search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "separate budget again"

    • அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரெயில்தான் வந்தே பாரத்.
    • 50 சதவீதத்துக்குமேல் டிக்கெட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரெயில்தான் வந்தே பாரத். ஆனால் அந்த ரெயிலில் பல பகுதிகளில் இயங்கும் 50 சதவீதத்துக்குமேல் டிக்கெட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது. இது போன்ற தேவையில்லாத செலவுகளுக்கு பதிலாக சாதாரண மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரெயிலில் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

    1924-ம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரெயில்வே பட்ஜெட் 2016-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்து பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரெயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைத்தனர்.

    இந்திய ரெயில்வே தனி பட்ஜெட் இருந்திருந்தால் ரெயில்வேக்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து வெளியே தெரிந்திருக்கும். ஆனால் அவையெல்லாம் பா.ஜ.க. அரசால் மூடி மறைத்ததும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ரெயில் விபத்துகள் ஏராளமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

    பா.ஜ.க. அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த ரெயில்வேக்கான தனி பட்ஜெட் முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்பி ரெயில்வேக்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து அதை முறையாக பராமரித்து சாதாரண மக்கள் வசதியாக பயணம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×