அவர்களின் சகோதரர்களுக்கு கிடைத்து விடும்.
ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை இருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற பாரபட்சம் காட்டுவது தவறாகும். இதை என்னால் ஏற்க முடியவில்லை.
எனவே நான் 1954-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு திருமண சட்டத்தின் மூலம் நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். அந்த திருமணத்தை உலக மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இதன்மூலம் எங்கள் மகள்களுக்கு எங்களின் அனைத்து சொத்தும் முழுமையாக கிடைக்கும். இதற்காகவே இந்த திருமணத்தை செய்ய உள்ளோம்.நான் 2 முறை விபத்தில் சிக்கி உள்ளேன். எங்களுக்கு பிறகு எங்கள் மகள்களுக்கு எங்களின் அனைத்து சொத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்த முடிவை எடுத்துள்ளோம். இதனை செயல்படுத்த மகளிர் தினத்தை விட சிறந்த நாள் இருக்க முடியாது என்பதால் அந்த நாளை தேர்வு செய்தோம் என்றார்.
- திருமணத்திற்கு பிறகு கணவரின் குடும்ப பெயரை தன்னுடன் இணைத்து கொண்டார்
- தனது பதிலுடன் ஒரு நகைச்சுவை எமோஜியை இணைத்து பதிவிட்டார் சமந்தா
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் 36 வயதாகும் சமந்தா (Samantha). இவரது இயற்பெயர் சமந்தா ரூத் பிரபு.
4 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் அவார்டுகள் (Filmfare Awards South) வென்ற சமந்தா, 2010ல் "யே மாயா சேஸவே" (Ye Maaya Chesave) எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜுனாவின் (Akkineni Nagarjuna) மகன் அக்கினேனி நாக சைதன்யா (Akkineni Naga Chaitanya).
சமந்தாவிற்கு அவருடன் ஏற்பட்ட நட்பு வளர்ந்து, இருவரும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சமந்தா அக்கினேனி (Samantha Akkineni) என மாற்றம் செய்து கொண்டார்.
ஆனால், 2021 ஜூலை மாதம், சமூக வலைதளங்களில் தனது பெயரில் "அக்கினேனி" எனும் கணவர் குடும்ப பெயரை அவர் நீக்கினார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.
சமந்தா-சைதன்யா திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
2021 அக்டோபர் மாதம், இருவரும் விவாகரத்து செய்தனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் முனைப்புடன் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சமந்தா, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அவரது அதிகாரபூர்வ கணக்கில் "என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" (Ask Me Anything) எனும் அமர்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரு பயனர் அவரிடம், "மீண்டும் திருமணம் செய்து கொள்ள நீங்கள் நினைக்கவில்லையா?" என கேட்டார்.
அதற்கு சமந்தா, "அது (மறுமணம்) ஒரு தவறான முடிவாகி விடும் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன" என பதிலளித்தார். அத்துடன் ஒரு நகைச்சுவை எமோஜி பதிவிட்ட சமந்தா, 2023 வருட விவாகரத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களையும் இணைத்து பதிவிட்டார்.
சமந்த இணைத்துள்ள புள்ளி விவரங்களில் முதல் திருமணத்தில் விவாகரத்து 50 சதவீத அளவில் நடைபெற்றதாகவும், 2-ஆம் திருமணங்களில் 67 சதவீதம், 3-ஆம் திருமணங்களில் 73 சதவீதம் எனவும் மணமுறிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.
- பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார்.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் 76 வயதான ராம் போரிச்சா. இவரது 52 வயது மகன் பிரதாப், அவரது மனைவி ஜெயா, மகன் ஜெய்தீப் ஆகியோர் ஒரு வீட்டிலும், அவர்களது பக்கத்து வீட்டில் ராம் போரிச்சாவும் வசித்து வந்தனர். வெவ்வேறு வீடுகளில் வசித்தாலும், அவர்களின் தந்தைக்கான உணவு பிரதாப்பின் வீட்டிலிருந்தே சென்றது.
ராம் போரிச்சாவின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அன்றிலிருந்து தனியாக வசித்து வரும் ராம் போரிச்சா, மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதை அவர் தனது மகன் பிரதாப்பிடம் கூறினார். ஆனால் மகனும் அவனது குடும்பமும் இதற்கு மறுத்துள்ளது. திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.

இதனால் கோபமடைந்த ராம் போரிச்சா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொடூரத்தைச் செய்தார். பிரதாப் தனது தந்தையிடம் சென்று தேநீர் குடிக்க வருமாறு அழைக்க சென்றார்.
ஏற்கனவே துப்பாக்கியுடன் காத்திருந்த ராம் போரிச்சா, அறையை பூட்டிவிட்டு, இரண்டு முறை மகனை சுட்டார். துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்ட மருமகள், மாமா ராம் போரிச்சா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தனது கணவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார்.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார். இதை உணர்ந்த ஜெயா, உடனடியாக வெளியே ஓடி கதவைப் பூட்டினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, பால் வாங்க சென்றிருந்த மகன் ஜெய்தீப் திரும்பி வந்ததும் நடந்ததை கூறினார்.
ஜெய்தீப் ஜன்னல் வழியாக தனது தாத்தா வீட்டிற்குள் எட்டிப் பார்த்தபோது, தனது தந்தை இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் தாத்தா அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கதவுகளைத் திறந்து ராம் போரிச்சாவைக் கைது செய்தனர். பிரதாப்பின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விசாரணையின் போது, தனது மகனைக் கொன்றதற்கு வருத்தப்படவில்லை என்றும், தனது மகன் பல நாட்களாக தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும் ராம் போரிச்சா தெரிவித்தார்.