என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satya Nadella"

    • அமெரிக்க நீதித்துறை கூகுள் மீது "ஆன்டி டிரஸ்ட்" வழக்கு பதிவு செய்துள்ளது
    • எங்களால் சந்தையில் கால் பதிக்கவே முடியவில்லை என்றார் நாதெல்லா

    அமெரிக்க வியாபார நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தால், பிற நிறுவனங்களின் எதிர்காலம் அதனால் பாதிக்கப்படலாம் என்பதால் அத்தகைய நிறுவனங்களின் மீது அந்நாட்டில் "ஆன்டி டிரஸ்ட்" (antitrust) எனப்படும் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

    உலகின் முன்னணி இணையவழி வலைதள தேடுதல் இயந்திரமான கூகுள் (Google) எனும் பிரபல நிறுவனத்தின் மீது அத்தகைய ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

    தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு கூகுள் பல கோடிகள் சட்ட விரோதமாக தந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நீதித்துறையால் வழக்கு தொடரப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    உலகின் மற்றொரு முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    வலைதள தேடுதல் இயந்திரங்களுக்கான சந்தையில் கூகுள் வலைதளத்தின் ஆதிக்கம் பிற போட்டியாளர்களை தலைதூக்கவே அனுமதிப்பதில்லை. அந்நிறுவனத்தின் வியாபார தந்திரங்கள் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள், ஆப்பிள் நிறுவனத்தினரோடு போட்டிருக்கும் ஒப்பந்தங்களினால் எங்கள் வலைதள தேடுதல் இயந்திரமான 'பிங்' (Bing) 2009லிருந்து சந்தையில் ஒரு இடம் பிடிக்க எவ்வளவு முயன்றும் இயலவில்லை. கூகுள் தேடுதல் இயந்திரத்திலிருந்து பெறும் பயனர்களின் விவரங்களை கூகுள் நிறுவனம், தங்களின் தேடுதல் இயந்திரத்தின் விளம்பரத்திற்கே பயன்படுத்தி பெரும் வருமானம் ஈட்டுகிறது. அந்த தொகையை ஆதிக்கத்தை நிலைநாட்ட மீண்டும் செலவிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் எங்களின் பிங் சேவையை பயன்படுத்த அனுமதித்தால் அதற்குண்டான செலவினை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், கூகுளின் ஆதிக்கத்திலிருந்து ஆப்பிள் வெளிவர முடியாததால், மைக்ரோசாப்ட், சந்தையிலேயே நுழைய முடியாமல் தவிக்கிறது.

    இவ்வாறு நாதெல்லா சாட்சியம் அளித்தார்.

    3 தசாப்தங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது விண்டோஸ் எனும் இயக்கமுறை மென்பொருளுக்கு  (Operating System) இதே போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி சந்தையில் முதலிடம் பிடித்ததை இப்போது கூறி தற்போது அதே நிலைமை தங்களுக்கு வந்ததும் மைக்ரோசாப்ட் புலம்புவதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • ஒபன்ஏஐ நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் அதிரடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
    • முன்னதாக ஒபன்ஏஐ சி.இ.ஒ.-வாக ட்விட்ச் நிறுவனர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், வெளியாகும் அறிவிப்புகள் டெக் உலகில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், கடந்த ஐந்து நாட்களில் ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக பணிநீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் இன்று (நவம்பர் 22) மீண்டும் அந்நிறுவனத்தின் சி.இ.ஒ.-வாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றது குறித்து அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சாம் ஆல்ட்மேனும் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து கருத்து பதிவிட்டு இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், சாம் ஆல்ட்மேன் மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து சத்ய நாதெல்லா தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஒபன்ஏஐ நிர்வாக குழுவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை வரவேற்கிறோம். நிலையான, நன்கு விவரம் அறிந்த மற்றும் சிறப்பான நிர்வாகத்திற்கு இது முதல்படி என்பதை நாங்கள் நம்புகிறோம். ஒபன்ஏஐ தலைமை பொறுப்பை ஏற்று, அதன் குறிக்கோளை அடைவதற்கு தலைமை பொறுப்பில் இருந்து முக்கிய பங்காற்றுவது குறித்து சாம், கிரெக் மற்றும் நானும் பேச்சுவார்த்தை நடத்தினோம்."

    "உறுதியான கூட்டணியை உருவாக்கி, அடுத்த தலைமுறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மதிப்புகளை எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு வழங்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

    • 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி மக்களுக்கு AI திறன்கள் குறித்து நிறுவனம் பயிற்சி அளிக்கும்.
    • திரு. சத்யா நாதெல்லா, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

    அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் இந்தியாவில் 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது.

    நாட்டின் செயற்கை நுண்ணறிவு (AI) திறன் மற்றும் அதன் சொந்த Azure கிளவுட்-கம்ப்யூட்டிங் சேவைகள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது.

    இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த முதலீடு அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advanta(I)ge India என்ற முன்னெடுப்பு மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி மக்களுக்கு AI திறன்கள் குறித்து நிறுவனம் பயிற்சி அளிக்கப் போகிறது என்றும் நாதெல்லா தெரிவித்துள்ளார்.

    முன்னதாக சத்யா நாதெல்லா பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, " திரு. சத்ய நாதெல்லா, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லட்சியமிக்க விரிவாக்கம் மற்றும் முதலீட்டு திட்டங்கள் பற்றி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    நமது சந்திப்பின்போது, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தது சிறப்பானதாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கு முன், சத்யா நாதெல்லா, தெலுங்கானா முதல்வர்  ரவந்த் ரெட்டியையும், டி ஸ்ரீதர் பாபு மற்றும் உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட அவரது கேபினட் அமைச்சர்களுடன், டிசம்பர் 30, 2024 அன்ற ஐதராபாத்தில் சந்தித்து, மாநிலத்தில் நிறுவனத்தின் தற்போதைய முதலீடுகள் குறித்து விவாதித்தார்.

    • இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல
    • ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று டிரம்ப் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டார்கேட் என்ற ஏ.ஐ. திட்டத்தை அறிவித்தார்.

    ஓபன் ஏஐ, ஜப்பானிய நிறுவனமான SoftBank மற்றும் மைக்ரோசாஃப்டின் கிளவுட் நிறுவனமான Oracle ஆகியவற்றின் பங்களிப்பில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டமே ஸ்டார்கேட்.

    ஸ்டார்கேட் திட்டம் மூலம் மேற்கூறிய நிறுவனங்கள் உதவியுடன் அமெரிக்காவில் ஏஐ உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கு 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் கூறினார்.

    ஆனால் எக்ஸ், ஸ்பெஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் உரிமையாளரும் டிரம்பின் கூட்டாளியுமான எலான் மஸ்க், அவர்களிடம் [அந்த நிறுவனங்களிடம்] அவ்வளவு பணம் இல்லை என்று எக்ஸ் பதவில் தெரிவித்திருந்தார். SoftBank நிறுவனம் 10 பில்லியன் வரை தரும், ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று மஸ்க் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் CNBC செய்தி நிறுவன நேர்காணலின் போது, மஸ்க்கின் கூற்றுகளுக்கு பதிலளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா, என்னால் 80 பில்லியன் டாலர்கள் வரை [ஸ்டார்கேட் திட்டத்தில்]செலவழிக்க முடியும் என்று தெரிவித்தார்.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நம்பலாம். இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல, ஆனால் நிஜ உலகத்திற்காக பயனுள்ள விஷயங்களை உருவாக்குவதே என்றும் அவர் தெரிவித்தார்.

    அவர்களிடம் பணம் இல்லை என எலான் மஸ்க் கருத்தை ஓபன் ஏஐ சிஇஓ சால்ம் ஆல்ட்மேனும் நிராகரித்துள்ளார். ஸ்டார்கேட் திட்டத்திற்கான ஏஐ பரிசோதனையை வேலைகள் ஏற்கனவே தாங்கள் தொடங்கிவிட்டதாகவும், அதை மஸ்க் வந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.  

    ×