என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvIND"

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.
    • தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களிலும் ஹர்திக் பாண்ட்யா விலகி உள்ளார்.

    கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பது குறித்து மருத்துவர்கள் குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. மேலும் அவர் 2 மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடர் வருகிற 23-ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

    இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    • தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
    • கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் ஆட்டம், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் டிசம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறும். அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டி 26-ந் தேதி செஞ்சுரியனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி கேப்டவுனில் நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் சுற்றுப்பயணம் குறித்து தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

    இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கடும் சவாலாக ஜஸ்பிரீத் பும்ரா இருப்பார். அவர்களுக்கு கடும் நெருக்கடியை அவர் கொடுப்பார். பும்ரா பந்து வீசத் தொடங்கினால், எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார். அவரிடம் அனைத்து திறமைகளும் உள்ளன.

    கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். அவர் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். ஸ்டெம்பை நோக்கி பந்துகளை வீசுவதில் அவர் வல்லவர்.

    இந்த முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பெரிய அளவிலான அச்சுறுத்தலைக் கொடுக்கும்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    • டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பவுமா செயல்படுவார்.

    கேப்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 10ந்தேதி டர்பனில் நடக்கிறது. இந்திய தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் காயத்துடன் ஆடிய கேப்டன் பவுமா, வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா ஆகியோருக்கு வெள்ளைநிற பந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெரால்டு கோட்ஜீ, மார்கோ யான்சென், இங்கிடி ஆகியோர் முதல் இரு 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராவதற்காக உள்ளூர் முதல்தர போட்டிகளில் ஆடுகிறார்கள். டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பவுமா செயல்படுவார்.


    தென்ஆப்பிரிக்க 20 ஓவர் போட்டி அணி:

    மார்க்ரம் (கேப்டன்), ஓட்னில் பார்ட்மேன், மேத்யூ பிரீட்ஸ்கே, பர்ஜர், கோட்ஜீ, டோனோவன் பெரீரா, ரீஜா ஹென்ரிக்ஸ், மார்கோ யான்சென், கிளாசென், கேஷவ் மகராஜ், டேவிட் மில்லர், இங்கிடி, பெலுக்வாயோ, ஷம்சி, ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ்.

    தென்ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி அணி:

    மார்க்ரம் (கேப்டன்), ஒட்டினல் பார்ட்மேன், பர்ஜர், டோனி டி ஜோர்ஸி, ரீஜா ஹென்ரிக்ஸ், கிளாசென், கேஷவ் மகராஜ், போங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், பெலுக்வாயோ, ஷம்சி, வான்டெர் டஸன், கைல் வெரைன், லிசாட் வில்லியம்ஸ்

    டெஸ்ட் அணி:

    பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், பர்ஜர், ஜெரால்டு கோட்ஜீ, டோனி டி ஜோர்ஸி, டீன் எல்கர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், இங்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன்.

    • 20 ஓவர் அணி மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செல்வார்கள்.
    • டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் காலதாமதமாக அணியுடன் இணைந்து கொள்வார்கள்.

    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் ஆட்டம், 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    20 ஓவர் தொடர் வருகிற 10-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் 17 முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ந் தேதி செஞ்சுரியனிலும் 2-வது டெஸ்ட் ஜனவரி 3-ந் தேதி கேப்டவுனிலும் நடக்கிறது.

    இந்தநிலையில் தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பெங்களூரில் இருந்து இன்று புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    20 ஓவர் அணி மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செல்வார்கள். டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் காலதாமதமாக அணியுடன் இணைந்து கொள்வார்கள்.

    தென் ஆப்பிரிக்க தொடருக்கு 3 விதமான கேப்டன் நியமனமாகி உள்ளார். 20 ஓவர் போட்டிக்கு சூர்ய குமார் யாதவும், ஒருநாள் போட்டிக்கு லோகேஷ் ராகுலும், டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ரோகித்சர்மா பணியாற்றுவார்கள்.

    சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    • தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • முதல் டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கும், 2-வது டெஸ்ட் நடக்கும் நியூலேண்ட்ஸ் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கும்.

    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

    முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் வருகிற 10-ந் தேதி டர்பனில் நடக்கிறது.

    ஒருநாள் போட்டி 17-ந் தேதியும், டெஸ்ட் தொடர் 26-ந் தேதியும் தொடங்குகிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் காலிஸ் கூறியதாவது:-

    இந்திய அணி ஒரு நல்ல அணி. ஆனால் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினமானது. முதல் டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கும், 2-வது டெஸ்ட் நடக்கும் நியூலேண்ட்ஸ் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கும். இது ஒரு நல்ல தொடராக இருக்கும். 

    ஒரு அணி மற்றொன்றை விட சிறப்பாக விளையாட முயற்சிக்கும். இது ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணியின் வீரர்கள் வரிசையில் மாற்றம் இருக்கும். திறமையான வீரர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆலோசகர்களை பெற்று தங்களை வளர்த்துக் கொண்டால் சிறப்பாக விளையாட முடியும்.

    மூத்த வீரர்கள், ஆட்ட நுணுக்கங்களை பெற்று இருப்பார்கள். அதை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இளம் வீரர்கள் விளையாடாவிட்டாலும், அவர்கள் மூத்த வீரர்களுடன் கற்றுக் கொள்ளக்கூடிய சூழலில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களின் பணியாகும்.

    அறிமுகமில்லாத இடங்களுக்கு விளையாட செல்லும்போது இளம் வீரர்கள், மூத்த வீரர்களிடையே இருந்து அவர்களின் அனுபவங்களை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேகப்பந்துவீச்சுக்கு உகந்த செஞ்சூரியன், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளங்களில் ரன் குவிப்பது சுலபமல்ல.
    • பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்பதை புள்ளி விவரங்களே சொல்லும்.

    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் மட்டும் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த மாத கடைசியில் அந்த நாட்டுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

    இந்நிலையில் பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:-

    பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்பதை புள்ளி விவரங்களே சொல்லும். உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு கடினமான இடங்களில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. குறிப்பாக இங்குள்ள வேகப்பந்துவீச்சுக்கு உகந்த செஞ்சூரியன், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளங்களில் ரன் குவிப்பது சுலபமல்ல.

    ஒவ்வொரு பேட்ஸ்மேனும் இங்கு எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டமிடலுடன் வருவார்கள். அதற்கு ஏற்ப பயிற்சியும் மேற்கொள்வார்கள். எல்லோரும் ஒரே மாதிரி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் நமது வீரர்களுக்கு எப்படி ஆடினால் கைகொடுக்கும்.

    அதை எப்படி களத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதில் தெளிவான நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். களத்தில் நிலைத்து நிற்க வாய்ப்பு அமைந்து விட்டால், அதை வெற்றிக்குரிய இன்னிங்சாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெஸ்ட் வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள்.
    • இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் 10-ந் தேதி நடக்கிறது.

    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் 10-ந் தேதியும், 2-வது போட்டி கெபராவில் 12-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் 14-ந் தேதியும், முதலாவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் 17-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி கெபராவில் 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்லில் 21-ந் தேதியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் 26-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 3-ந் தேதியும் தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களுருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் உள்ளிட்ட 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணி வீரர்கள் சென்றனர். டெஸ்ட் வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள்.

    • ஒருநாள் போட்டிகளில் இந்தியா சிறந்த அணியாக விளையாடவில்லை.
    • உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா நல்ல ரன்களை குவித்து இருக்கிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் தென்ஆப்பிரிக்காவே ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டிகளில் இந்தியா சிறந்த அணியாக விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்காவும் சிறந்த அணியாக விளையாட வில்லை. ஆனாலும் நிலைமைகள் இன்னும் அவர்களுக்கே சாதகமாக உள்ளது. உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா நல்ல ரன்களை குவித்து இருக்கிறது.

    இந்த முழு தொடரிலும் இந்தியாவைவிட தென் ஆப்பிரிக்காவே சற்று ஆதிக்கம் செலுத்தும் என்று நான் பார்க்கிறேன். இது முற்றிலும் தவறாக கூட இருக்கலாம். இது தவறாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு பல போட்டிகள் சாதகமாகவே இருக்கும். மொத்தமுள்ள 8 போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா 5-3 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
    • டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ஜோகன்னஸ்பர்க்கிலும் மழை குறுக்கிடலாம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் மழை பெய்வதற்கு 25 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26-வது சதத்தை அவர் பதிவு செய்தார்.

    ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 346 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 16 பவுண்டரி 4 சிக்சருடன் 164 ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26-வது சதத்தை அவர் பதிவு செய்தார்.

    குறிப்பாக இத்தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் தன்னுடைய கடைசி தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்க்கு நிகராக 26 சதங்களை அடித்த வீரராக வார்னர் சாதனை படைத்துள்ளார். அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த 3-வது வீரர் என்ற பிரைன் லாரா சாதனையை அவர் முறியடித்துள்ளார். அந்த பட்டியலில், 12 சதங்களுடன் குமார் சங்ககாரா முதல் இடத்திலும் 11 சதங்களுடன் அரவிந்தா டீ சில்வா 2-வது இடத்திலும் 10 சதங்களுடன் டேவிட் வார்னர் 3-வது இடத்திலும் 9 சதங்களுடன் பிரையன் லாரா 4-வது இடத்திலும் உள்ளனர்.

    குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 8 இன்னிங்ஸில் 5 சதம் உட்பட வார்னர் 1009* ரன்களை 144.14 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேத்தியூ ஹெய்டன் (8643), மைக்கேல் க்ளார்க் (8625) ஆகிய ஜாம்பவான்களை முந்தி அதிக ரன்கள் அடித்த 5-வது ஆஸ்திரேலிய வீரராகவும் டேவிட் வார்னர் (8651*) சாதனை படைத்துள்ளார். 

    • 26-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.
    • டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளை ஜோகன்னஸ்பர்க் புறப்பட்டு செல்கிறார்.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. இதையடுத்து 26-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.

    டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் முகமது சமியும் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கணுக்கால் காயம் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியைத் தவிர்த்து டெஸ்ட் தொடருக்கு செல்லும் எஞ்சிய வீரர்களுக்கு முகமது சமி செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளை ஜோகன்னஸ்பர்க் புறப்பட்டு செல்கிறார்.

    ரோகித் சர்மா தவிர்த்து மற்ற வீரர்களான விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், நவ்தீப் சைனி ஆகியோர் துபாய் வழியாக தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல இருக்கின்றனர்.

    டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி (உடல்தகுதியைப் பொறுத்து), முகேஷ் குமார், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

    • இந்தப் போட்டியில் பீல்டிங்கின் போது சூர்ய குமார் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
    • தற்போது நான் நலமாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.

    கேப்டன் சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 56 பந்தில் 100 ரன்னும் (7 பவுண்டரி, 8 சிக்சர்), ஜெய்ஷ்வால் 41 பந்தில் 60 ரன்னும் (6 பவுண்டரி,3 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகராஜ், லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் 95 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டேவிட் மில்லர் அதிகபட்சமாக 25 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மார்க்ராம் 14 பந்தில் 25 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்தப் போட்டியில் பீல்டிங்கின் போது சூர்ய குமார் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பெவிலியன் சென்ற அவர் களத்துக்கு வரவில்லை. 

    வெற்றி குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    தற்போது நான் நலமாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது. காயத்தால் பயம் எதுவுமில்லை. எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. சதம் அடித்தது அற்புதமாக இருந்தது.

    இந்த சதம் வெற்றிக்காக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பயமில்லாத கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். வீரர்களின் திறமையை நினைத்துப் பெருமைபடுகிறேன்.

    குல்தீப் யாதவ் பிறந்தநாளில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சிறந்த பிறந்தநாள் இதுவாகும்.

    இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

    அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 17-ந் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

    ×