என் மலர்
நீங்கள் தேடியது "siddique"
- மலையாளம், தமிழ் என பல மொழி படங்களை இயக்கியவர் சித்திக்.
- இவர் விஜய்யின் ‘காவலன்’ திரைப்படத்தை இயக்கினார்.
பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.

சித்திக்
கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் சித்திக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்தனர்.
- இயக்குனர் சித்திக் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
பிரபல மலையாள இயக்குனரான சித்திக் (வயது 63) கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். நோய் தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இயக்குனர் சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சித்திக் இன்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இயக்குனர் சித்திக் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.
- இயக்குனர் சித்திக் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.
- இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சித்திக்
இந்நிலையில், நடிகர் சரத்குமார், இயக்குனர் சித்திக்கிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிரபல மலையாள இயக்குனரும், தமிழில் சிறந்த படங்களை இயக்கியவரும், சிறந்த திரைப்பட எழுத்தாளருமான சித்திக் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. திரைத்துறைக்கு ஈடில்லா இழப்பை ஏற்படுத்தி மறைந்த சித்திக் பிரிவால் வேதனையில் வாடும், அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார்.
- இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வந்த இயக்குனர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என் இதயம் கனக்கிறது. சித்திக் சாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரமான தருணத்தில் உங்கள் அனைவருடனும் நான் நிற்கிறேன்.
'பிரண்ட்ஸ்' திரைப்படம் எனக்கு பல வழிகளில் முக்கியமான திரைப்படம். படப்பிடிப்பின் போது நடிப்பில் சிறிய முன்னேற்றம் செய்தாலும் நடிகர்களைப் பாராட்டுவார். படப்பிடிப்பைத் தாண்டி எடிட் செய்யும் போதும், எனது நடிப்பு குறித்த தனது கருத்துகளை அன்புடன் தெரிவிப்பார்.

சூர்யா பதிவு
'பிரண்ட்ஸ்' படம் பண்ணும்போது அவர் புகழ்பெற்ற மூத்த இயக்குனர். ஆனால் அவர் தனது நட்பு அணுகுமுறையால் படப்பிடிப்பின் போது அனைவரையும் சமமாக நடத்துவார். படப்பிடிப்பில் அவர் கோபமாகவோ குரலை உயர்த்தியோ நான் எப்போதும் பார்த்ததில்லை. அவருடன் பணிபுரிவது என்றென்றும் நான் விரும்பும் அனுபவம். நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பே என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார். என்னையும் என் திறமையையும் நம்புவதற்கான உள்நம்பிக்கையை அவர் கொடுத்தார். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் என் குடும்பத்தை பற்றி விசாரிப்பார்.
நடிகராக நான் உருவாகும் ஆண்டுகளில் என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி சார். நான் உங்களை மிஸ் செய்கிறேன். நீங்கள் கொடுத்த அன்பும் உங்கள் நினைவுகளும் எங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இயக்குனர் சித்திக் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
- இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.

இயக்குனர் சித்திக் வீட்டிற்கு சென்ற சூர்யா
கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வந்த இயக்குனர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சமீபத்தில் காலமானார். இவரது மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சூர்யா மறைந்த இயக்குனர் சித்திக் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
- விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
நடிகர் விக்ரம் 'சித்தா' பட இயக்குநர் அருண்குமாருடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் சீயான் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அதைத்தொடர்ந்து படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் மலையாள நடிகரான சித்திக் நடிக்கவிருக்கிறார் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவர் 350 மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
டைட்டில் டீசரில் மளிகை கடையில் வேலை செய்யும் விக்ரம் திடீர் என்று துப்பாக்கி எடுத்து சுடும் காட்சிகள் மிரட்டலாக உள்ளது. மற்ற படங்களில் இல்லாத ஒரு விஷயம் இப்படத்தில் உள்ளது. படத்தலைப்பில் வீர தீர சூரன் பாகம் - 2 என்று வெளியிட்டுள்ளனர். முதலில் பாகம் இரண்டை வெளியிட்டபின் பாகம் ஒன்றை வெளியிடப்போகிறார்கள்.
இந்த வீடியோவில் விக்ரமின் தோற்றம் நம் கவனத்தை கவர்கிறது இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சித்திக் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது.
- ரேவதி சம்மத் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது முதல், பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
பின்னர் முதன்முறையாக பெயர் குறிப்பிட்டு மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா பாலியல் தொல்லை புகார் கூறினார். மலையாள சினிமாவில் நடிக்க வந்த தன்னை பாலியல் ரீதியாக அணுகினார் என்று சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித்-மீது புகார் கூறியிருந்தார்.

இந்த புகாரை அடுத்து சினிமா அகாடமி தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு மேலும் ஒரு மலையாள நடிகை, நடிகர் சித்திக் ஹோட்டலில் வைத்து அத்துமீறியதாக புகார் கூறினார். இதைத்தொடர்ந்து நடிகர் சித்திக் மலையாள சினிமா அசோசியேசன் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஹேமா கமிஷன் அறிக்கையைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், ராஜினாமாக்களும், விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் சித்திக் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது என்று ரேவதி சம்பத் கூறி இருந்தார். அதில் சித்திக் ரேவதி சம்மத்திடம் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப்பில் பேசியதாகவும் படம் குறித்து பேசுவதற்கு ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் புகார் அளித்தார்.
இந்த நிலையில் நடிகை ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் பேரில் கேரள போலீசார் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ.
- சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் நடிகைக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ ஒன்று வெளியாகி வைராகி வருகிறது.

இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை பீனா ஆன்டனி , `இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் சித்திக்கின் மகன் ஷாபி மரணம் அடைந்த போது என்னால் செல்ல முடியவில்லை. அதன்பின் இதனால் ஒரு நிகழ்வின் போது அவரை சந்திக்க நேர்ந்தது.
அப்போது அவரை ஆறுதல் படுத்துவதற்காக கட்டித்தழுவியதாகவும் சித்திக்கின் மகன் ஷாபி என்மீது அன்பாக இருந்ததால் அவனது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இப்போது அந்த வீடியோவை தவறான கருத்துக்களுடன் நெட்டிசன்கள் பகிர்ந்து தன்னையும், தன்னுடைய குடும்பத்தினரையும் வேதனைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது' என்றும் கூறி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.




