என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Renuka Desai"
- ரஷ்யாவை சேர்ந்த மாடல் லெஷ்னேவா என்பவரை 3-வதாக பவன் கல்யாண் திருமணம் செய்துள்ளார்.
- பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணுகா தேசாய் குறித்து ரசிகர்கள் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில துணை முதல் மந்திரி நடிகர் பவன் கல்யாண் நந்தினி என்பவரை 1997-ல் திருமணம் செய்தார். அந்த திருமணம் 2008-ல் விவாகரத்தில் முடிந்தது.
பின்னர் அவர் நடிகை ரேணு தேசாயை 2009-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அகிரா நந்தன் மற்றும் ஆத்யா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். 2012-ல் பவன் கல்யாண் ரேணுகா தேசாய் இருவரும் பிரிந்தனர்.
ரஷ்யாவை சேர்ந்த மாடல் லெஷ்னேவா என்பவரை 3-வதாக பவன் கல்யாண் திருமணம் செய்துள்ளார். ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பவன் கல்யாண் மாநிலத்தில் துணை முதல் மந்திரியாக உள்ளார்.
இதனை பவன் கல்யாண் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இன்னொருபுறம் பவன் கல்யாணை விமர்சிப்பவர்களுக்கு எதிரான கருத்துகளும் எல்லை மீறி அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் சமீப நாட்களாக பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணுகா தேசாய் குறித்து ரசிகர்கள் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் ரேணுகாவின் இன்ஸ்டா பதிவொன்றில் கமெண்ட் செய்த பவன் கல்யாண் ரசிகர் ஒருவர், "நீங்க இன்னும் சற்று பொறுமையுடன் இருந்திருக்க வேண்டும் அண்ணி. கடவுள் போன்ற ஒருவரை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.
அநேகமாக நீங்க அவரது மதிப்பை இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் குழந்தைகள் பவன் கல்யாணுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ரேணுகா தேசாய், "ஒரு துளி அறிவு உங்களுக்கு இருந்திருந்தால், இப்படி ஒரு முட்டாள்தனமான கருத்தை கூறியிருக்க மாட்டீர்கள்.
என்னை விட்டுச் சென்று, மறுமணம் செய்துகொண்டது அவர்தான், நான் அல்ல. தயவுசெய்து இதுபோன்ற கருத்துகளை தவிர்க்கவும். அவை என்னை மட்டுமே அசிங்கப்படுத்துகின்றன" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்