என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohingya Muslims"

    • மியான்மாரில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலில் அகதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்
    • தாங்கள் எடுத்துச்சென்ற சொற்ப உடைமைகள் சிதறிக்கிடக்க அதன் அருகே அவர்களின் உடல்கள் குவியலாகக் கிடக்கின்றன.

    ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மாரில் இருந்து சிறுபான்மை மக்களான ரோகிங்கியாமுஸ்லிம்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். மத ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் அதிகமானோர் வங்காள தேசத்தில் குடியேறி வருகின்றனர்.

     

    2017-ம் ஆண்டிலிருந்து இதுவரை 7.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாகத் தப்பி சென்றுள்ளனர். மியான்மாரில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலில் அகதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

    இந்த தாக்குதல் பற்றிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தாங்கள் எடுத்துச்சென்ற சொற்ப உடைமைகள்  சிதறிக்கிடக்க அதன் அருகே அவர்களின் உடல்கள் குவியலாகக் கிடக்கின்றன.

    இதில் உயிர் தப்பிய 3 பேர் கூறும்போது, 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் எனத் தெரிவித்து உள்ளனர். எனினும், இந்த வீடியோ எடுக்கப்பட்ட சரியான தேதி உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    மியான்மாரில் இருந்து முஸ்லிம் சிறுபான்மையினரான ரோகிங்கியாக்கள் படகுகளில் தப்பிச் சென்றபோது, நப் ஆற்றில் படகுகள் கவிழ்ந்தும் பலர் உயிரிழந்து உள்ளனர். இதனை வங்காளதேச ஊடகங்களும் தெரிவித்து உள்ளன.  

    • உத்தரகண்ட் மாநிலத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • ஏஐஎம்ஐஎம் கட்சியினர் இத்தகைய பேனர்கள் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த பேனர்களில், "இந்துக்கள் அல்லாதவர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கிராமத்திற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. கிராமத்தில் எங்காவது நீங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிதிக்கப்ட்டுள்ளது.

    முஸ்லிம் சேவா சங்கதன் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் இத்தகைய பேனர்கள் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து சில கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த இத்தகைய பேனர்களை போலீசார் அகற்றியுள்ளனர். இத்தகைய பேனர்கள் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×