என் மலர்
நீங்கள் தேடியது "Sevvai"
- சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
- இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால்
திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமும் என மாதம் இருமுறை பிரதோஷம் வரும்.
பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை மட்டும் தான்.
பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும்.
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.
ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.
ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு.
சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும்.
அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும்.
பின்னர் இரவு உணவு சாப்பிடலாம்.
இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.
இந்த நேரம் சிவனுக்கு மிகவும் உகந்த நேரம் ஆகும்.
சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.
- செவ்வாய் என்பது கோபத்தை குறிக்கும்.
- செவ்வாய் தோஷக்காரர்களுக்கு அதிக ஆற்றல் திறன் இருக்கும்.
செவ்வாய் என்பது கோபத்தை குறிக்கும்.
அதனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு கோபம் கொள்ளும் குணம் அதிகமாக இருக்கக்கூடும்.
செவ்வாய் தோஷக்காரர்களுக்கு அதிக ஆற்றல் திறன் இருக்கும்.
அதனை அழிவிற்கு பயன்படுத்தாதவாறு அதனை அவர்கள் சரியாக வழிநடத்திட வேண்டும்.
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமாகும்.
செவ்வாய் தோஷம் திருமணத்தில் டென்ஷன் மற்றும் முரண்பாடுகளை உண்டாக்கும்.
செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும் என நம்பப்படுகிறது.
சென்ற ஜென்மத்தில் தங்கள் கணவன் அல்லது மனைவியை ஒழுங்காக நடத்தாதவர்களுக்கு தான் இந்த தோஷம் உண்டாகும் என நம்பப்படுகிறது.
- செவ்வாய் இரண்டாம் கட்டத்தில் வரும் போது, திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படலாம்
- அவருடைய ஆளுமை குணத்தால் அவருடைய குடும்பத்தாருடன் அவருக்கு நல்லுறவு இருக்காது.
1.செவ்வாய் முதல் கட்டத்தில் வரும் போது, திருமணத்தில் சண்டை சச்சரவுகளையும், வன்முறைகளையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு
2.செவ்வாய் இரண்டாம் கட்டத்தில் வரும் போது, திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபரின் குடும்பம் பாதிக்கப்படும்.
3.செவ்வாய் நான்காம் கட்டத்தில் வரும் போது, தொழில் ரீதியான வாழ்க்கையில் பெரும் தோல்வியை சந்திப்பார்கள். ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறிக்கொண்டே இருப்பார்கள்.
4.செவ்வாய் ஏழாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபரிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றல் திறன் அவரை கடும் கோபக்காரராக வைத்திருக்கும். அவருடைய ஆளுமை குணத்தால் அவருடைய குடும்பத்தாருடன் அவருக்கு நல்லுறவு இருக்காது.
5. செவ்வாய் எட்டாம் கட்டத்தில் வரும் போது, தன் வீட்டு பெரியவர்களின் பகைக்கு ஆளாகி தந்தை வழி சொத்தை இழப்பார்கள்.
6. செவ்வாய் பத்தாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபர் மனநிலை பிரச்சனையால் அவதிப்படுவார். மேலும் எதிரிகளுடன் கூடிய நிதி சார்ந்த நஷ்டங்களை சந்திப்பார்.
- செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது.
- செவ்வாயுடன் சூரியன் குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை அவர்கள் பிறந்தபோது இருக்கும்.
நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.
ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.
உதாரமாக பாலின உறுப்புகளுக்கு அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும்.
காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம் வேறுநபரை நாடாது. கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும்.
இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது.
அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில் இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.
செவ்வாய் ராகு சேர்கையில் மோசமான சூழ்நிலையில் பிறநதிருப்பார்கள்
செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது.
செவ்வாயுடன் சூரியன் குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது செவ்வாய்தான்.
திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, வேற்றுமதத்தில்
மண முடித்து பிரிவினையாதல், பிறருடைய வாழ்க்கை துணைவரின் மேல் காதல் கொள்ளுதல், தகாத உறவு,
சந்தேக குணம், இடைக்கால பிரிவு, மக்கட்பேரின்மை, மணமுறிவு மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமை
இன்மை, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை, முரட்டு பிடிவாதம், சந்ததி இன்மை, சுகமின்மை, ஒழுக்கமின்மை,
இல்லற வாழ்க்கையின் நன்மை அறியாமை, மாங்கல்ய பலமில்லாமை, ஆயுள் பலமின்மை,புத்திர தடை,
தத்து புத்திரம், கர்பம் கலைதல், அற்ப ஆயுள் புத்திரம் , புத்திர சோகம், தாமத புத்திரம்
முதலிய பிரச்சனைகள் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படலாம்.
- கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும்.
- இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதன்பின் திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.
1.செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.
2.கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.
3.செவ்வாய்க்கிழமைகளில் உண்ணாவிரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.
4.செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
5. செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.
6.செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணிய ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
7.இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.
- குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை.
- செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை
1.மேற்சொன்ன இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டாம் வீடுகளில் செவ்வாய் ஆட்சியாகவோ, உச்சமாகவோ, நீசமாகவோ இருந்தால் தோஷம் இல்லை.
2.குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை.
3.சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாமில் இருந்தாலும் தோஷம் இல்லை.
4. சுக்கிரனுக்கு நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்களில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.
5.மேற்கண்ட வீடுகளில் செவ்வாய் சந்திரனுடனோ, புதனுடனோ அல்லது இருவரும் சேர்ந்து இணைந்திருந்தாலோ தோஷம் இல்லை.
6.ராகு, கேதுக்களுடன் செவ்வாய் நெருக்கமாக இணைந்து பலவீனம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
7.மேஷம் விருச்சிகம் கடகம் சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.
8.சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
9.செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை
10.அஸ்தமன செவ்வாய்க்கு தோஷம் இல்லை.
11.செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
- உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.
- இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
வாழைப்பூத் தானம்:
ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து தந்து விட வேண்டும்.
துவரை தானம்:
உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.
இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
- சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும்.
- பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும்.
பூமாதேவியினால் வளர்க்கப்பட்டவன் செவ்வாய் (தரணீ கர்ப்ப சம் பூதம்) என விளக்குகிறார் ஸ்ரீ வியாச பகவான்.
பரத்வாஜ முனிவரின் கருணையினால், அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்குச் சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.
செந்நிறத்தில், கொழுத்து விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பைப் போல் ஜொலிப்பதால், "செவ்வாய்" என்று பெயரை அடைந்தான்.
கிரேக்க பாசையில் "மாஸ்" எனப் போற்றப்பட்ட இக்கிரகம், பூமி, நிலம், செம்பு, உத்தம சகோதரர்கள், சேனைகளுக்குத் தலைமை, பிடிவாதம், நினைத்ததைச் சாதித்தே தீரும் வல்லமை.
முன்கோபம் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்றவர் ஆவார்.
- ஜோதிட சாஸ்திரங்கள் செவ்வாயை முருகனின் அம்சமாக கருதுகிறது.
- அதனால் முருகனை வழிபட தோஷம் அகலும்.
ஜோதிட சாஸ்திரங்கள் செவ்வாயை முருகனின் அம்சமாக கருதுகிறது. அதனால் முருகனை வழிபட தோஷம் அகலும்.
பழனி, வைத்தீஸ்வரன் கோயில், திருச்சிறுகுடி ஆகிய முருகன் தலங்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டதாகும்.
சென்னையில் புராண பெருமையுடன் கூடிய குன்றத்தூர் குமரன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம்,
கபாலி கோவிலில் உள்ள முருகன் சன்னதி, வடபழனி முருகன் கோவில், பூந்தமல்லியில் உள்ள வைத்தீஸ்வரன்
கோவில் மற்றும் பெசன்ட் நகரில் கட்டப்பட்டுள்ள அறுபடைவீடு ஆலயம், வில்லிவாக்கத்தில் உள்ள
அகத்தீஸ்வரர் ஆலயம் அனைத்தும் செவ்வாய் கிரகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரமும்,
தரிசனமும் செய்ய ஏற்ற ஆலயங்கள் ஆகும்.
1. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.
2. 9, 18, 27ந் தேதிகளில் பிறந்தவர்களுக்கு அங்காரகன் உரிய கிரகமாகும்.
3. ஜாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் அங்காரக பகவான். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது.
4. அவரவர்கள் தங்கள் ஜாதகப்படி செவ்வாய் எந்நிலையில் உள்ளது என்பதை அறிந்து பரிகாரம் செய்துகொள்வது நல்லது.
- சரித்திரத்தில் புகழ்பெற்ற மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.
- மேஷம், விருச்சிகம் ஆகிய இரு லக்கனங்கள் அல்லது ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது.
சரித்திரத்தில் அழியாப் புகழ்பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.
மாமன்னன் அலெக்சாண்டர், ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின், ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக விளங்கிய வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் செவ்வாயின் சுப பலம் பெற்றவர்களே.
இவர்கள் அனைவரும், இறுதிக் காலம் வரையில் தங்கள் கொள்கைகளை சிறிதளவும் மாற்றிக் கொள்ளாமல் மூர்க்கத் தனமான துணிவுடன் போராடியதற்கு, அவர்களுக்கு செவ்வாய் அளித்த அதிக பலமே காரணமாகும்.
மேஷம், விருச்சிகம் ஆகிய இரு லக்கனங்கள் அல்லது இவ்விரு ராசிகளிலும் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது அல்லது செவ்வாய் தோஷம் பாதிக்காது என ஜ்யோதிஷ்கிரந்த் என்ற மிகப் புராதனமான, ஜோதிட நூல் அறுதியிட்டுக் கூறுகிறது.
- அங்காரகனுக்கு பிடித்தமான தானியம் துவரை
- அங்காரகனுக்கு பிடித்தமான மலர் செண்பகம், செவ்வரலி
சொல்லுக்கு வலிமை நல்கி
தைரியம் ஆண்மை வீரம்
நல்லவை அனைத்தும் நல்கி
நலிவெலாம் போக்கி வைக்கும்
வல்லதோர் சக்தி கையில்
வைத்தமே அருள் வழங்கும்
அல்லல்கள் தமை அகற்றும்
அங்காரக போற்றி போற்றி!
அங்காரகனுக்கு பிடித்தமானவை
தானியம்: துவரை
மலர்: செண்பகம், செவ்வரலி
வஸ்திரம்: சிவப்பு ஆடை
ரத்தினம்: பவழம்
நிவேதனம்: துவரம் பருப்புப்பொடி அன்னம்
சமித்து: கருங்காலி
உலோகம்: செம்பு