என் மலர்
நீங்கள் தேடியது "sambar"
- சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உப்புமா ருசியாக இருக்கும்.
- கார்ன் பிளவர் மாவு கலந்து லேசான ஈரப்பதத்துடன் வறுத்தெடுத்தால் கோவக்காய் சுவையாக இருக்கும்.
* சாம்பார், ரசம், காரக்குழம்பு போன்றவைகளை தயார் செய்யும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும் தருவாயில் அரை டீஸ்பூன் வெல்லம் கலந்தால் சுவை கூடும்.
* கடலைப்பருப்பு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை நறுக்கிவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் ரவையும் கலந்து வடை சுட்டால் மொறுமொறுவென்றும் சுவையாகவும் இருக்கும்.
* எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரே இல்லாமல் மிதமான தீயில் 5 நிமிடம் மூடி வைத்துவிட்டு இறக்கினால் முட்டைக்கோஸ் பொரியல் சுவையாக இருக்கும்.
* உப்புமா தயார் செய்யும்போது ரவையை பொன்னிறமாக வறுத்து, பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு 1-க்கு 3 மடங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, கொதித்தவுடன் வறுத்த மாவை கொட்டி கிளறி, அது வெந்தவுடன் இறக்கவும். அதில் சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உப்புமா ருசியாக இருக்கும்.
* புளிக்குழம்பு தயார் செய்யும்போது முதலில் தேவையான அளவு தனியா, வர மிளகாய், வெந்தயம் போன்றவற்றை பொன்னிறமாக வறுக்கவும். அந்த கலவையை மிக்சியில் அரைக்கவும். பின்னர் வாணெலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சிறிதளவு கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் புளிக்கரைசலை ஊற்றி கிளறவும். பின்பு மிக்சியில் அரைத்த கலவையை கொட்டி உப்பு, மஞ்சள் சேர்த்துவிட்டு குழம்பு கொதிக்கவும் இறக்கவும். அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாசனை கமகமக்கும்.
* தோசைக்கல்லில் நறுக்கிய கோவக்காயை கொட்டி, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கி, தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு, கார்ன் பிளவர் மாவு கலந்து லேசான ஈரப்பதத்துடன் வறுத்தெடுத்தால் கோவக்காய் சுவையாக இருக்கும்.
* பாகற்காய் தொக்கு செய்யும்போது பாகற்காயுடன் சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்து, மிளகாய் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக சுண்டி வந்ததும் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் கசப்பு தெரியாது. சுவையாகவும் இருக்கும்.
- ஓட்டலில் இருந்த ஆறுமுகத்தின் மகன் லோகேஸ்வரனுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
- தகவல் அறிந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓட்டலுக்கு திரண்டு வந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே வில்லியனூர் தட்டாஞ் சாவடிபகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வில்லியனூர் அருகே உள்ள பத்துக்கண்ணு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 24) என்பவர் ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்க வந்தார். அப்போது அவர் கூடுதலாக ஒரு சாம்பார் பாக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஓட்டலில் இருந்த ஆறுமுகத்தின் மகன்லோகேஸ்வரனுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதலாக மாறியது.
அப்போது ஆத்திரமடைந்த லோகேஸ்வரன் கையில் வைத்திருந்த அரிவாளால் அஜித்குமாரை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓட்டலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஓட்டலில் திரண்டு இருந்த அஜித் குமாரின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வெந்தயக்கீரை - 2 சிறுகட்டு,
துவரம்பருப்பு - ஒரு கப்,
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,

செய்முறை:
துவரம்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.
வாணலியில் கரைத்த புளியை ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
அடுத்து அதில் வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.
துவரம்பருப்பு - கால் கப்,
பாசிப்பருப்பு - கால் கப்
தக்காளி - 2
கேரட் - ஒன்று,
கத்திரிக்காய் - ஒன்று,
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப)
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
தோலுரித்த சின்ன வெங்காயம் - 10
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்

செய்முறை :
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
துவரம்பருப்புடன் பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க கொடுப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சூப்பரான டிபன் சாம்பார் ரெடி.
துவரம் பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 100
தக்காளி - 3
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சீரகம், வெந்தயம் தலா - 1 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
பருப்புடன் சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேக விடவும். பருப்பு நன்றாக வெந்தவுடன் நன்றாக கடைந்து வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
சின்ன வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீர் விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வெந்த பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.