என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shimla"

    • இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.
    • அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    டெல்லியிலிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் இன்று காலை சென்ற அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.

    தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தரையிறங்கும் விமானத்தின் வேகத்தை குறைக்க முடியவில்லை. இதனால் விமானம் ஓடுபாதையில் வளைந்து வெகு தூரம் சென்றது. விமானி உடனடியாக அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி விரைவாக செயல்பட்டதால் பெரிய அளவிலான விபத்து தவிர்கப்பட்டது.

    விமானத்தில் இருந்த துணை முதல்வர் உட்பட 44 பயணிகளும் பாத்திரமாக இருப்பதாக சிம்லா விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மசாலாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டது

    • கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஹட்கோட்டி பௌண்டா சாஹிப்பை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

    கனமழை, நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மண்டியில் 38 சாலைகளும், குலுவில் 14 சாலைகளும் சிம்லாவில் 5 சாலைகளும் மூடப்பட்டன.

    இதையடுத்து ஜூலை 12ம்தேதி வரை கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டது
    • தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரமாக நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால நாட்களில் பனி படர்ந்த மலைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்வார்கள். அதன்படி பனி படர்ந்த மலைப்பகுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இந்த வருடமும் அலைமோதியது.

    இந்த சூழலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 700 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கல்கள் இருந்தபோதிலும் அதிக பனிப்பொழிவு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது. இந்த வருடத்தின் முதல் பனிப்பொழிவானது டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கியிருந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து தற்போது ஏற்பட்டுள்ள மிகையான பனிப்பொழிவு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    • ‘ஒயிட் கிறிஸ்துமஸ்’ மலை போல் ஆன சிம்லா
    • வாகனம் சறுக்கி விழுந்த விபத்துகளால் 4 பேர் பலி

    சிம்லா:

    இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதியாக இருப்பதால் இங்கு குளிர் பல நேரங்களில் மைனஸ் டிகிரிக்கும் சென்றுவிடும். இதனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு விரும்பி வருகின்றனர்.

    திருமணமான புது தம்பதிகள் தங்களின் தேன்நிலவை கொண்டாட அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

    இங்குள்ள மலை பிரதேசங்களில் பனிகள் படர்ந்து வெள்ளியை சிதறிவிட்டது போல் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதை யொட்டி சிம்லாவில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஒயிட் கிறிஸ்துமஸ் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து அதிகரித்திருப்பதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் திணறி வருகின்றனர்.

    இந்நிலையில் சிம்லாவிற்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனங்கள் பனியில் சிக்கி சறுக்கில் விழுந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

    பயணிகளின் வருகையை குறைக்கவும் மேலும் உயிரிழப்புகளை தடுக்கவும் சிம்லாவை சுற்றி உள்ள 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 223 சாலைகளை அந்த மாநில அரசு மூடியுள்ளது.

    சிம்லாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை குறிப்பாக சனிக்கிழமை உச்சக்கட்ட பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு அவரது தாயின் ஓவியத்தை பெண்மணி ஒருவர் பரிசாக அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
    சிம்லா:

    மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிம்லாவில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    முன்னதாக, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சிம்லா சென்றார். மாநாட்டிற்குச் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜ.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தனது காரை திடீரென நிறுத்தச் சொன்னார். சாலையோரம் நின்றிருந்த மக்களில் ஒரு பெண்மணி தனது தாயாரான ஹீரா பென்னின் ஓவியத்தை பரிசளிக்க நின்றிருப்பதைக் கண்டார். 

    இதையடுத்து, பிரதமர் மோடி அந்தப் பெண்ணிடம் இருந்து தாயின் ஓவியத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்குப் பாராட்டு தெரிவித்தார்.
    இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவில் ஜீப் ஒன்று சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். #Shimla
    சிம்லா:

    இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள தியுனி சாலையில் ஸ்னைல் என்ற பகுதி அருகே இன்று காலை பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஜீப், எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்டு மாதத்தில் சிம்லாவில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ShimlaHeavyrain
    சிம்லா:

    உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலங்கள் முழுவதிலும் உள்ள ஏரிகள் நிறைந்து வருகின்றன. 

    இந்நிலையில், இமாசலப்பிரதேசம் மாநிலத்தின்  தலைநகரமான சிம்லாவில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த 1901ல் சிம்லாவில் 277 மிமீ மழை பதிவானது.
    இதற்கு அடுத்தபடியாக ஆகஸ்டு மாதம் 13-ம் தேதி காலை 8 மணி வரை 172. 6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் 13-ம் தேதி காலை 8 மணியளவில் 73.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 2011ல் 75 மிமீ மழை பதிவானது. 

    இதேபோல், லாஹவுல், ஸ்பிடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். #ShimlaHeavyrain
    இமாச்சலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலையில், பொதுமக்கள் முதல்வர் மற்றும் மந்திரிகளின் வீட்டை முற்றுகையிட்டு போராடத் தொடங்கியுள்ளனர்.
    சிம்லா:

    இமாச்சலப்பிரதேசம் தலைநகரான சிம்லா பிரபல சுற்றுலாத் தளமாகும். தற்போது கோடைக்காலம் என்பதால் அங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிம்லா நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    நகரத்திற்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இல்லாத காரணத்தால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 22 மில்லியன் லிட்டர் தேவை என்ற நிலையில், தற்போது 18 மில்லியன் லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது. அதுவும், லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது.

    போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பெரும்பாலான சொகுசு ஓட்டல்கள் மூடப்பட்டன. முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்கள் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய துயரம் உள்ளது. இதனால், கொதிப்படைந்த பலர் முதல்வர் மற்றும் மந்திரிகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். 
    இமாசலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவுக்கு 6 நாள் பயணமாக வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோரை மாநில கவர்னர், முதல் மந்திரி உள்பட பலர் வரவேற்றனர். #RamnathKovind #Shimla
    சிம்லா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் இன்று இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் சிம்லாவுக்கு வந்தனர்.

    சராப்ரா பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய அவர்களை மாநில கவர்னர் ஆசார்யா தேவ்ரத் மற்றும் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், மாநில மந்திரி மொகிந்தர் சிங் தாக்குர் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். #RamnathKovind #Shimla
    ×