என் மலர்
நீங்கள் தேடியது "Sand Artist"
- விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜியின் 126வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
- மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை ஒடிசாவில் உருவாக்கியுள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
மணல் சிற்பத்துக்குப் பின்னால் சுமார் 450 ஸ்டீல் கிண்ணங்களையும் பயன்படுத்தியுள்ளார். மேலும் நேதாஜி என்றும், ஜெய்ஹிந்த் என்னும் சொற்களையும் வரைந்துள்ளார்.
- ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
- ஆர்.ஆர்.ஆர். மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கு விருது வழங்கப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் உடல்நலக் குறைவால் காலமானார்.
- அவருக்கு ஒடிசா மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் சிற்பம் வரைந்து அஞ்சலி செலுத்தினார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசைன் (73), உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஜாகிர் உசைன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகளவில் உள்ள திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், மணல் சிற்பல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஜாகிர் உசைனுக்கு மணல் சிற்பம் வரைந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதில் தபேலாவின் சக்கரவர்த்தி என்ற வாரத்தைகளையும், தபேலாக்களையும் சிற்பமாக வரைந்துள்ளார்.
புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, இந்தியாவின் பிரபலமான மணல் சிறப்க் கலைஞர் பத்மஸ்ரீ விருதுபெற்ற சுதர்ஷன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
ஒடிசா கடற்கரையில் பல பெரிய சிகரெட் துண்டுகளின் மேல் பெரிய எலும்புக்கூடு படுத்திருப்பது போன்ற சிற்பம் உருவாக்கியுள்ளார். புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவு குறித்து பிரதிபலிக்கும் விதமாக இந்த சிற்பம் அமைந்திருந்தது. இதனை, பொது மக்கள் பலர் பார்த்து செல்கின்றனர்.
மேலும், இந்த மணல் சிற்ப புகைப்படத்தை சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில், #உலக புகையிலை தினத்தை முன்னிட்டு. இந்தியாவில் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் எனது மணல் கலை, புகையிலை வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு 35000க்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் 4000க்கும் மேற்பட்ட முறை ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. முழு மணல் சிற்பத்தின் வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றுவருகிறது.
இதையும் படியுங்கள்.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு இடமில்லை என மக்கள் கூற விரும்புகின்றனர் - மம்தா பானர்ஜி


வாஜ்பாய் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பெங்களூர் மராத்தாஹள்ளியில் உள்ள வக்தேவி விலாஸ் கல்வி நிறுவன வளாகத்தில் வாஜ்பாயின் உருவத்தை மணற்சிற்பமாக உருவாக்கியுள்ளார். அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதவேற்றம் செய்து, இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #SudarsanPattnaik #SudarsanSand
