என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satwiksairaj Rankireddy"

    • 1965ம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
    • சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

    துபாய்:

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஓங் யியூ சின்-டியோ யி ஜோடியை 16-21, 21-17, 21-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்த சீசனில் சாத்விக்-சிராக் வென்றுள்ள இரண்டாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    இதற்கு முன்பு லக்னோவில் 1965ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின்னர் முதல் முறையாக இந்த ஆண்டு இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் தவிர, சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர்.

    • அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை வென்றனர்.
    • சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு ஏற்கனவே 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.

    கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தொடர்ந்து சிறப்பான வெளிப்படுத்தியது.

    காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை வீழ்த்திய இவர்கள், அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை வென்று இறுதிச்சுற்றை உறுதி செய்தனர்.

    இந்நிலையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில், சாத்விக்-சிராஜ் ஜோடி இந்தோனேசியாவின் ஆல்பியன் ஆர்டியாண்டோ ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், சாத்விக்-சிராஜ் ஜோடி 17-21, 21-23, 21-14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கொரிய ஓபன் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    சாத்விக்-சிராக் ஜோடி கடந்த மாதம் இந்தோனேசிய ஓபனிலும், கடந்த மார்ச் மாதம் சுவிஸ் ஓபனிலும் சாம்பியன் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா ஏமாற்றம் அடைந்தார்
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெய்ராபா லுவாங் மெய்ஸ்னாம் வெற்றி பெற்றார்.

    தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-16, 21-11 என நேர்செட் கேமில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சலிகா உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஹான் யூயே-வை எதிர்கொண்டார். இதில் அஷ்மிதா 15-21, 21-12, 12-21 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெய்ராபா லுவாங் மெய்ஸ்னாம் காலிறுதிக்கு முன்னேறினார். 84-வது தரவரிசையில் உள்ள இவர் 54-வது தரவரிசையில் இருக்கும் மேட்ஸ் கிறிஸ்டன்சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-14, 22-20 என வெற்றி பெற்றார்.

    • சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது.
    • காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என வீழ்த்தியிருந்தது.

    தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    அரையிறுதியில் தைவான் ஜோடியை எதிர்கொண்டது. தங்களைவிட குறைவான தரவரிசையில் உள்ள தைவான் ஜோடியை மிகவும் எளிதாக வீழ்த்தியது.

    இந்திய ஜோடியின் ஆட்டத்தை தைவான் ஜோடியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட் கேமில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சீன ஜோடியை எதிர்கொள்கிறது.

    • முதல் கேம்-ஐ கடுமையாக போராடி 26-24 எனக் கைப்பற்றியது.
    • 2-வது கேமில் முதல் பாதியில் 8-11 என பின்னதங்கிய நிலையில், பின்னர் தொடர்ச்சியாக புள்ளிகளை பெற்றது.

    மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி மலோசியாவின் யெவ் சின் ஓங்- ஈ யி டெயோ-வை எதிர் கொண்டது.

    இதில் முதல் கேமில் இரண்டு ஜோடிகளும் சிறப்பாக விளையாடியது. இறுதியில் இந்திய ஜோடி 26-24 என கடும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றியது. 2-வது கேம்-ஐ 21-15 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.

    முதல் செட்டில் இந்திய ஜோடி 11-9 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் 18-16 என முன்னிலை கண்டிருந்தது. ஆனால் மலேசிய ஜோடி தொடர்ந்து மூன்று புள்ளிகள் பெற்று 19-19 என சமநிலைப் பெற்றது. அத்துடன் 20-19 என முன்னிலையும் பெற்றது.

    அதன்பின் இந்திய ஜோடி வெற்றி பெறுவதற்கு முன்னதாக தொடர்ந்து நான்கு புள்ளிகளை பெற்று முதல் கேம்-ஐ கைப்பற்றியது.

    2-வது கேமில் மலேசிய ஜோடி 11-8 என முன்னிலைப் பெற்றிருந்தது. அனத்பின் 17 புள்ளிகளில் இந்திய ஜோடி 13 புள்ளிகளை பெற்று 21-15 என கேமை கைப்பற்றி வெற்றி பெற்றது.

    அரையிறுதியில் தென்கொரியாவின் வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர்கொள்கிறது.

    • சாத்விக்- சிராக் செட்டி ஜோடி வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர் கொண்டது.
    • இந்திய ஜோடியை எளிதாக தென்கொரிய ஜோடி வீழ்த்தியது.

    மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி தென்கொரியாவின் வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் இந்திய ஜோடியை எளிதாக தென்கொரிய ஜோடி வீழ்த்தியது. அதன்படி 21-10, 21-15 என வெற்றி பெற்று தென்கொரிய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    • மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    • சாத்விக்கின் தந்தை உடல் தகனம் நாளை நடக்கிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்களில் ஒருவரான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டியுடன் இணைந்து 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்ல்வெத் விளையாட்டு, 2023-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இந்த இணை உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதித்தது. கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகி இருக்கும் சாத்விக் சாய்ராஜ் இன்னும் அந்த விருதை பெறவில்லை. டெல்லியில் நடைபெறும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் போர்டு அணிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றுள்ள சாத்விக் கேல்ரத்னா விருதை நேற்று பெற்றுக்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரது தந்தையும், முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமான காசி விஸ்வநாதன் (வயது 65) தனது மனைவி ரங்கமணி மற்றும் குடும்ப நண்பருடன் டெல்லி செல்வதற்காக ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் இருந்து ராஜமுந்திரி விமான நிலையத்திற்கு நேற்று காலை காரில் சென்றார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தகவல் அறிந்த சாத்விக் விமானம் மூலம் மாலை சொந்த ஊர் திரும்பினார். சாத்விக்கின் தந்தை உடல் தகனம் நாளை நடக்கிறது.

    ×