என் மலர்
நீங்கள் தேடியது "Shubman Gill"
- பலமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
- பேட்டிங்களில் சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
அறிமுக சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் சாம்பியன் பட்டம், 2-வது வருடம் இரண்டாவது இடம் பிடித்தது. கடந்த வருடம் சுப்மன் கில் தலைமையில் பிளேஆஃப் சுற்றை கூட எட்ட முடியாத நிலையில், இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் மீண்டெழும் முனைப்பில் உள்ளது.
பேட்ஸ்மேன்கள்
சுப்மன் கில், ஜோஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், ஷெர்பேன் ரூதர்போர்டு, கிளென் பிலிப்ஸ்
ஆல்-ரவுண்டர்கள்
நிஷாந்த் சிந்து, மஹிபால் லாம்ரோர், வாஷிங்டன் சுந்தர், முகமது அர்ஷத் கான், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், கரிம் ஜனத், சாய் சுதர்சன், ஷாருக் கான்.

பந்து வீச்சாளர்கள்
ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர், ஜெரால்டு கோயட்சீ, குர்னூர் சிங் பிரார், இஷாந்த் சர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா, ராகுல் டெவாட்டியா, ரஷித் கான்
தொடக்க பேட்ஸ்மேன்கள்
சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வந்தனர். தற்போது ஜாஸ் பட்லர் அணியில் இணைந்துள்ளார். இதனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் என்பதில் அணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணிக்காக சமீப காலமாக சிறப்பாக விளையாடவில்லை. ஐபிஎல் போட்டியில் பேட்டிங் கிளிக் ஆகிவிட்டால் பட்டைய கிளப்ப வாய்ப்புள்ளது.
மிடில் ஆர்டர்
மிடில் ஆர்டர்தான் சற்று பலவீனமாக உள்ளதாக தோன்றுகிறது. சுப்மன் கில், பட்லர் தொடக்க வீரராக களம் இறங்கினால் சாய் சுதர்சன் 3-வது வரிசையில் களம் இறங்குவார். அதன்பின் கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், லாம்ரோர் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் முகமது அர்ஷத் கான், நிஷாந்த் சிந்து ஆகியோர் தங்களது பங்களிப்பை கொடுக்க முடியும்.

வேகப்பந்து வீச்சாளர்கள்
ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த சர்மா முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் கோயட்சீ, குர்னூர் சிங் பிரார், கெஜ்ரோலியா உள்ளனர். ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
சுழற்பந்து வீச்சில்
ரஷித் கான், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், வாஷிங்டன் சுந்தர், டெவாட்டியா என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களுடன் மானவ் சுதர் உள்ளார். பிலிப்ஸ், ஷாருக் கானும் சுழற்பந்து வீசக் கூடியவர்கள். இதில் ரஷித் கான், சாய் கிஷோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.
வெளிநாட்டு வீரர்கள்
பட்லர், ருதர்போர்டு, கிளென் பிலிப்ஸ், கரிம் ஜனத், ரபாடா, கோயட்சீ, ரஷித் கான் ஆகியோர் உள்ளனர். இதில் பட்லர், பிலிப்ஸ், ரஷித் கான், ரபாடா ஆகியோர் ஆடும் லெவனில் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ரபாடாவிற்குப் பதிலாக பட்லர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கலாம். பேட்டிங், பவுலிங்கை சமநிலைப் படுத்தும் வகையில் தேர்வு இருக்கும்.
- என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.
- நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளது. இதன் தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் இந்த சீசனில் ஒரே போட்டியில் 300 ரன்களை அடிப்போம் என்று குஜராத் அணியின் கேப்டன் கில் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கேப்டன் பொறுப்பையும் பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.
பேட்டராக ஆக வேண்டும் என நான் எடுத்த முடிவு சிறந்ததென நினைக்கிறேன். பீல்டிங், அல்லது களத்துக்கு வெளியே இருக்கும்போது கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பேன். அதிகமான பேட்டிங் செய்வது எனக்கு நல்லதாக இருக்கிறது.
கேப்டனாக இருப்பதின் சுவாரசியமான, சவாலான விஷயம் என்னவென்றால் தினமும் நீங்கள் ஒரு வீரரைப் பற்றி அல்லது உங்களைப் பற்றி புதியதாகக் கற்றுக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.
நெக்ராவிடம் இருந்து எனக்கு கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் மிகவும் பொக்கிஷமானது. எங்களது சொந்த மைதானம் மிகவும் உதவியாகவே இருக்கிறது. வெளி இடங்களில் நன்றாக விளையாட வேண்டியுள்ளது.
கடைசி சீசன் திட்டமிட்டபடி செல்லவில்லை. ஆனால், அதற்காக வித்தியாசமாக எதுவும் செய்ய தோன்றவில்லை. கடைசி 3 ஆண்டுகளில் எங்களுக்குதான் அதிகமான வெற்றி விகிதம் இருக்கின்றன. அதையே கடைப்பிடித்தால் போதுமானது. இந்த சீசனும் நன்றாகவே செல்லும்.
சூழ்நிலை சரியாக இருந்தால் 240, 250 அல்லது 260 ரன்கள் அடிக்கலாம். அதற்கு மேல் அடிப்போமா தெரியாது. ஆனால், சில விக்கெட்டுகளில் 150 அல்லது 160 போதுமானதாக இருக்கலாம். சூழ்நிலைக்கு தகவமைப்பதுதான் சிறந்த அணிக்கான தகுதி.
என்று கில் கூறினார்.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐ.சி.சி. வழங்கி வருகிறது.
- பிப்ரவரி மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பரிந்துரை செய்யப்பட்டார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றார். சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார்.
ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் அலானா கிங் வென்றார்.
- நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார்.
- U-19 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனது நியூசிலாந்தில்தான்.
இந்திய அணியின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மான் கில். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடியுள்ளார். முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டியில் ஓரளவு இடம் கிடைக்கிறது.
தற்போது நியூசிலாந்து தொடரில் விளையாட இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகவில்லை.
சுப்மான் கில் நியூசிலாந்தில் நடைபெற்ற U-19 உலகக் கோப்பையில் விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகவும் ஆர்வமாக உள்ளார்.
இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அப்போது சையது முஷ்டாக் அலி டிராபியில் விளையாடியது குறித்து ஒளிபரப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அப்போது சுப்மான் கில் கூறியதாவது:
நான் பயிற்சி செய்த சில விஷயங்களை செயல்படுத்த முடிந்தது. சிக்சர் விளாசுவது பவரால் அல்ல. அது டைமிங் ஷாட்டால்தான் சாத்தியம் என்று நினைப்பவன் நான். அதை சரியான நான் பெற்றால், என்னால் சிக்சர் விளாச முடியும் என்று எனக்குத் தெரியும்.
அதேபோல் பவுண்டரி, சிக்சரால் ரன்கள் அடிப்பதை விட ஓடி எடுக்கும் ரன்களைத்தான் நான் எதிர்பார்ப்பேன். டாட் பால் இல்லாமல் விளையாட விரும்புகிறேன். முடிந்த அளவு சிங்கிள், டபுள்ஸ் அடிக்க வேண்டும்.
2019-ல் இங்குதான் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனேன். இங்கே வருவதை சிறந்ததாக உணர்கிறேன். நிச்சயமாக, நியூசிலாந்திற்கு மீண்டும் வருவதில் எனக்கு இனிமையான நினைவுகள் உள்ளன. நான் நியூசிலாந்திற்குச் செல்வேன் என்று எனக்குத் தெரிந்த போதெல்லாம், அது ஒரு புன்னகையைத் தருகிறது.
இவ்வாறு சுப்மான் கில் தெரிவித்தார்.
- ரோகித் சர்மா இல்லாததால் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
- 14 இன்னிங்சில் ஒரு சதம் 4 அரைசதம் விளாசியுள்ளார்.
இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான கில். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குகிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவிற்கு அவ்வப்போது ஓய்வு அளிக்கப்படும்போது சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இதுவரை 14 இன்னிங்சில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் விளாசியுள்ளார். சராசரி 60-க்கு மேல் ஆகும்.
நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரின் முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 45 ரன்கள் எடுத்திருந்தார்.
இரண்டு மூன்று முறை மழையால் போட்டி நிறுத்தப்பட்டு இறுதியாக கைவிடப்பட்டது. இப்படி நடப்பதால் வீரர்கள் ஏமாற்றம் அடைவதுடன் எரிச்சலும் அடைவார்கள். ரசிகர்களும் அதேபோல்தான்.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்த அணியில் இடம் பிடிப்பதற்கு அச்சாரம் போட்டிவிடலாம் என நினைத்திருந்தார்.
போட்டி ரத்தான பிறகு, எதிர்காலம் மற்றும் மழை பெய்தால் போட்டியை நடத்த மாற்று ஏற்பாடு குறித்து பேட்டியளித்தார்.
இதுகுறித்து சுப்மன் கில் கூறியதாவது:-
உள்விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் விளையாடுவது சற்று கடினம். ஒருவேளை மழை பெய்தால் மைதானத்திற்கு மேல் கூரை அமைக்கலாம். இது எல்லாம் கிரிக்கெட் போர்டு எடுக்க வேண்டிய முடிவு. அடிக்கடி உள்ளே செல்வது, பின்னர் வெளியே வருவது இது இரண்டும் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் எரிச்சலூட்டும்.
ஏராளமான போட்டிகள் மழையால் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து ஒரு நிலைப்பாட்டை நான் எப்படி எடுப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. இது மிகப்பெரிய முடிவு. ஆனால் மேற்கூரை அமைப்பதாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும்.
இந்திய அணியில் நிரந்த இடம், தொடக்க பேட்ஸ்மேன் என்ற முன்னோக்கிய யோசனையை நான் பார்க்கவில்லை. அதிகப்படியான வாய்ப்பை பெறுவதற்கான அனைத்தையும் பெற முயற்சிப்பேன். அதன்பின் அதிக ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்காக மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்க வேண்டும்.
முதல் ஒருநாள் போட்டியில் கூட நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அணி நிர்வாக கூட்டத்தில் கூட நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்துதான் பேசப்படும். நிலைத்து நின்ற பேட்ஸ்மேன் இன்னிங்சை பினிஷ் செய்தால், அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்தார்.
- சச்சின், சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துவக்க வீரராக வாய்ப்பினை பெற்ற சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற 1-வது ஒருநாள் போட்டியில் அரை சதமும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடிய போது நியூசிலாந்தில் தான் அறிமுகமானார்.
அந்த வகையில் தற்போதும் நியூசிலாந்து நாட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் எதிர்கால இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக தனது இடத்தினை உறுதி செய்யும் வகையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
எனவே ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.
அந்த வகையில் துவக்க வீரராக இந்திய அணிக்காக விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 495 ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் துவக்க வீரராக முதல் 10 இன்னிங்ஸ்களில் 478 ரன்களையும், ராகுல் டிராவிட் 463 ரன்களையும், ஷிகார் தவான் 432 ரன்களையும், சேவாக் 425 ரன்கள் அடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சுப்மன் கில் 14 இன்னிங்ஸ்களில் 674 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்க வீரராக மாறியுள்ளார். அதோடு முதல் 14 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவர்களின் பட்டியலிலும் ஷ்ரேயாஸ் ஐயரை (634) அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
- விராட் கோலி, ஷூப்மன் கில் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-ஷூப்மன் கில் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16-வது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் ஷூப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. 89 பந்துகளில் சதம் அடித்த ஷுப்மன் கில், 116 ரன்கள் சேர்த்த நிலையில், இலங்கை வீரர் ரஜிதாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதேபோல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் சதம் அடித்து அசத்தினர். சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 46-வது சதம் இதுவாகும்.
- ஐதராபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
- ஷூப்மான் கில்லுடன் இணைந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷூப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். கேப்டன் ரோகித் 34 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின்னர் ஷூப்மான் கில்லுடன் இணைந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். சூரியகுமார் யாதவ் 31 ரன், ஹர்திக் பாண்ட்யா 28 ரன், வாஷிங்டன் சுந்தர் 12 ரன் சேர்த்தனர். மறுமுனையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். ஹாட்ரிக் சிக்சர் அடித்து இரட்டை சதத்தை நிறைவு செய்தபோது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷூப்மன் கில் பெற்றுள்ளார்.
- ஷூப்மான் கில் 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இரட்டை சதம் விளாசினார்
- நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல், ஹென்றி சிப்லி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷூப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். கேப்டன் ரோகித் 34 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின்னர் ஷூப்மான் கில்லுடன் இணைந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். சூரியகுமார் யாதவ் 31 ரன், ஹர்திக் பாண்ட்யா 28 ரன், வாஷிங்டன் சுந்தர் 12 ரன் சேர்த்தனர். மறுமுனையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். தொடர்ந்து ஆடிய அவர் 208 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் 5 ரன்னுடனும், ஷமி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல், ஹென்றி சிப்லே தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.
- இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஷுப்மான் கில் 116 ரன்கள் அடித்திருந்தார்.
- ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஐதராபாத்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஷுப்மான் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 87 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் இரட்டை சதமடித்து 208 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடந்த இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஷுப்மான் கில் 116 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷுப்மான் கில் படைத்தார். கில் அதிவேகமாக 1000 ரன்களை 19 இன்னிங்சில் அடித்தார். இதற்கு முன் விராட் கோலியும், ஷிகர் தவானும் 24 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டியிருந்தனர்
மேலும், மிக குறைந்த வயதில் இரட்டை சதமடித்த வீரர் ஷுப்மான் கில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி தரப்பில் ஒருநாள் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
- ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய ஐந்தாவது இந்திய வீரர் சுப்மன் கில் ஆவார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.
நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். அவர் 149 பந்துகளில் 9 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் குவித்தார்.
ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய ஐந்தாவது இந்திய வீரர் சுப்மன் கில் ஆவார். அதேபோல் இந்திய அணியும் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது, இந்திய அணி தரப்பில் ஒருநாள் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
மேலும், அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்தவரும் இந்திய வீரர் தான். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 265 ரன்கள் எடுத்துள்ளார்.
இரட்டை சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர்(200), சேவாக்(219), இஷான் கிஷன்(210), ரோகித் சர்மா(209)(208)(265) ஆகியோர் வரிசையில் கில் இணைந்தார்.
இந்திய வீரர்கள் தவிர நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (237), வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (215), பாகிஸ்தான் வீரர் ஃபஹர் ஜமான் (210) ஆகியோர் மட்டுமே இரட்டை சதம் அடித்துள்ளனர்.
- நியூசிலாந்து அணிக்கு எதிராக தனிநபர்கள் எடுத்த அதிகபட்ச ரன்னாக 186 ரன்கள் இருந்தது.
- 24 வருடங்களுக்கு பிறகு சச்சினினின் இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 208 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 24 வருட சாதனையை சுப்மன் கில் தகர்த்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக தனிநபர்கள் எடுத்த அதிகபட்ச ரன்னாக 186 ரன்கள் இருந்தது. இதனை 1999-ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்தார்.
இந்நிலையில் 24 வருடங்களுக்கு பிறகு சச்சினினின் இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ ஹேடன் 181 ரன்களும், கேலகன் 169 ரன்களும் முன்னாக எடுத்திருந்தனர். இவை அனைத்தையும் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.