என் மலர்
நீங்கள் தேடியது "Sanjay Dutt"
- 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் சஞ்சய் தத் சகோதரி பிரியா தத் போட்டியிட்டார்
- சஞ்சய் தத்தின் தந்தையான சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்
64 வயதான பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹரியானாவின் கர்னால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்ற தகவல் பரவியது
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில், தான் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல்களை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"நான் அரசியலுக்கு வருவதைப் பற்றிய அனைத்து வதந்திகளுக்கு முடிவுகட்ட விரும்புகிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியலில் ஈடுபடுவதாக முடிவு செய்தால், நிச்சயம் உங்களிடம் தெரிவிப்பேன். ஆகவே இத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற வதந்தி பரவுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் சஞ்சய் தத் சகோதரி பிரியா தத் போட்டியிட்டார்.
அப்போது அவருக்கு சஞ்சய் தத் ஆதரவு தெரிவித்தார். அப்போது சஞ்சய் தத் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியானது. அதற்கு சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் தத்தின் தந்தையான சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். கடந்த 2005- ஆம் ஆண்டு மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2006 ஆம் ஆண்டு வெளியான தேவதாசி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் ராம் பொதினேனி
- இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு வெளியான தேவதாசி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார் ராம் பொதினேனி. அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ரெடி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான 'டபுள் ஐஸ்மார்ட் ' படத்திற்காக நடிகர் ராம் பொதினேனி மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது திரைப்பெயரை உஸ்தாத் ராம் பொதினேனி மாற்றிக்கொண்டார்.
இப்படத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி ஹீரோவாகவும், சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகுகிறது. இதற்கு இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளான நேற்று (மே 15) 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலியின் காட்சியமைப்புகள் அருமையாக வந்துள்ளது. 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மேலும், படம் குறித்தான அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமகது கான் இயக்கும் இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- சஞ்சய் தத் ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
அக்ஷய் குமாரின் 'வெல்கம் டு தி ஜங்கிள்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சஞ்சய் தத் கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்படாத விதத்தில் நடப்பதாக உணர்ந்த சஞ்சய் தத் இதுகுறித்து அக்ஷய் குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஸ்கிரிப்டில் பல மாற்றங்களுடன், படப்பிடிப்பின் கால்ஷீட்டிலும் பிரச்சனை ஏற்பட்டாதல் வெளியேறியதாக கருதப்படுகிறது.
சஞ்சய் தத் ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்திருப்பதால், தயாரிப்பாளர்கள் தற்போது நடிகரை சமாதானப்படுத்துவதா அல்லது அதை முழுவதுமாக நீக்கிவிட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்வதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இப்படத்தில் சுனில் ஷெட்டி, திஷா பதானி, ரவீனா டாண்டன், லாரா தத்தா, அஃப்தாப் ஷிவ்தாசானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், பரேஷ் ராவல், ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வர்சி, ஜானி லீவர், ராஜ்பால் யாதவ், மிகா சிங், முகேஷ் திவாரி, ஜாகிர் ஹுஸ்ஸான், ஜாகிர் ஹுஸ்ஸான் ஆகியோர் நடித்துள்ளனர்.
அமகது கான் இயக்கும் இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதன் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான ஆனந்த் ஆடியோ வாங்கியுள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகரான துருவா சர்ஜா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.

"கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது.
KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- "கல்நாயக்" படத்தில் தத் நடித்த 'பல்லு பல்ராம்' கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.
- 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள கல்லறையில் ஒரு நபர் கத்தியால் பெண்ணின் தலையை துண்டித்து, வீடியோவில் குற்றத்தை வெட்கமின்றி ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை புலந்த்ஷாஹரில் உள்ள குர்ஜா நகர் கோட்வாலி பகுதியின் மொஹல்லா கிர்கானியில் உள்ள கல்லறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அந்த பெண்ணை கொலை செய்ததாக அந்த இளைஞர் வீடியோவில் தற்பெருமை பேசுகிறார்.
அந்த கொடூரமான குற்றத்திற்கு எந்த வருத்தமும் காட்டாத அந்த நபர், தனது நண்பர்கள் காட்டிக் கொடுத்தால் அவர்களையும் கொன்றுவிடுவேன் என்று கூறினார். மேலும் அந்த வீடியோவில் தான் செய்த குற்றத்தை பேசி சிரித்துவிட்டு, தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகன் என்றும், "கல்நாயக்" படத்தில் தத் நடித்த 'பல்லு பல்ராம்' கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.
गर्लफ्रेंड की हत्या करने वाले अदनान उर्फ बल्लू को सुनिए..."मोहब्बत में धोखा देने वालों की सिर्फ एक ही सजा है मौत, चाकू से गर्दन काट डाली"
— Sachin Gupta (@SachinGuptaUP) June 12, 2024
? बुलंदशहर, उत्तर प्रदेश https://t.co/KEZ4adMLgv pic.twitter.com/0njxzOHcst
காதலில் துரோகத்தை எதிர்கொண்டதாகவும், துரோகத்திற்கு "மரணம்" தான் தண்டனை என்றும் அந்த மனிதன் கூறுவதுடன் சிலிர்க்க வைக்கும் வீடியோ தொடங்குகிறது. "நான் அவளது கழுத்தை அறுத்தேன் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார். குற்றத்தை செய்ய ஏன் படம் பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு, "பல்லு. நான் சஞ்சய் தத்தின் ரசிகன்" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். வீடியோவில், அவர் தன்னை "பல்லு" என்று அடையாளம் காட்டுகிறார். இருப்பினும், அவரது பெயர் அட்னான் என்று கூறப்படுகிறது.
மேலும் தான் செய்த குற்றத்தை தற்பெருமை கூறியதோடு அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதில் "எனது குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது தொட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன், என் குடும்ப உறுப்பினர்களைத் தொடத் துணிந்தவர்களின் வீடுகளில் குண்டு வீசுவேன்" என்றும் கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் ஒரே ஒரு கொலை செய்ததால் என்னை என்கவுன்டர் செய்யமாட்டார்கள், 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள் என்றும் திமிராக பதில் பேசியுள்ளார்.
இந்நிலையில் பலியான பெண் ஆஸ்மா என அடையாளம் காணப்பட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
यूपी : बुलंदशहर जिले के खुर्जा में कब्रिस्तान में महिला आसमा की हत्या। बॉयफ्रेंड अदनान ने ही वारदात की। महिला अपने हसबेंड को छोड़कर बॉयफ्रेंड संग रह रही थी। अब बॉयफ्रेंड को शक था कि उसका कहीं और भी चक्कर है। पुलिस ने आरोपी अरेस्ट किया। pic.twitter.com/HnDzSRo15l
— Sachin Gupta (@SachinGuptaUP) June 11, 2024
- தேர்வில் மாணவருக்கு பதிலாக மற்றொருவரை தேர்வு எழுதச்செய்யும் ஆள்மாறாட்டத்துக்கு தனி ரேட்டை சால்வர் கேங் நிர்ணயித்துள்ளது.
- வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் கிரேஸி மோகனை படத்தில் மார்கபந்து மிரட்டி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைக்கும் காட்சியாக அது அமைத்திருக்கும்.
நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் இளநிலைத் தேர்வில் பலவேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் பூதகரமாகத் தொடங்கியுள்ளது.
பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு நடந்து இருந்தது. ஒரு வினாத்தாள் ரூ.30 லட்சம் வரையில் விற்னையானது. நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றனர். இந்த சம்பவங்களால் நீட் தேர்வில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

இந்த முறைகேடுகளில் முக்கிய மூளையாக செயல்பட்ட சால்வர் கேங்கை சேர்ந்த நபர்கள் கைது செயயப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்வில் மாணவருக்கு பதிலாக மற்றொருவரை தேர்வு எழுதச்செய்யும் ஆள்மாறாட்டத்துக்கு தனி ரேட்டை சால்வர் கேங் 'Solver gang' நிர்ணயித்துள்ளது. முன்னா பாய் சர்வீஸ் என்ற பெயரில் இந்த பேக்கேஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹிந்தியில் கடந்த 2003 ஆம் ஆண்டு சஞ்சய் தத் நடப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் 'முன்னா பாய் எம்பிபிஎஸ்'. இதில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் தனக்கு பதிலாக வேறொருவரை மிரட்டி அந்த பரீட்சையில் ரவுடியான முன்னா பாய் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் கிரேஸி மோகனை படத்தில் மார்கபந்துவை மிரட்டி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைக்கும் காட்சியாக அது அமைந்திருக்கும்.


இதை பிரதி செய்யும் வகையில், தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யும் முன்னா பாய் சர்வீஸை சால்வர் கேங் அறிமுகப்படுத்தி முறைகேடு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் வட மாநிலங்களில் இயங்கி வந்த சால்வர் கேங்கின் முக்கிய மூளை ரவி ஆத்ரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ இன்று வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

- தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி.
- 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து டபுள் இஸ்மார்ட் எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படமானது 2019ல் வெளியான இஸ்மார்ட் சங்கர் எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இந்த படத்தை விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் கடந்த மார்ச் 8-ம் தேதியே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு தற்போது இப்படம் ஆனது 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது. இதனை பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆதித்யா தார் அடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
- இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் பி62 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
2019 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஆதித்யா தார் இயக்கத்தில் விக்கி கௌஷல், யாமி கவுதம் , கிருத்தி குல்ஹாரி மற்றும் பலர் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் URI: தி சர்ஜிகல் ஸ்டிரைக்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஆதித்யா தார் அடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் பி62 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. தற்பொழுது இப்படத்தில் நடிக்க போகும் நடிகர்களின் பட்டியலை ரன்வீர் சிங் அவரது இன்ஸ்டாகிராமின் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, மாதவன், அர்ஜூன் ராம்பல் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்படவுள்ளது. இப்படம் இந்தியன் இண்டலிஜன்ஸ் ஆஜென்சியின் பணிபுரியும் ஆபிசர்களை மையப்படுத்தின கதைக்களமாகும்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து டபுள் ஐஸ்மார்ட் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது 2019ல் வெளியான ஐஸ்மார்ட் சங்கர் எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தை விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் இதுவே.
இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ஒரு அராத்து ரவுடியாக நடித்துள்ளார் ராம் பொதினேனி. சஞ்சய் தத் மூளையை எடுத்து ராம் பொதினேனி மூளையையும் இடம் மாற்றுகின்றனர். இதற்கடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் கதை. திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 42 நிமிடமாக உள்ளது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷனாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சஞ்சய்தத் - பிரித்விராஜ்
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ், தமிழ் நடிகர் அர்ஜுன் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சமந்தா பெயர் அடிபடுகிறது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சஞ்சய்தத்
இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இந்தி நடிகர் சஞ்சய்தத்க்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்க படக்குழுவினர் முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய கே.ஜி.எப் 2 படத்தில் வில்லனாக சஞ்சய்தத் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கடந்த மூன்றரை ஆண்டுகளாக கண்டு கொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரைப்பட நடிகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுனில் தத்தின் புதல்வருமான சஞ்சய் தத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், 3 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவித்திருந்த சஞ்சய் தத், 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். எந்த அடிப்படையில் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டார் என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பேரறிவாளன் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்துள்ள புனே சிறை நிர்வாகம், நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய்தத்தை தாங்களே விடுதலை செய்ததாக தெரிவித்திருக்கிறது.
2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அளித்தத் தீர்ப்பின்படி, மத்திய அரசு சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. நடிகர் சஞ்சய் தத் மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தின்படி தான் தண்டிக்கப்பட்டார் என்பதால் அவரின் தண்டனையை குறைத்து, முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.
ஆனால், மராட்டிய மாநில அரசு, இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் சிறை விதிகளின் அடிப்படையில் சஞ்சய் தத்தை தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளது. இது நடந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசு தலையிடவில்லை.
மத்திய அரசின் அனுமதி பெறாமல் தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத்தை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. ஆனால், இவ்விஷயத்தில் மத்திய அரசு இரட்டை அளவுகோல்களை பயன்படுத்துவது தான் மிகவும் வருத்தமளிக்கிறது. ஒருபுறம் மத்திய சட்டப்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத்தை மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது.
மறுபுறம் மாநில சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 2014-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த போது அதை எதிர்த்து அப்போதைய காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தும் இன்னும் விடுதலையாக முடியவில்லை.

7 தமிழர்களையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி ஆளுனர் மூலமாக விடுதலை செய்யவும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி நேரடியாக விடுவிக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அதன்படி, 7 தமிழர்கள் விடுதலையில் விரைந்து முடிவெடுக்கும்படி ஆளுனருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை ஏற்க மறுத்து விடுதலையை தமிழக ஆளுனர் தாமதம் செய்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி 7 தமிழர்களையும் நேரடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
நடிகர் சஞ்சய்தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் இருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை ஆனார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த தீர்மானத்தின் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசுடன் கலந்தாலோசிக்காமல் மாநில அரசே சஞ்சய் தத்தை விடுதலை செய்திருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.
சஞ்சய்தத் சிறையில் இல்லாத 8 மாதங்களையும் நன்னடத்தை சிறை காலத்தில் சேர்த்துள்ளனர். அதையும் கணக்கிட்டுதான் சஞ்சய்தத் விடுவிக்கப்பட்டுள்ளார். சஞ்சய்தத் தேசிய குற்றத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் தடா சட்டத்தில் தண்டனை பெற்றவர்.
சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை செய்ததை போலவே அரசமைப்பு சட்டப்பிரிவு 161-ன்படி மாநில அரசே பேரறிவாளனை விடுவிக்கலாம் என அவரது தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.