search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revanna"

    • மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது.
    • தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ்.

    கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

    தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது.

    மேலும் அதில், குற்றவாளி குறித்த தகவல்களை அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது.

    முன்ஜாமின் கோரி பிரஜ்வல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, கர்நாடகாவில் மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு பாதுகாக்கிறது
    • பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்

    கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

    தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இதுதொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு பாதுகாக்கிறது. அவர் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம். அவர் இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும்.

    பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் உள்ளன. இந்த விவகாரம் தெரிந்தும் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    ராகுல்காந்தி கடிதம் தொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான சமீபத்திய வழக்கு இந்திய தேசத்தையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவது நமது சட்ட அமைப்பில் நம்பிக்கையைப் பேணுவதற்கு முக்கியமானது

    பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று வலியுறுத்தி ராகுல் காந்தி எனக்கு கடிதம் எழுதியுள்ளார். நியாயமான செயல்முறையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆபாச வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி போலீசார் ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. குழுவில் இடம்பெற்றுள்ள மைசூரு போலீஸ் சூப்பிரண்டு சீமாலட்கர் தலைமையிலான போலீசார் ஹோலே நரசிப்பூர் தாலுகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து படுவலஹிப்பே கிராமத்தில் உள்ள ரேவண்ணாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு இருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை சேகரித்தனர்.

    மேலும் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் கன்னிகடா மற்றும் கமேன ஹள்ளி அருகே உள்ள மற்ற 2 பண்ணை வீடுகளுக்கும் சென்று எஸ்.ஐ.டி. போலீசார் அங்கும் விசார ணை மேற்கொண்டனர். ஆபாச வீடியோவில் உள்ள இடமும், இதுவும் ஒன்றா என்றும் விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த ஊழியர்களிடம் சிலரின் போட்டோக்களை காட்டி எஸ்.ஐ.டி. போலீசார் இவர்களை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் இல்லை என்று பதில் அளித்தனர்.

    பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரும், பிரஜ்வாலுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம் என்றும், அவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று சிறப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.

    • பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு பாதுகாக்கிறது.
    • பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

    தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இதுதொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு பாதுகாக்கிறது. அவர் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம். அவர் இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும்.

    பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் உள்ளன. இந்த விவகாரம் தெரிந்தும் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • பிரஜ்வல் வீட்டில் வேலைப் பார்த்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேவண்ணா மீது வழக்கு.
    • தற்போது பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக அவரது மகன் புகார் அளித்துள்ள நிலையில், ஆட்கடத்தல் வழக்குப்பதிவு.

    கர்நாடகா மாநிலத்தில் மக்களவை எம்.பி.யாக உள்ள தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது வீட்டிடில் வேலைப்பார்த்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த புகார் தொடர்பாக தன்னை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக ரேவண்ணா நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கக்கூடிய பிரிவில்தானே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு ஏன் முன் ஜாமின் மனு தாக்கல் செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவர் முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார்.

    இந்த நிலையில் தனது தாயார் கடத்தப்பட்டுள்ளதாக ரேவண்ணா மீது இளைஞர் ஒருவர் மைசூரு கே.கே.ஆர். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரேவண்ணா அழைத்ததாக தனது தாயாரை அவரது உதவியாளர் அழைத்துச் சென்றார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் போலீசார் ஆட்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு ரேவண்ணா செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    • தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு.
    • பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக புகார்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவன்னா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்ணை பணிக்கு அமர்த்தியதாக ரேவன்னா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    முன்னாள் பிரதமர் தேகவுடாவின் மகன் மற்றும் பேரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்துக்காக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டு உள்ளார். #kumarasamy #Sumalatha

    பெங்களூரு:

    நடிகை சுமலதா பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்த கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா, “கணவர் இறந்து 6 மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் அவரது மனைவி சுமலதா தேர்தலில் போட்டியிட வேண்டுமா?” என்று கூறினார்.

    மந்திரி ரேவண்ணா கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடகத்தில் குறிப்பாக மாண்டியா தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


    ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்தவர்களே, நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவோம் என்று ஆவேசமாக கூறி வருகிறார்கள். இது ஜே.டி.எஸ். கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாண்டியா தொகுதியில் தனது மகன் நிகில் குமாரசாமி வெற்றிக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று குமாரசாமி மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்துக்காக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டு உள்ளார்.

    இது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்து, யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் ரேவண்ணா சார்பில் நான் இந்த மன்னிப்பை கேட்கிறேன்.

    எங்கள் குடும்பம், சாமானிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அவமரியாதை செய்யாது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு, நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உதவி செய்து வந்திருக்கிறேன்.

    இது பற்றி எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மந்திரி ரேவண்ணா பேசும்போது, எச்சரிக்கையுடன் பேசி இருந்தால் சர்ச்சை ஏற்பட்டு இருக்காது. ஊடகங்கள் சென்று அவரிடம் கருத்து கேட்டபோது, அவர் வாய் தவறி கருத்து தெரிவித்து விட்டார்.

    மாண்டியா தொகுதி வி‌ஷயத்தில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை. குதிரை பேர விவகாரத்தில் வெளியான ஆடியோ உரையாடல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுஅமைக்கப்படும். 15 நாட்கள் தாமதமானால் என்ன ஆகிவிடும்.

    இந்த வி‌ஷயத்தில் அதிகாரிகள் உரிய முடிவு எடுப்பார்கள். ஆளுங்கட்சிகளின் எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வி‌ஷயத்தில் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரமேஷ் ஜார்கிகோளியை பா.ஜனதாவை சேர்ந்த சிவன்னகவுடா நாயக் சந்தித்து பேசியது பற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை. எனக்கும், ரமேஷ் ஜார்கிகோளிக்கும் இடையே உள்ள நல்லுறவு நன்றாகவே உள்ளது.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். நான் மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumarasamy #Sumalatha

    ×