என் மலர்
நீங்கள் தேடியது "Secretariat"
- அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
சென்னை:
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது.
சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்க செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி சட்ட மன்றத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருமண மண்டபங்கள், ஸ்டேடியங்களில் மது அருந்த அனுமதித்து முதலில் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பிறகு அதில் மாற்றம் கொண்டு வந்து வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாற சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும் திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தவிர தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கான ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதேபோல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் என்னென்ன என்பதை கூட்டம் முடிந்ததும் அதிகார பூர்வமாக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- அச்சம் எதுவுமின்றி உள்ளே செல்லுங்கள் என்று காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைவரும் வெளியேறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெளியே ஓடி வந்த ஊழியர்களிடம் ஒரு பிரச்சனையும் கிடையாது, அச்சம் எதுவுமின்றி உள்ளே செல்லுங்கள் என்று காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
- சுருங்கும் தன்மை காரணமாக டைல்சில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது.
- பூச்சு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என கூறுவது தவறான குற்றச்சாட்டு.
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென அதிர்வு உணரப்பட்டதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், விரிசலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னை தலைமைச்செயலக கட்டிடம் உறுதியாக உள்ளது. அச்சம் வேண்டாம்.
* தலைமைச்செயலக கட்டிடத்தின் உறுதித்தன்மை உருக்குலையவில்லை.
* டைல்சில் ஏற்பட்ட ஏர் கிராக்கை அலுவலக ஊழியர்கள் விரிசல் என நினைத்து பயந்துவிட்டனர்.
* சுருங்கும் தன்மை காரணமாக டைல்சில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது.
* தற்போது பொறியாளர்கள் பரிசோதித்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வந்துள்ளது.
* 1974-ல் கட்டப்பட்ட கட்டிடத்தில் 14 வருடங்களுக்கு முன் சிறுசிறு டைல்ஸ்கள் போடப்பட்டது.
* பூச்சு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என கூறுவது தவறான குற்றச்சாட்டு.
* 1-க்கு 1 என்று அளவில் போடப்பட்டுள்ள பழைய டைல்ஸ்கள் அகற்றப்பட்டு 2-க்கு 2 டைல்ஸ் நாளையே போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச்சர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, யாகம் நடத்தியதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை. யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்றால், எம்எல்ஏக்கள் அனைவரும் யாகம் நடத்தலாமே?

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. 89 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க் கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமைச் செயலகத்தின் 4-வது பிரதான நுழைவு வாயிலின் அருகே ஒரு அறை ஒதுக்கப்பட்டது.
ஆனால் அந்த இடம் போதவில்லை என்றும், கூடுதல் இடம் வேண்டும் என்றும் ஏற்கனவே தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது உள்ள அறைக்கு அருகே உள்ள மற்றொரு அறையை மு.க.ஸ்டாலினுக்காக ஒதுக்க சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அறை மு.க.ஸ்டாலின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படும். எனவே மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே உள்ள அறையை பயன்படுத்துவார்கள்.