என் மலர்
நீங்கள் தேடியது "Sam Konstas"
- ஆரோன் ஹார்டி, டாட் மர்ஃபி மற்றும் சீன் அபோட் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
- ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்காமல் உள்ள கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2025-26-ம் ஆண்டிற்கான வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தை இன்று அறிவித்துள்ளது. மொத்தம் 23 பேர் அடங்கிய இந்த மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் சாம் சாம் கான்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சாம் சாம் கான்ஸ்டாஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தனர்.
அதேசமயம் மேத்யூ குஹ்னமேன் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற உதவினர். இதன் காரணமாக இவர்கள் மூவருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
அதேசமயம் முன்னதாக மத்திய ஒப்பந்தத்தில் இடம்பிடித்திருந்த ஆரோன் ஹார்டி, டாட் மர்ஃபி மற்றும் சீன் அபோட் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இளம் அதிரடி வீரர்கள் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கன்னொலி உள்ளிட்டோருக்கும் இந்த ஒப்பந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்காமல் உள்ள கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோரும் இந்த ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா ஆடவர் ஒப்பந்தப் பட்டியல் 2025-26:
சேவியர் பார்ட்லெட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் சாம் கான்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னேமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், லான்ஸ் மோரிஸ், ஜெய் ரிச்சர்ட்சன், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர், ஆடம் ஜாம்பா.
- 4-வது டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள் கொண்டுவரப்பட்டள்ளது.
- காயம் காரணமாக விலகி ஹசில்வுட்டுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போனில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் விளையாடும் ஆடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் 2 மாற்றங்கள் கொண்டுவரப்பட்டள்ளது. அதில் காயம் காரணமாக விலகி ஹசில்வுட்டுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் இடம் பெற்றுள்ளார்.
அதேபோல் தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனிக்கு பதிலாக 19 வயது இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

4-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா வீரர்கள் விவரம்:-
உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.
- அதிரடியாக விளையாடிய அறிமுக வீரர் கான்ஸ்டாஸ் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
- 2021-ம் ஆண்டுக்கு பிறகு பும்ராவிற்கு எதிராக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை கான்ஸ்டாஸ் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியின் மூலம் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவிற்கு எதிராக குறிப்பாக 4,483 பந்துகளுக்கு பிறகு சிக்சர் அடித்த வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.
2021-ம் ஆண்டுக்கு பிறகு பும்ராவிற்கு எதிராக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை கான்ஸ்டாஸ் பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் முதல் 33 பந்துகளில் அதிக ரன்கள் அடித்த ஓபனர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் கான்ஸ்டாஸ் படைத்துள்ளார். பும்ராவின் முதல் 33 பந்துகளில் கான்ஸ்டாஸ் 34 ரன்களை அடித்துள்ளார்.
- இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார்.
- கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் பவுண்டரிகளை விளாசினார்.
அப்போது கான்ஸ்டாசுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவர்களுக்கு இடையே கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்.
இந்த வாக்குவாதம் முடிந்தவுடன் பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே கான்ஸ்டாஸ் பவுண்டரி அடித்தார். இதனையடுத்து கோலியின் முகம் வாடியது குறிப்பிடத்தக்கது.
- அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
- மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 57 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியின் மூலம் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவிற்கு எதிராக குறிப்பாக 4,483 பந்துகளுக்கு பிறகு சிக்சர் அடித்த வீரராக மாறி சாதனை படைத்தார்.
நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 57 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 72 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், பும்ரா பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். மிட்சல் மார்ஸ் 4 ரன்களிலும் அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்துள்ளது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார்.
- கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் பவுண்டரிகளை விளாசினார்.
அப்போது கான்ஸ்டாசுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவர்களுக்கு இடையே கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில், கான்ஸ்டாஸ் மீது வேண்டுமென்றே மோதிய விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.
கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்களை கண்டிக்கும் வகையில் டிமெரிட் புள்ளி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது.
- சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
இப்போட்டியில் கொன்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி இடையேயான மோதல் பெரும் பரபரப்பை கிளப்பியது. சாம் கொன்ஸ்டாஸை இந்திய வீரர் விராட் கோலி வேண்டுமென்றே இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து விராட் கோலிக்கு ஐசிசி அபராதம் விதித்தது.
இந்நிலையில் அனுபவ வீரரான விராட் கோலி அறிமுக வீரரிடம் இதுபோல் நடந்து கொண்ட சம்பவம் கண்டனங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
இந்த நிகழ்வின் போது விராட் எங்கு நடக்கிறார் என்று பாருங்கள். விராட் வலது பக்கமாக நடந்து அந்த மோதலை ஏற்படுத்தினார். அதனால் இதில் அவர் மீது தான் தவறு என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இந்நிகழ்வு குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலீசா ஹீலி, "இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது. உங்கள் அனுபவமிக்க வீரர், நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
இது உண்மையில் ஒரு அணியின் சிறந்த செயல் அல்ல. ஆனால் இந்திய அணி அதை அணுக விரும்பும் ஒரு வழி என்றால், அப்படியே ஆகட்டும். ஆனால் அது கொன்ஸ்டாஸை சிறிதும் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
- உலகத்தரம் வாய்ந்த பும்ரா, மீது அழுத்தத்தை போட முயற்சித்தேன்.
- அவருடைய திட்டங்களை மாற்ற வைப்பதே முக்கியமான விஷயம்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் பயந்து விளையாடும் பும்ரா ஓவரில் இவர் 2 சிக்சர்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் பும்ராவை தொடர்ந்து டார்கெட் செய்து கொண்டே இருப்பேன் என இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது கனவு நிஜமான தருணம். ஏனெனில் ரசிகர்களால் நிறைந்திருக்கும் மைதானத்தை பாருங்கள். பட் கமின்ஸ் உட்பட அனைவரும் என்னை அணிக்குள் வரவேற்றார்கள். பயமின்றி விளையாடுமாறு கேப்டன் கமின்ஸ் என்னிடம் சொன்னார்.
பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட் அடிப்பது பற்றி நேற்று திட்டமிடவில்லை. அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர். இருப்பினும் அவர் மீது அழுத்தத்தை போட முயற்சித்தேன்.
அவருடைய திட்டங்களை மாற்ற வைப்பதே முக்கியமான விஷயம். இந்த வகையில் அவரைத் தொடர்ந்து நான் டார்கெட் செய்து கொண்டே இருப்பேன். அவரும் கம்பேக் கொடுக்கலாம். அப்போது என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
என்று சாம் கான்ஸ்டாஸ் கூறினார்.
- ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது.
- ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மெல்போர்ன்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்த இன்னிங்சில் ஆஸ்திரேலியா தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன உஸ்மான் கவாஜா, அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக 19 வயதே ஆன அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ், நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவர் பும்ராவின் பந்துவீச்சை எளிதாக அடித்தார். அவரது பந்துவீச்சில் 2 சிக்சர்கள் விளாசிய அவர் 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற மாபெரும் சாதனையை கான்ஸ்டாஸ் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. இயன் கிரெய்க் - 17 வயது 240 நாட்கள்
2. சாம் கான்ஸ்டாஸ் - 19 வயது 85 நாட்கள்
3. நீல் ஹார்வி - 19 வயது 121 நாட்கள்
4. ஆர்ச்சி ஜாக்சன் - 19 வயது 150 நாட்கள்
- சாம் கோன்ஸ்டாஸ்-க்கு 19 வயது மட்டுமே ஆகிறது.
- கிரிக்கெட் களத்தில் எந்த சூழலிலும் எதிரணி வீரர்களை தொடவே கூடாது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ்- விராட் கோலி நேருக்கு நேராக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.
இந்த சம்பவத்தில் விராட் கோலி மீதுதான் தவறு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர்களாக இர்பான் பதான், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியதாவது:-
கிரிக்கெட் களத்தில் எந்த சூழலிலும் எதிரணி வீரர்களை தொடவே கூடாது. களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு, சக வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். சாம் கோன்ஸ்டாஸ்-க்கு 19 வயது மட்டுமே ஆகிறது.
ஹெய்டன், கில்கிறிஸ்ட் உள்ளிட்டோர் எங்களுக்கு 19 வயதாகிய போது, பின்னால் இருந்து கொண்டு வார்த்தைகளால் ஸ்லெட்ஜிங் செய்வார்கள். ஆனால் ஒருநாளும் எங்களை தொட்டதில்லை. அதனால் விராட் கோலி சாம் கோன்ஸ்டாஸ்-ன் தோளில் உரசியதை தவிர்த்திருக்க வேண்டும்.
எனக்கு ஒரு கேள்வியும் இருக்கிறது. ஒருவேளை விராட் கோலியின் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் இருந்து, சாம் கோன்ஸ்டான் இடத்தில் இந்திய அணியைச் சேர்ந்த 19 வயதான வீரரின் அறிமுகப் போட்டியில் இப்படியான சம்பவம் நிகழ்ந்திருந்தால் நாம் ஏற்போமா.. அப்படிதான் இதனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில்:-
விராட் கோலி நிச்சயம் இதை செய்திருக்கக் கூடாது. கூட்ட நெரிசல் உள்ள தெருவில் ஒருவர் நடந்து சென்றால் கூட ஒருவர் எதிரில் வரும்போது நாம் வழிவிடலாம். வழி விடுவதால் நாம் யாருக்கும் குறைந்தவர் கிடையாது. கிரிக்கெட் களத்தில் இது போன்ற சம்பவங்களை யாரும் பார்க்க விரும்ப மாட்டார்கள். என்னை பொறுத்தவரை கோலி இதை செய்திருக்கக் கூடாது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி கூறியதாவது:-
தேவையில்லாத ஒரு விஷயத்தை விராட் கோலி செய்துவிட்டார். இப்படி நடந்திருக்க வேண்டியது இல்லை. இது போன்ற சம்பவங்களை பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் விராட் கோலி ஏன் இவ்வாறு செய்தேன் என்று ஒரு விளக்கத்தை அவர் வைத்திருப்பார். ஆனால் இது போன்ற விஷயங்களை யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- இளம் வீரரை சீண்டிய விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர்.
- விராட் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் அவரை தொடர்ந்து கலாய்த்து கொண்டே இருந்தனர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ்- விராட் கோலி நேருக்கு நேராக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.
இந்நிலையில் இளம் வீரரை சீண்டிய விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர். விராட் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் அவரை தொடர்ந்து கலாய்த்து கொண்டே இருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி, அவர் சாப்பிட்டு கொண்டிருந்த சூயிங்கமத்தை ரசிகர்களை பார்த்து துப்பினார்.
இந்த வீடியோவுக்கு இந்திய ரசிகர் ஒருவர் தீம் மியூசிக் வைத்து எடிட்டி செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல இன்று இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் விராட் கோலி 36 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போதும் ரசிகர்கள் கலாய்த்தனர். இதனால் கோபமடைந்த விராட் திரும்பி வந்து ரசிகர்களை பார்த்து முறைத்து கொண்டார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
- முதல் நாள் ஆட்டத்தில் சான் கோன்ஸ்டாஸை முதல் 2 ஓவர்களுக்குள் 6-7 முறை வீழ்த்தியிருப்பேன்.
- ஆனால் அன்றைய நாளில் அது நடக்கவில்லை.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் நம்பர் ஒன் பவுலராக திகழும் பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து சிக்ஸர் அடித்த வீரராக அவர் சாதனை படைத்தார். அத்துடன் பும்ராவுக்கு எதிராக ஒரே ஓவரில் (18) ரன்கள் குவித்த வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.
அதன தொடர்ந்து பும்ராவை இனிமேல் தொடர்ந்து தாம் டார்கெட் செய்து கொண்டே இருப்பேன் என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஒருநாளும் புதிய சவால்களை எதிர்கொள்ள அஞ்சியதில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது போன்ற பல அனுபவங்களை நான் பார்த்துள்ளேன். சாம் கான்ஸ்டாஸ் ஒரு சுவாரஸ்யமான பேட்ஸ்மேனாக தெரிகிறார். எந்த சூழ்நிலையிலும் நான் ஆட்டத்தில் இருப்பதாகவே நினைக்கிறேன். ஒருநாளும் ஆட்டத்தில் இருந்து தள்ளி இருப்பதாக நினைக்கவில்லை. முதல் நாள் ஆட்டத்தில் சான் கோன்ஸ்டாஸை முதல் 2 ஓவர்களுக்குள் 6-7 முறை வீழ்த்தியிருப்பேன்.
ஆனால் அன்றைய நாளில் அது நடக்கவில்லை. கிரிக்கெட் விளையாட்டே அப்படிதான். சில நேரங்களில் சாதகமாகவும், சில நேரங்களில் பாதகமாகவும் அமையும். அதனால் சிறந்த வீரர்களை கூட விமர்சிக்க வேண்டிய சூழல் நிகழும். எந்த நேரத்தில் சவாலுக்காக தான் காத்திருக்கிறேன். ஒருநாளும் புதிய சவால்களை எதிர்கொள்ள அஞ்சியதில்லை.
விக்கெட்டுகள் கிடைப்பது சில நேரங்களில் நம் கைகளில் இருக்காது. டி20 கிரிக்கெட்டை அதிகளவில் விளையாடி இருக்கிறேன். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டி20 கிரிக்கெட்டை தான் விளையாடி வருகிறேன். அதனால் நாம் மிகச்சிறப்பாக பவுலிங் செய்யும் போது கூட நமக்கு விக்கெட் கிடைக்காது. ஆனால் சில சமயம், துல்லியத்தில் சிக்கல் உண்டாகும் போது கூட விக்கெட் கிடைக்கும்.
என்று தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் பும்ரா 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.