என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "run out"

    • பதிரனா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் அப்துல் சமதை தோனி அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
    • அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்து தங்களது 2வது வெற்றியை பெற்றது.

    முன்னதாக அந்தப் போட்டியில் எம்எஸ் தோனி விக்கெட் கீப்பிங்கில் தலா 1 கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட் செய்து வெற்றியில் பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக பதிரனா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் அப்துல் சமதை அவர் அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    இந்நிலையில் அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார். அதற்கு தோனி. "சாதாரணமாக ஸ்டம்பை பார்த்து பந்தை தூக்கி எறிந்தேன். அது ஒன்று அடிக்கலாம் அல்லது தவறப்படலாம். அது போன்ற மனநிலையில் தான் பந்தை எறிந்தேன்" என்று சொன்னார்.

    அதைக் அருகில் இருந்த கேட்ட லக்னோ ஆலோசர் ஜஹீர் கான் "அவ்வளவு சுலபமாவா செய்தீர்கள்?" என்ற வகையில் ஆச்சரியத்துடன் தோனி போல வெறுங்கை யை தூக்கி எறிந்து செய்துப் பார்த்தார். இறுதியில் ரிஷப் பண்ட் "நான் ரன் எடுப்பதற்காக வேகமாக ஓடினேன். அப்போது ரன் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்துடன் திரும்பிச் சென்றேன்" என தோனியிடம் ஜாலியாக கூறினார்.

    • 8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆகி உள்ளார்.
    • 24 முறை எதிர் திசையில் இருந்த பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி- பெங்களூரு அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடி பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்தது.

    ஒரு கட்டத்தில் ஆர்சிபி 3 ஓவரில் 53 ரன்கள் குவித்தது. அடுத்த ஓவரில் பில் சால்ட் மற்றும் விராட் கோலி இடையேயான குழப்பத்தால் சால்ட் ரன் அவுட் ஆனார். அதனையடுத்து ஆர்சிபி தடுமாறியது.

    இந்த ரன் அவுட் மூலம் விராட் கோலி களத்தில் இருக்கும் போது 32 ரன் அவுட் சம்பவம் நடந்துள்ளது. அதில் 8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆகி உள்ளார். 24 முறை எதிரில் இருந்தவர் ரன் அவுட் ஆகியுள்ளனர்.

    சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரின் போது ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்திருந்தபோது, ஒரு மோசமான ரன் அவுட்டில் சிக்கி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் அடித்த பந்து கம்மின்ஸ் இடம் பிடிபட்டது. ஆனால் ஜெய்ஸ்வால் ஓடி வந்ததை பார்க்காமல் விராட் கோலி பின்னால் திரும்பி கம்மின்ஸ் பந்தை பிடித்தாரா என்று பார்த்தார்.

    இதனால் ஜெய்ஸ்வால் ஓடி வந்ததை விராட் கோலி கவனிக்கவில்லை. ஒரு கட்டத்தில் விராட் கோலி கவனித்த போது ஜெய்ஸ்வால் எதிர்முனைக்கே வந்துவிட்டார். மேலும் விராட் கோலி ஜெய்ஸ்வாலை நம்பி ஓடி இருந்தால் நிச்சயம் அந்த ரன்னை எடுத்திருக்கலாம். ஆனால் விராட் கோலி தேவையில்லாமல் ரன் ஓடாமல் நிற்க ஜெய்ஷ்வால் சுலபமாக ரன் அவுட் ஆனார்.

    இதேபோல் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், அக்ஷர் படேல் ஆகியோரும் விராட் கோலியுடன் ஓடும் போது ரன் அவுட் ஆகியுள்ளனர்.

    8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆனதில் 2 முறை ரோகித்துடன் இருக்கும் போது அவர் அவுட் ஆனார். அந்த 2 போட்டியிலும் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர்.
    • தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் 6-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த விக்கெட் கீப்பர் ஜானிபேர்ஸ்டோ (10 ரன்) வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை அடிக்காமல் குனிந்து தவிர்த்தார். ஓவர் முடிந்த நிலையில் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனிடம் பேசுவதற்காக உடனடியாக கிரீசை விட்டு வெளியேறினார். அதற்குள் பந்தை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பு மீது சரியாக எறிந்து அப்பீல் செய்தார்.

    டி.வி. ரீப்ளேயை ஆராய்ந்த 3-வது நடுவர் எராஸ்மஸ் இதை ஸ்டம்பிங் என்று அறிவித்தார். இதனால் மிகுந்த அதிருப்தியுடன் பேர்ஸ்டோ நடையை கட்டினர். ஆத்திரமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் 'இது பழைய ஆஸ்திரேலியா தான். எப்போதும் மோசடி... மோசடி...' என்று கோஷமிட்டனர்.

    மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர். தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.

    அவர் அவுட் ஆகும் போது ரன் அவுட் என கூறிய நிலையில் போட்டி முடிந்த பிறகு அது ஸ்டெம்பிங் என மாற்றப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவுட்தான் என்றும் நாட் அவுட் என்றும் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பேர்ஸ்டோவ் 22 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 178 ரன்கள் தேவைப்பட்டது.

    • பந்தை பிடிக்கும் முன்னரே விக்கெட் கீப்பர் ஸ்டெம்பை காலால் மீதித்து விட்டார்.
    • இதனை அறியாத தினேஷ் கார்த்திக் அவுட் என நினைத்து க்ரீசுக்குள் வராமல் வெளியே நின்றார்.

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 3-வது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - ஜோ ரூட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

    இதில் அபாரமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 26 ரன்களிலும் பிரிட்டோரியஸும் 26 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

    அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் பார்ல் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

    இத்தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்ய தமிழக வீரர் களமிறங்கினர். அப்போது அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அணியின் ஃபினிஷராக தேர்வுசெய்யப்பட்ட தினேஷ் கார்த்திக் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது.

    ஆனால் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை ரன் அவுட் மூலம் வீணாக்கி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளார். இன்னிங்சின் 13-வது ஓவரை ஜார்ஜ் லிண்டே வீசிய நிலையில், அந்த ஓவரின் 2-வது பந்தை தினேஷ் கார்த்திக் ஆஃப் சைடில் அடித்துவிட்டு சிங்கிள் எடுப்பதற்காக ஓடினார்.

    ஆனால் மறுபக்கம் நான் ஸ்டிரைக்கர் திசையில் இருந்த பிஜோர்ன் ஃபோர்டுயின் முதலில் ரன்னிற்கு ஓடுவது போல் கிரீஸை விட்டு வெளியேறி அதன்பின், வரமறுத்து எதிர்முனையின் க்ரீஸிக்கு திரும்பினார்.

    ஆனால் அச்சமயத்தில் தினேஷ் கார்த்திக் பாதி பிட்சை கடந்திருந்த காரணத்தால் அவரால் மீண்டும் க்ரீஸுக்குள் நுழையமுடியவில்லை. அதேசமயம் பந்தை பிடிக்கும் முன்னரே விக்கெட் கீப்பர் ஸ்டெம்பை காலால் மீதித்து விட்டார். இதனை அறியாத தினேஷ் கார்த்திக் அவுட் என நினைத்து க்ரீசுக்குள் வராமல் எதிர் முனையில் இருந்த வீரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.

    இதனை சுதாரித்து கொண்ட விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கெல்டன் பந்தை கையில் வைத்து கொண்டு ஸ்டெம்பை தூக்கி ரன் அவுட்டை உறுதி செய்தார். தினேஷ் கார்த்திக் உள்ளே வந்திருந்தால் கூட ரன் அவுட்டை தவிர்த்திருக்கலாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஜூனியர் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
    • முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கைப்பற்றியது.

    19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஜூனியர் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜூனியர் தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 299 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 319 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 336 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    இந்நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.

    முன்னதாக இந்த போட்டியில் துரதிஷ்டவசமாக இங்கிலாந்து வீரர் ரன் அவுட் ஆகியுள்ளார். ஜேசன் ரோல்ஸ் பந்து வீச்சில் ஸ்விப் ஆட முயன்ற போது சில்லி பாய்ண்ட்டில் நின்ற பீல்டரின் ஹெல்மெட்டில் பந்து வேகமாகபட்டு திரும்பி ஸ்டெம்பில் வந்து பட்டது. அந்த நேரத்தில் பேட்டர் ஆர்யன் சாவந்த் கிரிசுக்கு வெளியே இருந்தார். இதனால் அவர் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

    இது புதுவிதமான ரன் அவுட் ஆக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 3-வது நடுவர் தெரியாமல் ‘ரெட்’ பட்டனை அழுத்தியிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

    டி'ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை இமாத் வாசிம் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஆரோன் பிஞ்ச் சந்தித்தார். அப்போது பிஞ்ச் அடித்த பந்து நேராக பந்து வீச்சாளரை நோக்கி வந்தது. இமாத் வாசிம் பந்தை தனது கையால் தடுத்தார். பந்து கை விரலில் பட்டு எதிர்முனையில் உள்ள ஸ்டம்பை தாக்கியது. அப்போது டி'ஆர்கி ஷார்ட் பேட் க்ரீஸ்க்குள் இருந்தாலும் கிரவுண்டில் உரசியதாக தெரியவில்லை.



    இதனால் 3-வது நடுவர் முடிவிற்கு விடப்பட்டது. அப்போது பலமுறை ரீப்ளே செய்து பார்த்த போதிலும், ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களுக்கு சாதகமான முடிவுதான் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், 3-வது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    போட்டியின் பிற்பகுதியில் மேக்ஸ்வெல் அரைசதம் அடிக்க 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா. இந்நிலையில் நடுவர் தெரியாமல் ரெட் பட்டனை அழுத்தியிருக்கலாம் என தங்களை ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
    ×