என் மலர்
நீங்கள் தேடியது "Sathanur Dam"
- கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.
இதனால் அணையில் இருந்து சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது.
- திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வேங்கிகால்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது. இன்று காலை சாத்தனூர் அணைக்கு 36 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் பரலான மழை பெய்தது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது.
- சாத்தனூர் அணை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
- அரசின் துரித நடவடிக்கைகளால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை:
சாத்தனூர் அணை நிலை குறித்து உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
சாத்தனூர் அணை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. முன்னறிவிப்பின்றி 1.68 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதாக கூறுவது பொய். அரசின் துரித நடவடிக்கைகளால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு புரட்டுகளை பரப்பி வருகின்றனர்.
நீர் வரத்தை முன்கூட்டியே கணித்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
- சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.
- புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஃபெஞ்சல் புயல் காரணமாக 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புயலின் தாக்கத்தை வானிலை மையமே கணிக்க முடியாமல்தான் இருந்துள்ளது.
சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.
சென்னையில் கடந்த காலங்களில் 13 செ.மீ மழைக்கே 3 நாட்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில், தற்போது மழை பெய்த 12 மணி நேரங்களில் இயல்பு நிலைக்குச் சென்னை திரும்பியுள்ளது.
இதற்கு முதலமைச்சரின் போர்க்கால மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முன் 5 முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. படிப்படியாகத்தான் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
உரிய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால்தான் இன்று உயிர்ச்சேதங்கள் இல்லை
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல்வேறு உயிர்கள்
எடப்பாடி பழனிசாமி வாய்ச்சவடால் விடாமல், ஒன்றிய அரசிடம் இருந்து அரசு கேட்ட நிவாரணத்தை வாங்கித் தரட்டும்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏற்பட்டுள்ள சேதங்கள் இரு நாட்களில் சரிசெய்யப்படும்.
திருவண்ணாமலையில் வழக்கம்போல் கார்த்திகை மகா தீபத்திருவிழா நடைபெறும் என தெரிவித்தார்.
- சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்திருந்தால், மக்கள் பாதிப்பை சந்தித்திருக்க மாட்டார்கள்.
- செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். ஆனால் சாத்தனூர் என்பது மிகப் பெரிய அணை.
சென்னை:
சட்டசபையில் இன்று துணை பட்ஜெட் மீதான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி (அ.தி.மு.க.) பேசினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை மையம் அறிவித்து இருந்தும் அதனை முறையாக மக்களிடம் கொண்டு சேர்த்து இருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.
உணவு-குடிநீர் கோரி மக்கள் போராட்டமும் நடந்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்தபோது குற்றம்சாட்டிய தி.மு.க., சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்திருந்தால், மக்கள் பாதிப்பை சந்தித்திருக்க மாட்டார்கள்.
எனவே இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டை வழங்க வேண்டும்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்:- 5 முறை எச்சரிக்கை கொடுத்த பிறகே சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டோம். ஒவ்வொரு முறை தண்ணீர் திறக்கும் போதும் லட்சகணக்கான மக்களுக்கு தகவல் தெரிவித்த பின்பு தண்ணீரை திறந்தோம்.
முதலமைச்சர் இதனை கண்காணித்து கொண்டே இருந்தார். ஆனால் நீங்கள் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டது போல் நடைபெறவில்லை.
எடப்பாடி பழனிசாமி:- சாத்தனூர் அணையில் நீங்கள் தண்ணீர் திறக்கும்போது அதிகாலை 2.45 மணிக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு கால் மணிநேரத்தில் சாத்தனூர் அணையை திறந்துவிட்டு இருக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால்தான் பாதிப்பு என்று தவறான தகவல் தெரிவிக்கிறீர்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் உள்ளன. கனமழை காரணமாக அங்கிருந்து வரும் உபரி தண்ணீர் அடையாறு ஆற்றில் சென்றதால் தான் பாதிப்பு ஏற்பட்டது.
அடையாறு ஆற்றில் 1 லட்சம் கனஅடி நீர் செல்லக்கூடிய அளவுக்கு வழிபாதை இருக்கிறது. கனமழை பெய்து கொண்டிருந்தால் என்ன செய்ய முடியும்?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:- செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதால்தான் பாதிப்பு என்று சொல்கிறோம். இந்திய கணக்காயர் அறிக்கையில் கூட செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதை குறிப்பிட்டுள்ளார்கள். அதனை விட என்ன சாட்சி வேண்டும்?
எடப்பாடி பழனிசாமி:- செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். ஆனால் சாத்தனூர் என்பது மிகப் பெரிய அணை. அதனை சொல்லாமல் திறந்து விட்டீர்கள். செம்பரம்பாக்கம் ஏரி குடிநீருக்காக கட்டப்பட்ட ஏரி. அதில் 29 ஆயிரம் கனஅடி திறந்து விட்டபோது எப்படி பாதிப்பு ஏற்படும்? இதன் கீழே உள்ள 100 ஏரிகள் நிரம்பி உபரி தண்ணீரும், அடையாற்றுக்கு சென்றதால்தான் பாதிப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எவ்வளவு அடி என்பது பிரச்சனை இல்லை. திறப்பதற்கு யாரிடம் அனுமதி வாங்குவது என்பதுதான் பிரச்சனை. அதனால்தான் வேறு வழியின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டீர்கள். இதை நான் சொல்லவில்லை. உங்கள் ஆட்சியின்போது தாக்கல் செய்த ஆடிட் ரிபோர்ட் சொல்கிறது.
இது மனித தவறின் காரணமாக ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. (அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் சவால்விட்டு பேசினார்கள்).
அமைச்சர் தா.மோ.அன்பரசன்:- செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். 100 ஏரி எங்கே இருக்கிறது? நாங்கள் இந்த ஏரிக்கு அருகில்தான் வசிக்கிறோம். இந்த ஏரிக்கு ஆதனூரில் இருந்து தண்ணீர் வருகிறது. யாருக்கும் தெரியாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டீர்கள். அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது. 100 ஏரிகள் இருப்பதாக சொன்னீர்கள். செம்பரம்பாக்கம் ஏரியை பற்றி எங்களுக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் வந்து பார்த்தால் தானே உங்களுக்கு தெரியும்.
இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
- நீர்வரத்து தொடர்ந்து உயர்வதால் அணையிலிருந்து நீர்திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து உயர்ந்து வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து உயர்வதால் அணையிலிருந்து நீர்திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து 2,500 கனஅடியாக உள்ள நிலையில் வினாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தனூர் அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நேற்று இரவு முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
- தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து கடந்த டிசம்பர் 1-ந்தேதி நள்ளிரவு மற்றும் 2-ந் தேதி அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை தெரிவித்திருந்தது.
பின்னர், மழையின் தாக்கம் குறைந்ததால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.75 அடியாக உள்ளது. அணையில் 7,041 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
இதனால், தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும். இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணைக்கு வரும் நீர்வரத்து திருக்கோவிலூர் செல்லும் தென்பெண்ணையாற்றில் அப்படியே திறந்துவிடப்படுகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வர தொடங்கியது. மேலும் அதிகரித்து நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 44 ஆயிரத்து 560 கனஅடி நீர் வரத்து தொடங்கி உள்ளது.
இந்த நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 9 கண்மாய்கள் வழியாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் திருக்கோவிலூர் செல்லும் தென்பெண்ணையாறு படுகையில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரையின் இருபுறமும் தொட்டவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
எனவே தென்பெண்ணையாற்றின் படுகையில் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் தண்டோரா மூலம் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் தென் பெண்ணையாற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
ராயண்டபுரம் கிராமத்தின் அருகே ஆற்றின் கரையோரப் பகுதியில் ஒதுங்கிய நிலையில் இருந்த பிணத்தை தண்டராம்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாத்தனூர் அணை பகுதியில் நேற்று முன்தினம் 155.4 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது. தற்போது மழை குறைந்து காணப்பட்டாலும் கிருஷ்ணகிரி அணை நிரம்பி அதன் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சாத்தனூர் அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அணையின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் அணை மற்றும் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி தீர்க்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் மற்றும் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 44,561 கனஅடி தண்ணீர் வருகிறது. புதிய ஷட்டர்கள் பொருத்துவற்காக, பழைய ஷட்டர்கள் அகற்றப்பட்டதால், தண்ணீர் முழுவதும் தென் பெண்ணையாற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது.
நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கக்கூடும் என்பதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் என 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பண்ணையாற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள், பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஜவ்வாது மலையில் பெய்துள்ள மிதமான மழையால் குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணை என 3 அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
செண்பகத்தோப்பு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர், குப்பநத்தம் அணையிலிருந்து 2700 கன அடி, மிருகண்டா நதியிலிருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
3 அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் செய்யாறு, கமண்டல நாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் வருவாய்த்துறையினர் தங்க வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக, 800-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி, குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்களை சூழ்ந்துள்ளன.
30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் தாழ்வானப் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
ஏரிகள் மற்றும் ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், பிரதான சாலைகளை ஆர்ப்பரித்து கடந்து செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் கிராமத்தில், சமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறி ஓலையாற்றில் செல்லும் தண்ணீரானது ஏந்தல் கிராமத்தை சூழ்ந்துள்ளது.
மேலும் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால், கார்-வேன் உள்ளிட்ட வாகனங்கள், பைக் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் உயரம் 119 அடி. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையில் 96 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக வலதுபுற கால்வாயில் இருந்து 200 கன அடி தண்ணீரும், இடதுபுற கால்வாயில் இருந்து 150 கன அடி நீரும் கடந்த ஜனவரி 23-ந் தேதி முதல் திறக்கப்பட்டது.
அன்று முதல் இங்குள்ள புனல் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு தண்டராம்பட்டு மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்போதும் மற்றும் பாசனத்திற்காக நீர் திறக்கும்போதும் புனல் மின்நிலையம் இயங்கும்.
தமிழக அரசு 40 நாட்கள் மட்டுமே பாசன நீர் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி ஜனவரி 23-ந் தேதி முதல் வரும் மார்ச் 4-ந் தேதி வரை பாசன நீர் திறக்கப்படும். அந்த 40 நாட்கள் மட்டுமே மின் உற்பத்தியும் இங்கு நடைபெறும். அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவதால் புனல் மின் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி நடக்கிறது.
பாசனத்துக்காக நீர் திறப்பதற்கு முன் அதாவது ஜனவரி 23-ந் தேதி அணையின் நீர் மட்டம் 96.20 அடி (கொள்ளளவு 3,222 மில்லியன் கன அடி) ஆகும். நேற்று 10 அடி நீர்மட்டம் குறைந்தது. 86.05 அடி (கொள்ளளவு 2,047 மில்லியன் கன அடி) ஆக இருந்தது. இதற்கிடையில் திருக்கோவிலூர் ஆயக்கட்டு பகுதிக்காக 10 நாட்கள் அணையில் இருந்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பு இன்றுடன் நிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு இதே நாளில் சத்தனூர் அணை முழுவதும் நிரம்பியிருந்ததால் 95 நாட்கள் பாசன நீர் திறக்கப்பட்டது. இந்தாண்டு பருவமழை பொய்த்துப்போனதால் அணையில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் 40 நாட்கள் மட்டுமே பாசன நீர் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாசன நீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை தாலுகாவில் 20 ஏரிகளிலும், தண்டராம்பட்டு தாலுகாவில் 10 ஏரிகளிலும் 60 சதவீத அளவு நீர் இருப்பு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை 119 அடி கொண்டதாகும்.
தற்போது அணையில் 96.20 அடி தண்ணீர் உள்ளது. அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்து மலர்தூவி தண்ணீரை வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், சாத்தனூர் ஆணை உதவி செயற்பொறியாளர்கள் அறிவழகன், செல்வராஜீ மற்றும் மதுசூதனன், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்று முதல் 40 நாட்களுக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தாலுகா திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள 34 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படும் 2 ஆயிரத்து 230 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் தாலுகா, சங்கராபுரம் தாலுகாவில் 54 ஏரிகள் பாசன வசதிபெறும். இதன் மூலம் 10 ஆயிரத்து 43 ஏக்கர் 2-ம் போக சாகுபடி பாசன வசதி பெறும்.
பாசன நீரை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரைப்படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அறிவிக்கப்பட்ட தேதிக்கு மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதியை நீட்டிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர். #SathanurDam
தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையின் உயரம் 119 அடியாகும். தற்போது அணையில் 96.40 அடி அளவுக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதாவது 3.249 மில்லியன் கன அடி நீர் உள்ளது.
சாத்தனூர் அணையை பொறுத்தவரை தென்பெண்ணை ஆற்றில் வரும் மழை வெள்ளம் கல்வராயன் மலை பகுதியில் பெய்யும் மழை நீர்ஆகியவற்றையே ஆதாரமாக உள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கல்வராயன் மலை தொடர் பகுதியிலும் தென்பெண்ணை ஆற்றிலும் மழை நீர் வந்து கொண்டிருக்கிறது.
சாத்தனூர் அணைக்கு நேற்று முதல் வினாடிக்கு 162 கன அடி நீர் வர தொடங்கி உள்ளது. எனவே நீர்வரத்து படிபடியாக உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றபடவில்லை. #SathanurDam