என் மலர்
நீங்கள் தேடியது "Renault"
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
- தற்போது ரெனால்ட் இந்தியா நிறுவனத்திற்கு மிகப் பெரும் தொகை முதலீடாக கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் நிலைமை சற்று தடுமாற்றத்திலேயே இருந்து வருகிறது. எனினும், இந்த நிலை விரைவில் மாறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெனாட் மற்றும் நிசான் நிறுவனங்களின் இந்திய பிரிவுக்கு 500 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த முதலீட்டின் மூலம் CMF-B பிளாட்ஃபார்மை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள முடியும். இது சாத்தியமாகும் பட்சத்தில் சமீபத்தில் நிறுத்தப்பட்ட டஸ்டர் மாடல் இந்தியாவில் மீண்டும் களமிறங்கலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் தங்களின் சர்வதேச தயாரிப்புகளை இந்தியாவுக்கு CBU முறையில் கொண்டுவரலாம். CMF பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முற்றிலும் புதிய டஸ்டர் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

எதிர்காலத்தில் இந்த காரின் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவுக்காக மாற்றப்படும் CMF-B பிளாட்ஃபார்ம் பெட்ரோல், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வசதியை வழங்கும். அந்த வகையில் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் இந்தியாவில் 2024 அல்லது 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். நீண்ட இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் ரெனால்ட் நிறுவனம் அர்கானா கிராஸ்ஒவர் கூப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
இந்திய சாலைகளில் ரெனால்ட் நிறுவனம் அர்கானா மாடலின் சோதனைகளை ஏற்கனவே துவங்கி மேற்கொண்டு வருகிறது. புதிய 500 மில்லியன் டாலர்கள் முதலீடு பற்றி ரெனால்ட் மற்றும் நிசான் தரப்பில் இருந்து எந்த விதமான தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் மாடல் இந்தியாவில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்திய சந்தையில் டஸ்டர் மாடல் ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல்களில் ஒன்று ஆகும்.
பிரென்ச் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் தனது டஸ்டர் மாடலை கொண்டு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் இந்தியாவில் அமோக விற்பனையை பதிவு செய்து வந்தது. எனினும், போதுமான அப்கிரேடுகள் இன்றி இதன் விற்பனை சரிய தொடங்கியது. பின் இந்த கார் இந்திய சந்தையில் இருந்து திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் வெளியான தகவல்களின் படி ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டஸ்டர் மாடலை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெனால்ட் நிறுவனம் இந்தியா கொண்டு வரும் டஸ்டர் மாடல் 7 சீட்டர் வேரியண்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

எனினும், இது பற்றிய மற்ற தகவல்களில் ரெனால்ட் தனது டஸ்டர் மாடலை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யாது என்றே கூறப்படுகிறது. இதுவரை புதிய டஸ்டர் மாடல் இந்தியா வருவது பற்றி ரெனால்ட் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. டஸ்டர் மாடல் மீண்டும் இந்தியா வரும் பட்சத்தில் அது 5-சீட்டர் வேரியண்டாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முந்தைய தகவல்களின் படி ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 4 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இதன் படி CMF-B பிளாட்ஃபார்மில் உருவாகும் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இது உண்மையாகும் பட்சத்தில் அடுத்த தலைமுறை டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
- ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மீண்டும் டஸ்டர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டஸ்டர் மட்டுமின்றி முற்றிலும் புதிய 7 சீட்டர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்யவும் ரெனால்ட் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை டஸ்டர் மாடலை 2024-25 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. 500 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் புது கார் வெளியீடுகளில் ரெனால்ட் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது க்விட், டிரைபர், கிக்ஸ் மற்றும் கைகர் போன்ற மாடல்களை ரெனால்ட் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
புதிய முதலீட்டின் மூலம் ரெனால்ட் நிறுவனம் CMF-B பிளாட்ஃபார்மை இந்தியாவுக்கு கொண்டு வரும் என தெரிகிறது. முற்றிலும் புது டஸ்டர் மட்டுமின்றி ரெனால்ட் நிறுவனம் தனது பிக்ஸ்டர் கான்செப்ட்-ஐ தழுவி 7 சீட்டர் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆர்கிடெக்ச்சர் கொண்டு ரெனால்ட் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் என தெரிகிறது.

இந்திய சந்தையில் டஸ்டர் மாடல் ரெனால்ட் நிறுவனத்திற்கு பிரீமியம் பிராண்டு பெயரை பெற்றுத் தந்தது. பின் இதே நிலையை தக்க வைத்துக் கொள்ளும் பணியை நிசான் டெரானோ எடுத்துக் கொண்டது. மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அறிமுகமான முதல் மாடல்களில் ஒன்றாக இவை இருந்தன. இந்த முறை புதிய தலைமுறை டஸ்டர் மாடல் கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர் என ஏராள கார்களின் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.
CMF-B ஆர்கிடெக்ச்சர் இந்திய சந்தை மற்றும் வளரும் நாடுகளுக்காக மாற்றப்படும். இதற்கான உற்பத்தி பணிகள் தமிழ் நாட்டில் உள்ள ஆலையில் நடைபெறும். புதிய டஸ்டர் மாடல் பவர்டிரெயின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், தற்போதைய குறைந்த விலை கார்களில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின், இதே என்ஜினின் டர்போ வெர்ஷன் வழங்கப்படுகிறது.
- ரெனால்ட் இந்தியா நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் இந்த சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.
ரெனால்ட் நிறுவன கார்களை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி 2023 மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது. இந்த சலுகைகள் தள்லுபடி, எக்சேன்ஜ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. சலுகைகள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுபடுகிறது. கிடைக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் கார்ப்பரேட் மற்றும் ஊரக தள்ளுபடி உள்ளிட்டவைகளையும் பெற முடியும்.
சலுகைகளை பொருத்தவரை ரெனால்ட் டிரைபர் வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் வரையிலான தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும்), ரூ. 25 ஆயிரம் வரை எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் பலன்கள் (தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும்) வழங்கப்படுகிறது. இதுதவிர விவசாயிகள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ரூ. 5 ஆயிரம் வரை பலன்களை பெறலாம்.

இத்துடன் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இது RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான சலுகைகளின் ரெனால்ட் டிரைபர் மாடலுக்கே அதிக பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கிறது. இதில் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு மட்டும்) வழங்கப்படுகிறது.
இத்துடன் RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 57 ஆயிரம் வரையிலான பலன்கள் மொத்தமாக வழங்கப்படுகிறது. ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு மட்டும்), ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ. 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் வரை ஊரக பலன்கள் வழங்கப்படுகிறது. மேலும் க்விட் காரை வாங்குவோருக்கும் RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ரெனால்ட் நிறுவனம் பிப்ரவரி 2023 மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
- இந்த சலுகைகள் வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்க பிப்ரவரி 2023 மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இந்த முறை கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 62 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. மேலும் இவை ஒவ்வொரு மாடல், வேரியண்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.
சலுகை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகள், சார்பன்ச் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஊரக பலன்களின் கீழ் ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இத்துடன் RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். சமீபத்தில் தான் ரெனால்ட் நிறுவனம் தனது கார்களில் பிஎஸ்6 ஸ்டெப் 2 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

ரெனால்ட் டிரைபர் மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 62 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இவை வாகன குறியீட்டு எண்ணிற்கு ஏற்ப வேறுபடும். அந்த வகையில் வாகன குறியீட்டு எண் 2022 மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன.
வாகன குறியீட்டு எண் 2023 வாங்கும் போது ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள் மற்றும் ரூ. 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சீரிசில் அதிநவீன மாடலாக பிஎஸ்6 ஃபேஸ் 2 வாங்கும் போது ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகையும், 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன.
ரெனால்ட் கைகர் வாகன குறியீட்டு எண் 2022 மற்றும் 2023 வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும்), ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன. இதே சீரிசில் பிஎஸ்6 ஃபேஸ் 2 வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் குவிட் வாகன குறியீட்டு எண் 2022 மாடலை வாங்கும் போது ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன. இதே காரின் பிஎஸ்6 ஃபேஸ் 2 வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட்பலன்களாக வழங்கப்படுகின்றன.
- ரெனால்ட்-நிசான் நிறுவனங்கள் கூட்டணியில் பல்வேறு புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
- புதிய கார் மாடல்களில் ஏ பிரிவு எலெக்ட்ரிக் வாகனங்களும் இடம்பெற்றுள்ளன.
ரெனால்ட்-நிசான் கூட்டணியின் கீழ் இந்திய சந்தையில் ஆறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய கார்களில் நான்கு சி பிரிவு எஸ்யுவி-க்கள் மற்றும் இரண்டு ஏ பிரிவு எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற இருக்கின்றன. இவற்றில் எலெக்ட்ரிக் வாகனங்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் இரு நிறுவனங்களுக்கும் மூன்று மாடல்கள் உள்ளன.
புதிய கார்கள் குளோபல் காமல் மாட்யுல் (CMF) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகின்றன. அனைத்து கார்களும் அதிகளவு உள்நாட்டு உபகரணங்களை கொண்டிருக்கும். மேலும் சென்னையில் உள்ள கூட்டணி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த குழுமம் சார்பில் புதிய திட்டத்திற்காக ரூ. 3 ஆயிரத்து 500 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இதுதவிர ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலை மறுசுழற்சி செய்யப்பட்ட எரிசக்தியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் இந்த நிறுவனம் ரெனால்ட்-டிரைபர் சார்ந்த நிசான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்து இருந்தது.
"தமிழ் நாட்டில் ரெனால்ட்-நிசான் கூட்டமைப்பு உற்பத்தி மற்றும் டிசைன் பிரிவு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழ் நாடு அரசு மற்றும் கூட்டணிக்கு இது மிக முக்கியமான மற்றும் அதிக மதிப்பு கொண்ட உறவு ஆகும். இதன் மூலம் மாநிலத்தில் நேரடியாக 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் ஆட்டோமோடிவ் தலைநகராக தமிழ் நாடு தொடர்ந்து நீடிக்கும்."
"ஆட்டோமொபைல் உற்பத்தி, ஆட்டோ உபகரணங்கள் மற்றும் டிசைன் உள்ளிட்டவைகளுக்கான முக்கிய பகுதியாக தமிழ் நாடு மாறும். தமிழ் நாட்டில் ரெனால்ட்-நிசான் கூட்டணியின் நவீனமயமாக்கல் தொடர்பான புதிய முதலீட்டின் கீழ் துவங்க இருக்கும் திட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏறப்டுத்தி இருக்கிறது. இது மேக் இன் தமிழ் நாடு மற்றும் மேக் இன் இந்தியா ஃபார் தி வொர்ல்டு திட்டத்தின் கீழ் வருகிறது." என தமிழ் நாடு அரசின் தொழிற்சாலைகள் பிரிவு கூடுதல் மூத்த ஆணையர் எஸ் கிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய இ-ஸ்பேஸ் மாடல் ஐந்து மற்றும் ஏழு இருக்கை லே-அவுட்களில் கிடைக்கும்.
- சர்வதேச சந்தையில் புதிய ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாக இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எஸ்யுவி மாடலின் முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஆறாவது தலைமுறை மாடலாக உருவாகி வரும் ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் வரும் மாதங்களில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரெனால்ட் இ-ஸ்பேஸ் கார் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.

புதிய இ-ஸ்பேஸ் மாடல் எம்பிவி பாடி ஸ்டைல் கொண்டிருக்கிறது. அளவில் இந்த கார் 4.72 மீட்டர் நீளம், உள்புறம் 2.48 மீட்டர் நீளமாக உள்ளது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இ-ஸ்பேஸ் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் சி வடிவ டிஆர்எல்-கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர இந்த எஸ்யுவி மாடல் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், ஃபிளாட் ரூஃப்லைன், ஷார்க் ஃபின் ஆண்டெனா கொண்டிருக்கிறது.
ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் மைல்டு அல்லது ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த எஸ்யுவி மாடல் 1.2 லிட்டர் அல்லது 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவை முறையே 140 ஹெச்பி பவர், 200 ஹெச்பி என வெவ்வேறு செயல்திறன் வெளிப்படுத்தும் என தெரிகிறது.
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.
- புதிய டஸ்டர் மாடல் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. 2013 வாக்கில் முதல் தலைமுறை டஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்திய சந்தையில் இதன் இரண்டாவது தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை. அந்த வகையில், மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் 2025 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஸ்பை படங்களின் படி மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் தோற்றத்தில் டேசியா பிக்ஸ்டர் கான்செப்ட் எஸ்யுவி போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் தெளிவாக காட்சியளிக்காத நிலையில், இதில் மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், சதுரங்க வடிவிலான ஃபிளாட் பொனெட் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

பக்கவாட்டு பகுதிகளில் டஸ்டர் மாடலில் புல்-டைப் டோர் ஹேண்டில்களை கொண்டிருக்கிறது. இதன் ரியர் டோன் ஹேண்டில்கள் சி பில்லரில் இண்டகிரேட் செய்யப்பட்டு உள்ளது. மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடலில் தொடர்ந்து சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்களே வழங்கப்பட்டு இருக்கின்றன.பின்புறம் பூமராங் வடிவம் கொண்ட டெயில் லேம்ப், டுவின் பாட் ஸ்பாயிலர் உள்ளது.
புதிய ரெனால்ட் டஸ்டர் மாடல் CMF-B பிளாட்ஃபார்மில் அதிகளவு உள்நாட்டிற்கு ஏற்ற மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த கார் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் ஐந்து இருக்கைகள் வழங்கப்பட உள்ளன. இதே காரின் 7 சீட்டர் வெர்ஷனும் உருவாக்கப்படுகின்றன.
Photo Courtesy: cochespias
- ரெனால்ட் நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 4.8 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும்.
- ரெனால்ட் நிறுவனம் தனது கார்களை உலகின் 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. பத்து லட்சமாவது யூனிட்-ஆக ரெனால்ட் கைகர் ரேடியன்ட் ரெட் நிற மாடல் அமைந்தது. இந்த கார் சென்னையில் உள்ள ரெனால்ட் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.
இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் குவிட், கைகர் மற்றும் டிரைபர் என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
மேலும் ரெனால்ட் நிறுவனம் தனது கார்களை SAARC, ஆசிய பசிபிக், இந்திய பெருங்கடல், தென்னாப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா என 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

"இந்திய சந்தையில் பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தி எனும் மைல்கல் ரெனால்ட் நிறுவனத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்திய சந்தைக்கு நாங்கள் கொடுக்கும் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாக அமைந்துள்ளது."
"எங்களது வாடிக்கையாளர்கள், டீலர்கள், ஊழியர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் தொடர்ந்து சுவார்ஸயம் நிறைந்த வாகனங்களை அறிமுகம் செய்து, எங்களது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பணிகளை மேற்கொள்வோம்," என்று ரெனால்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் மமலிப்பலே தெரிவித்தார்.
- சர்வதேச சந்தையில் இது ரெனால்ட் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் ஆகும்.
- ரெனால்ட் ரஃபேல் மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் உள்ளது.
ரெனால்ட் ரஃபேல் எஸ்யுவி மாடல் 54-வது பாரிஸ் ஏர் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது ரெனால்ட் நிறுவனத்தின் பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் ஆகும். 1930 முதல் விமான உற்பத்தி பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ரஃபேல் பெயர் பயன்படுத்தப்படுகிறது.
1934-ம் ஆண்டு முதல் ரஃபேல் விமானம் கௌட்ரான் ரெனால்ட் உற்பத்தி செய்தது. இந்த மாடல் C460 பெயர் கொண்டிருக்கிறது. ஆஸ்ட்ரல் மற்றும் இ-ஸ்பேஸ் போன்ற ரெனால்ட் வாகனங்களின் பிளாட்ஃபார்மில் ரஃபேல் உருவாக்கப்படுகிறது. புதிய எஸ்யுவி மாடல் ஃபாஸ்ட்பேக் வடிவம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் கிளட்ச் இல்லா ஹைப்ரிட் பவர்டிரெயின் உள்ளது.

சர்வதேச சந்தையில் இது ரெனால்ட் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் ஆகும். இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், 2024 வாக்கில் இந்த மாடல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த காரின் முன்புறம் பெரிய கிரில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு, ரெனால்ட் லோகோ கொண்டிருக்கிறகது.
இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், பொனெட்டில் இரண்டு கேரக்டர் லைன்கள், பொனெட் கிளாம்ஷெல் யூனிட் போன்று காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பரில் கூர்மையான கிரீஸ்கள், பூமராங் வடிவ எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ஸ்போர்ட் ரூஃப் ஸ்பாயிலர், பின்புறம் எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட்டில் ரெனால்ட் லோகோ மற்றும் அழகிய ரஃபேல் பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது.
முற்றிலும் புதிய ரெனால்ட் ரஃபேல் மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இவை ஒருங்கிணைந்து 194 ஹெச்பி பவர், பெட்ரோல் என்ஜின் மட்டும் 127 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இத்துடன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- ரெனால்ட் நிறுவன கார் மாடல்களின் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.
- லிமிடெட் எடிஷன் என்பதால் கார்களின் 300 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது குவிட், கைகர் மற்றும் டிரைபர் மாடல்களின் அர்பன் நைட் லிமிடெட் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்களின் விலை இவற்றின் ஸ்டான்டர்டு வேரியண்ட்களை விட அதிகம் ஆகும்.

லிமிடெட் எடிஷன் என்பதால், இந்த காரின் ஒவ்வொரு மாடலிலும் 300 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அர்பன் நைட் லிமிடெட் எடிஷன் கார்கள் ஸ்டெல்த் பிளாக் வெளிப்புற நிறமும், ஸ்டார்டஸ்ட் சில்வர் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.

இத்துடன் ஸ்மார்ட் மிரர் மாணிட்டர், மேம்பட்ட ஆம்பியண்ட் லைட்டிங், இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கஃப் பிளேட், படில் லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. ரெனால்ட் குவிட் அர்பன் நைட் லிமிடெட் எடிஷன் மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 999 வரையிலும், கைகர் மற்றும் டிரைபர் மாடல்களின் லிமிடெட் எடிஷன் மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 வரையிலும் அதிகரித்து இருக்கிறது.
- புதிய டஸ்டர் மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
- புதிய டஸ்டர் மாடல் மிட் சைஸ் எஸ்.யு.வி. மாடல்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும்.
ரெனால்ட் நிறுவனம் தனது முற்றிலும் புதிய டஸ்டர் எஸ்.யு.வி.-யை நவம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டஸ்டர் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த மாடல் 2025 ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
புதிய டஸ்டர் மாடலில் எண்ட்ரி லெவல் 120 ஹெச்.பி. பவர் திறன் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 140 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் என மூன்றுவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை வெளியானதில் சக்திவாய்ந்த டஸ்டர் மாடலாக இது இருக்கும்.
இதுதவிர முற்றிலும் புதிய ரெனால்ட் டஸ்டர் மாடலின் மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட வெர்ஷனும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இது பிக்ஸ்டர் எஸ்.யு.வி. என்று அழைக்கப்படலாம். இந்த கார் அடுத்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே புதிய டஸ்டர் மாடல் 2025-ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இது தற்போது எஸ்.யு.வி. சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.