என் மலர்
நீங்கள் தேடியது "rowdy gang"
- மீன்பிடி துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- சூர்யாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராயபுரம்:
எர்ணாவூர், நேதாஜி நகரை சேர்ந்தவர் சூர்யா என்கிற கேரளா சூர்யா (வயது 22).ரவுடி. இவர் மீது கொலை உள்பட மொத்தம் 7 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு சூர்யா காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏலம் விடும் இடத்திற்கு வந்தார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த 7 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.
ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதனை கண்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சூர்யாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 14 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுற்றுப்புறத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை யொட்டி சிப்காட் போலீஸ் நிலையம் உள்ளது.
நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் சிப்காட் போலீஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள வரவேற்பாளர். பொதுமக்கள் அமரும் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.
கட்டிடப் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதால் குபீரென தீ பிடித்து கரும்புகை ஏற்பட்டது.
பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றினர். தப்பியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். உடனடியாக குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக தேடுதல் பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் பழைய குற்றவாளிகளை பிடித்து சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதேபோல் போலீஸ் நிலையம் எதிரே சிப்காட் மெயின் பஜார் தெரு பகுதியில் உள்ள அரிசி கடையின் இரும்பு கதவின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இந்த நிலையில் சிப்காட் போலீஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அரிசி கடையின் மீதும் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாகவும் தனியாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் கடைகளில் ரவுடி கும்பல் மாமூல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் குறித்து வியாபாரிகள் சிலர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் ரவுடி கும்பலை சேர்ந்த சிலரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடித்து எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் போலீஸ் நிலையம் மற்றும் அரிசி கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக இதுவரை 14 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் சிப்காட் போலீஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
வியாசர்பாடி சாஸ்திரி நகர், கக்கன்ஜிநகர் பகுதியில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் தங்களது இரு சக்கர வாகனம் மற்றும் கார்களை வீட்டு முன்பு சாலையோரத்தில் நிறுத்துவது வழக்கம்.
நேற்று இரவும் ஏராளமான வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன. நள்ளிரவி 2 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கூச்சலிட்டபடி சாஸ்திரி நகர், கக்கன்ஜி நகர் வழியாக வந்தனர். திடீரென அவர்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தினர். மொத்தம் 6 கார்கள், 2 ஆட்டோக்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருந்தது. சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததும், ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ரவுடி கும்பல் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர். #tamilnews