என் மலர்
நீங்கள் தேடியது "Scientists"
- நாசாவின் எக்சோபிளானட் சர்வே சாட்டிலைட் [TESS] என்ற தொலைநோக்கி மூலம் இதை கண்டுபிடித்துள்ளனர்.
- சூரியனின் எடையில் 26 சதவீதம் உள்ள Gliese 12b கிரகத்தில் 42° செல்ஸியஸ் தட்பவெப்பம் காணப்படுகிறது.
பூமியைப் போல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மைகளைக் கொண்ட வெளிப்புற கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனைச் சுற்றும் கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதுபோல கூறிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றும் கண்டுபிடிக்கப்படும் கிரகங்கள் வெளிப்புற கோள்கள் [எக்ஸோபிளானட்ஸ்] என்று அழைக்கப்டுகின்றன. இதுவரை இதுபோல 5,600 வெளிக்கோள்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நட்சத்திர மண்டலத்தில் 40 ஒளியாண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழ்வதற்கான தன்மைகளைக் கொண்ட புதிய வெளிப்புறக் கிரகத்தை நாசாவின் எக்சோபிளானட் சர்வே சாட்டிலைட் [TESS] என்ற தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கோளுக்கு Gliese 12b என்று பெயரிடப்பட்டுள்ளது.
டுவார்ப் விண்மீனை ஒருமுறை சுற்றிவர இந்த கிரகம் 12.8 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி மற்றும் வீனஸ் [வெள்ளி] ஆகிய கிரங்களின் எடைகளுக்கு இடைப்பட்ட எடையில் உள்ள Gliese 12b கிரகத்தில் திரவ நீர் இருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனின் எடையில் 26 சதவீதம் உள்ள Gliese 12b கிரகத்தில் 42° செல்ஸியஸ் தட்பவெப்பம் காணப்படுகிறது. திரவ நீர் மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் ஆகியவை ஒருங்கே அமைந்த இந்த புதிய கிரகம் குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
- 2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும்.
- 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பக்கால சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்களே இந்த சிறுகோள்கள்.
2024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் [asteroid] 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) விஞ்ஞானிகள், 2024 டிசம்பர் 27 அன்று பூமியிலிருந்து சுமார் 8,29,000 கி.மீ தொலைவிலிருந்து இந்த சிறுகோள் பூமியை நோக்கி வருவதாகக் கண்டறிந்தனர். இந்த சிறுகோள் தற்போது பூமியிலிருந்து 27 மில்லியன் மைல்கள் தொலைவில் சூரிய குடும்பத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கிறது.
சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுக்கொள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்க 1.2சதவீதம் [1-in-83] வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால் பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது. 8 மெகா டன் ஆற்றல் என்பது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகமாகும்.
விண்வெளியில் வைத்து சிறுகோள் மீது மோதலை ஏற்படுத்தி அதன் பாதையை நகர்த்த விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனர். 2024 YR4 சிறுகோளை கவனமாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள் 2032 இல் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறுகோள் என்பது சூரியனைச் சுற்றி வரும் ஒரு சிறிய, பாறைப் பொருளாகும். சிறிய கூழாங்கல் சைஸ் முதல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் விட்டம் வரை இந்த சிறுகோள்கள் காணப்படுகின்றன.

சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பக்கால சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்களே இந்த சிறுகோள்கள். பொதுவாக செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள பெல்ட்டில் இவை காணப்படுகின்றன.
இருதய நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இருதயம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் காத்து கிடக்கின்றனர்.
எனவே, மனித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஜெர்மனியின் முனிச்லுத்விக் மேக்சி மில்லியன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வில் தீவிரமாக உள்ளனர்.

இது ஒரு நல்ல முன்னேற்றம். இதன்மூலம் மனிதர்களுக்கும் பன்றி இருதயத்தை வெற்றிகரமாக பொருத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே இந்த ஆய்வை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது. #pigheart
இந்தோனேசியாவில் கடந்த 28-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி உருவாகி அங்குள்ள பேலு நகரையும் அதை சுற்றி உள்ள பகுதிகளையும் தாக்கியது.
இதில் 800 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் பலர் உயிர் இழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடலில் சுனாமி ஏற்பட்டால் அதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக பல நாடுகள் சேர்ந்து கடலில் பல்வேறு கருவிகளை பொருத்தி உள்ளன.
ஆனால் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சுனாமி தாக்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கருவிகளிலும் அது பதிவாகவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு திடீரென சுனாமி ஏற்பட்டு தாக்கியது. இதனால் பெரிய அளவில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக அந்த மையத்தின் டைரக்டர் ஷெனாய் கூறியதாவது:-
நிலநடுக்கம் ஏற்பட்டதுமே கருவிகள் மூலம் தெரிந்து கொண்டோம். உடனே இந்தோனேசியா உள்ள சர்வதேச தொடர்புகளுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் நாம் கடலில் பொருத்தி உள்ள மிதவைகள், கண்காணிப்பு கருவிகளில் சுனாமி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 3 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்தோம். அப்போதும் அறிகுறி தெரியவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அறிகுறி தெரியாததால் வாபஸ் பெறப்பட்டது.
இவ்வாறு ஷெனாய் கூறினார்.
கடல் ஆய்வியல் மையத்தின் தலைவர் பட்டாபி ராமராவ் கூறியதாவது:-
சுனாமியை கண்டுபிடிக்கும் கருவியில் எந்தவித அறிகுறியும் பதிவாகவில்லை. இது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. 2 காரணங்களால் இது கருவியில் பதிவாகாமல் இருந்து இருக்கலாம். நிலநடுக்கம் ஏற்பட்டதும் கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டு அதன் மூலம் சுனாமி கீழ் இருந்து உருவாகி இருக்கலாம். அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டதும் சிறிய அளவில் சுனாமி உருவாகி பூகோள ரீதியாக அது பெரிதாக மாறி இருக்கலாம். எனவே தான் முன்கூட்டியே கருவிகளில் அளவீடு காட்டவில்லை. இது ஒரு அதிசயமான விஷயமாகத்தான் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Indonesiaquake #Indonesiaquaketsunami
சீனாவை சேர்ந்தவர் ஜி சாக்குன் (வயது 27). அவர் மாணவர் விசாவில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் சிகாகோ நகரில் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தார். 2015-ம் ஆண்டு மின் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் குடியேறுகிற பிற நாட்டினர் அங்கு ராணுவத்தில் சேர்ந்து பணி புரிய முடியும் என்பதால், ஜி சாக்குனும் 2016-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில், இவர் சிகாகோவில் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் சட்டவிரோத உளவு ஏஜெண்டாக பணியாற்றினார் என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிகாகோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கில், அமெரிக்காவில் பணியாற்றுகிற சீன என்ஜினீயர்களையும், விஞ்ஞானிகளையும் குறிப்பாக அமெரிக்க ராணுவ ஒப்பந்தக்காரர்களாக இருப்பவர்களை ஜி சாக்குன் உளவு பார்த்தார் என்று கூறப்பட்டுள்ளது. உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவருக்காகத்தான் இவர் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜி சாக்குன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் எனக்கு தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார். #ChineseNational #Spy
Once again wit d legend @arrahman Sir for #SK14
— Vivek Lyricist (@Lyricist_Vivek) July 26, 2018
Happiness is meeting him often let alone writing 3 back to back albums for d Magician@Siva_Kartikeyan bro is a ray of hope 4 youngsters who dream of achieving big in life
Happy2 work wit d special @Ravikumar_Dir n @RDRajaofficialpic.twitter.com/iaCcYNGMaP

with all ur blessings&support we have started our dream bilingual Project @siva_kartikeyan in @Ravikumar_Dir directorial & Our Proud Academy Award winning @arrahman musical Shoot Starts Today along with Pooja🌸🌸 Bless & Support us😊👍@Rakulpreet#ishagopikar#Banupriya#yogibabupic.twitter.com/FE5SIZuCAJ
— 24AM STUDIOS® (@24AMSTUDIOS) June 27, 2018

நமது வாழ்வில் முன்னர் சந்தித்த பயங்கர விபத்து, மனதை உலுக்கிய சில பிரிவுகள் போன்றவை நமது மூளையின் உட்பகுதியில் மிகவும் ஆழமாக பதிந்து நீங்காத பழைய நினைவுகளாக மீண்டும், மீண்டும் மேலெழுந்து, நமக்கு பதற்றமான சூழலையும், சோகமான மற்றும் பயங்கரமான அச்சமூட்டும் உணர்வுகளையும் ஏற்படுத்தி வருவதுண்டு.
இந்நிலையில், நமக்குள் இதைப்போன்ற பெரிய தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் பதிவுகள் மனித மூளையில்
எந்த பகுதியில் சேமிக்கப்படுகின்றன? என்ற ஆராய்ச்சியில் தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதன்மூலம், மூளையின் ‘டென்ட்டேட் கய்ரஸ்’ dentate gyrus எனப்படும் நியூரான்களின் தொடர் செயல்பாட்டை மட்டுப்படுத்துவதன் வாயிலாக நம்மை வாட்டி வதைக்கும் பழைய நினைவுகளையும் அவற்றின் தாக்கத்தையும் விட்டு மனித சமுதாயத்தை விடுவிக்கலாம் என இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் ஜோஹான்னெஸ் கிராஃப் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மறக்கடிக்கப்பட வேண்டிய பழைய நினைவுகளை அழிப்பதற்கு தேவையான கருவியை (மாற்று முறை) உருவாக்கும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் விரைவில் வெற்றிபெறும் என கருதப்படுகிறது. #badmemories #badmemorieseraser