என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simon Doull"

    • இருவரும் ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளரை விமர்சித்துள்ளனர்.
    • ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது.

    ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. அந்தப் போட்டியின் போது, ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் வர்ணனை செய்வதற்காக வந்தால் மைதானத்திற்குள் அனுமதிக்க முடியாது என பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஐபிஎல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியை விமர்சித்து அவர்கள் இருவரும் பேசியதுதான் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

    2025 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் இருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன.

    இந்த விவகாரம் குறித்து வர்ணனையின் போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் சுஜன் முகர்ஜியை நேரடியாக விமர்சித்திருந்தனர். அது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை கோபம் அடைய செய்து இருக்கிறது.

    இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு அளித்திருந்த விளக்கத்தில், ஐபிஎல் விதிமுறைகளின் படிதான் தாங்கள் பிட்சுகளைத் தயாரித்து வருவதாகவும், எந்த அணிக்கும் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கான உரிமை இல்லை என விதிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெளிவுபடுத்தி உள்ளது.

    அதைத்தொடர்ந்து, தற்போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் தங்களின் மைதான பிட்ச் பராமரிப்பாளரை விமர்சித்ததால் அவர்களை அனுமதிக்க முடியாது என பிசிசிஐக்குக் கடிதம் எழுதி இருக்கிறது பெங்கால் கிரிக்கெட் சங்கம்.

    ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த ஆண்டில் தான் ஒவ்வொரு அணியும் தங்களின் சொந்த மைதானத்தில் தங்களுக்கு விருப்பமான பிட்ச் உருவாக்கப்படவில்லை என்ற புகாரை முன் வைத்துள்ளனர்.

    • பாபர் அசாம் 2023 பிஎஸ்எல் தொடரின் போது சொந்த சாதனைக்காக விளையாடினார் என இவர் விமர்சித்திருந்தார்.
    • சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடுங்கள் என்று வெளிப்படையாக விமர்சித்திருந்த சைமன் டவுல் தற்போது விராட் கோலியையும் நேரடியாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 61, கேப்டன் டு பிளேஸிஸ் 79, மேக்ஸ்வெல் 59 என ரன்களை குவித்தனர்.

    அதைத்தொடர்ந்து 213 ரன்களை துரத்திய லக்னோ கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது மன்கட் செய்வதில் ஹர்ஷல் படேல் சொதப்பிய நிலையில் தினேஷ் கார்த்திக் ரன் அவுட் செய்வதில் சொதப்பியதால் லக்னோ போராடி த்ரில் வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருக்கு 2019-க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்து முழுமையான ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி ஆரம்பத்திலேயே அதிரடி துவக்கி விரைவாக ரன்களை சேர்த்தார்.

    குறிப்பாக தனது கேரியரிலேயே உச்சகட்டமாக பவர் பிளே ஓவர் முடிவதற்குள் 42 ரன்கள் குவித்த அவர் சரவெடியாக பேட்டிங் செய்தார். ஆனால் அரை சதத்தை தொட வேண்டும் என்பதற்காக சற்று மெதுவாக விளையாடிய அவர் அடுத்த 7 பந்துகளில் 8 ரன்களை எடுத்து 50 ரன்களைத் தொட்டார்.

    அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தன்னுடைய சொந்த சாதனைக்காக விராட் கோலி மெதுவாக விளையாடியதாக நேரலையில் விமர்சித்தார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    விராட் கோலி அதிரடியாக தனது இன்னிங்சை துவங்கினார். அவர் அடித்து நொறுக்கும் ஷாட்டுகளை அடித்தார். ஆனால் 40 முதல் 42 ரன்களில் இருந்த போது அவர் 10 பந்துகளை எதிர்கொண்டு சொந்த சாதனைக்காக விளையாடினார். ஆனால் இந்த போட்டியில் அது போன்ற எண்ணத்துடன் விளையாடுவதற்கான இடமே இல்லை என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக இது போல விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும்.

    என்று கூறினார்.

    முன்னாதாக சமீப காலங்களில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2023 பிஎஸ்எல் தொடரின் ஒரு போட்டியில் 83 (46) ரன்களில் இருந்த போது மெதுவாக விளையாடி அடுத்த 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து சதத்தை தொட்டது இறுதியில் அவருடைய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    அப்போது சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடுங்கள் என்று வெளிப்படையாக விமர்சித்திருந்த சைமன் டௌல் தற்போது விராட் கோலியையும் நேரடியாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முக்கிய நேரங்களில் நங்கூரமாக செயல்படுவது அவசியமாகும்.
    • இருப்பினும் வெளியிலிருந்து விமர்சிப்பவர்களின் கருத்துக்களை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்.

    ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 61, கேப்டன் டு பிளேஸிஸ் 79, மேக்ஸ்வெல் 59 என ரன்களை குவித்தனர். அதைத்தொடர்ந்து 213 கடந்து லக்னோ போராடி த்ரில் வெற்றி பெற்றது.

    அந்தப் போட்டியில் 6 ஓவர்களில் அதிரடியாக விளையாடி விரைவாக 42 ரன்கள் எடுத்த விராட் கோலி பவர்பிளே முடிந்ததும் ஃபீல்டர்கள் வெளியே நிறுத்தப்பட்டதால் சற்று மெதுவாக விளையாடி அடுத்த 7 பந்துகளில் 8 ரன்களை எடுத்து 50 ரன்கள் தொட்டார்.

    அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் அதிவேக ரயிலை போல தன்னுடைய இன்னிங்சை வேகமாக துவங்கிய விராட் கோலி 42 ரன்களை தொட்டதும் அரை சதமடிக்க வேண்டும் என்பதற்காக சற்று மெதுவாக விளையாடி 10 பந்துகளில் 50 ரன்களை எடுத்ததாக நேரலையில் விமர்சித்தார். குறிப்பாக விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் போது நீங்கள் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக விளையாட வேண்டும் என்று அவர் விராட் கோலியை விமர்சித்தது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

    இந்நிலையில் டாப் ஆர்டரில் விளையாடினாலும் நங்கூரமாக நின்று ரன் குவிப்பதே என்னுடைய வேலை என்று விராட் கோலி கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முக்கிய நேரங்களில் நங்கூரமாக செயல்படுவது அவசியமாகும். இருப்பினும் வெளியிலிருந்து விமர்சிப்பவர்களின் கருத்துக்களை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் அது போன்ற சூழ்நிலைகளில் இருப்பதில்லை. மேலும் அவர்கள் போட்டியை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள்.

    அதாவது ஆரம்பத்திலேயே நாங்கள் அதிரடியாக விளையாடுவதை பார்க்கும் அவர்கள் திடீரென்று பவர் பிளே முடிந்ததும் என்னப்பா இவங்க அதிரடியை தொடராமல் ஸ்ட்ரைக் மாற்ற ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைக்கிறார்கள்.

    ஆனால் பொதுவாக பவர் பிளே ஓவர்களில் நீங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் இருக்கும் பட்சத்தில் அதில் வீசும் தரமான பவுலர்களுக்கு எதிரான முதல் 2 ஓவர்களில் எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பதை கண்டறிய வேண்டும். அப்போது தான் அந்த பவுலரின் கடைசி 2 ஓவரில் பெரிய ரன்களை குவிக்க முடியும். அது எஞ்சிய இன்னிங்ஸை மிகவும் எளிதாக்கும்.

    என்று கூறினார்.

    • குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு அடுத்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு அணி திரும்பியுள்ளது.

    ஆனால் தோல்வியடைந்த முதல் 3 போட்டிகளில் முழுமையாக பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்த 2 போட்டிகளில் குறைவான ஓவர்கள் மட்டுமே பந்துவீசி வருவதை பற்றி நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "இப்படி, ஒரு போட்டியில் அதிக ஓவர் வீசிவிட்டு, அடுத்த போட்டியில் பந்து வீசவில்லை என்றால், அவர் காயம் அடைந்துள்ளார். அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அவரிடம் ஏதோ தவறு இருப்பது உறுதி. அது என் உள்ளுணர்வு" என்று தெரிவித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அவருக்கு கடுமையான காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதை குறைக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

    ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது ஹர்திக் பாண்ட்யாவிற்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா டி20 தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
    • ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும்.

    வெலிங்டன்:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை பைனல்களில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி முழு மூச்சுடன் போராட உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசியது பின்வருமாறு:-

    டி20 அணியில் டாப் 5 - 6 பேட்ஸ்மேன்களில் பவுலர்கள் இல்லாதது இந்தியா தவற விட்ட பெரிய விஷயம். வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் தற்போதைய அணியில் உலகக்கோப்பை முடிந்ததும் நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் அபிஷேக் சர்மா, ருதுராஜ், ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரை நீங்கள் விரும்புவீர்கள்.

    சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 2 - 3 ஆல் ரவுண்டர்கள், கணிசமாக பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு டவுல் கூறினார்.

    • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • வர்ணனையாளர் சைமன் டவுல் காட்டமான கருத்து தெரிவித்தார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்க, இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒன்பது விக்கெட் கையிருப்பில் ஆட தொடங்கியது. எனினும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் ஆட்டமிழந்தது.

    முதல் டெஸ்ட் போட்டியை போன்றே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய பேட்டர்கள் ரன் குவிக்க தடுமாறினர். இதைத் தொடர்ந்து இந்திய பேட்டர்கள் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் சைமன் டவுல் காட்டமான கருத்து தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "இந்திய பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என தவறான புரிதல் இப்போதும் பலரிடம் உள்ளது. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்றவர்கள் சுழற்பந்துவீச்சை நேர்த்தியாத எதிர்கொண்டு விளையாடக்கூடியவர்கள். அவர்களின் காலம் கடந்து விட்டது."

    "இந்த காலத்து இந்திய பேட்டர்களுக்கும், மற்ற நாட்டு பேட்டர்களுக்கும் வித்தியாசமே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. நல்ல சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்டர்கள் சமீப காலங்களில் தடுமாறி வருகின்றனர்," என்று சைமன் டவுல் கருத்து தெரிவித்துள்ளார்.

    ×