என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » sand selling
நீங்கள் தேடியது "sand selling"
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் 30 லட்சம் டன் மணல் கொண்டுவரப்படுகிறது. இந்த மணல் விற்பனை இந்த மாத இறுதியில் தொடங்கும்.
சென்னை:
மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு மணல் இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.
இதற்காக ரூ.548 கோடி மதிப்புள்ள 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
தற்போது இதில் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதன்படி, மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் டன் வீதம் மணல் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. 6 மாதங்களில் மொத்தம் 30 லட்சம் டன் மணல் தமிழகம் வந்து சேரும்.
தூத்துக்குடி துறைமுகம் மூலம் இந்த மணலை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மணல் விற்பனை இந்த மாத இறுதியில் தொடங்கும்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மணல்குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது.#tamilnews
மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு மணல் இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.
இதற்காக ரூ.548 கோடி மதிப்புள்ள 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
தற்போது இதில் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதன்படி, மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் டன் வீதம் மணல் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. 6 மாதங்களில் மொத்தம் 30 லட்சம் டன் மணல் தமிழகம் வந்து சேரும்.
தூத்துக்குடி துறைமுகம் மூலம் இந்த மணலை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மணல் விற்பனை இந்த மாத இறுதியில் தொடங்கும்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மணல்குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது.#tamilnews
×
X