என் மலர்
நீங்கள் தேடியது "ship accident"
- பாலத்தில் 20 டன் சுமை வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது
- சம்பவம் குறித்து அந்த கப்பலின் கேப்டன் விசாரிக்கப்பட்டு வருகிறார்
சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள நகரம், குவாங்சோ (Guangzhou). முக்கிய துறைமுக நகரமான இது, பெர்ல் நதியின் (Pearl River) டெல்டா பகுதியில் உள்ளது.
2004ல் குவாங்சோ பகுதியில் நான்ஷா (Nansha) மாவட்டத்தில் கப்பல்களில் சரக்குகளை ஏற்றி இறக்கும் தளம் ஒன்று உருவானது.
2021லேயே அங்குள்ள லிக்சின்சா (Lixinsha) பாலத்தில் கப்பல்கள் மோதாத வண்ணம் சீரமைக்க அப்பிராந்திய அதிகாரிகள் முடிவெடுத்தனர். ஆனால், சீரமைக்கும் பணிகள் பல காரணங்களுக்காக அது தள்ளி போடப்பட்டு வந்தன.
2020ல், 20 டன் வரை எடையுள்ள சுமையுடன் அந்த பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், போசான் (Foshan) பகுதியிலிருந்து குவாங்சோ நோக்கி சென்ற ஒரு கப்பல், அந்த பாலத்தின் கீழே செல்லும் போது எதிர்பாராத விதமாக அதன் மீது மோதியது.

இதில் அப்பாலத்திலிருந்து ஒரு பேருந்து உட்பட 5 வாகனங்கள் தண்ணீரில் விழுந்தன.
இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார். மேலும், 3 பேர் காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் நடைபெறுகிறது.
இந்த மோதலால், பாலத்தின் ஒரு பகுதி உடைந்தது. பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே அந்த கப்பல் கீழே சிக்கிக் கொண்டது.
விபத்தில் சிக்கிய அந்த கப்பலில் சரக்கு ஏதும் கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக, அந்த கப்பலின் கேப்டன் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
கப்பலை பாலத்தின் கீழிருந்து வெளியே மீட்கும் பணி மும்முரப்படுத்துள்ளது. இதனால், விபத்து நடந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- 2 மாலுமிகள் கடலில் விழுந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- மீட்கப்பட்ட மாலுமிகள் ஸ்பெயினின் கார்டகினா நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் ஜெயின் பீட்டர்ஸ் பெர்க் நகரில் இந்து கடந்த 12ம் தேதி விளாடிவொஸ்டோக் நகரில் உள்ள துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 16 மாலுமிகள் பயணித்தனர்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி மத்திய தரைக்கடல் வழியாக கடல் வழியாக கப்பல் சென்றுகொண்டிருந்தது. ஸ்பெயினின் அகுலியாஸ், அல்ஜீரியாவின் ஓரன் நகர்களுக்கு அருகே சர்வதேச கடல்பரப்பில் மத்திய தரைக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது கப்பலின் எஞ்சின் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த ஸ்பெயின் கடற்படையினர் மற்றும் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பிற கப்பல்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் ரஷிய கப்பலில் இருந்து 14 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். அதேவேளை, 2 மாலுமிகள் கடலில் விழுந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட மாலுமிகள் ஸ்பெயினின் கார்டகினா நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ரஷியாவுக்கு திரும்பி அனுப்பப்பட உள்ளனர். அதேவேளை, தீப்பற்றிய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.