என் மலர்
நீங்கள் தேடியது "Sirkazhi"
இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கடந்த 23-ந் தேதி பிடாரி வடக்கு வீதியில் 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும், நாகை மாவட்ட அ.தி.மு.க.வில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய வந்த ரமேஷ் பாபு, கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை பற்றி விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார், திருக்கடையூர் பகுதியில் அனாதையாக நின்றது. இதை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வந்தனர்.
அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு குறுகிய காலத்திலேயே பல்வேறு காண்டிராக்ட் பணிகளை எடுத்தார். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அமைச்சரின் ஆதரவாளராகவும், செல்வாக்குமிக்கவராகவும் கட்சியில் விளங்கினார். இதனால் அவருக்கு தொழில் போட்டி, அரசியல் போட்டிகள் அதிகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை உணர்ந்த அவர் எப்போதும் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கியை வைத்திருந்தார். ஆனால் அவர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவிக்கவில்லை. இதுவே கூலிப்படைக்கு அவரை கொலை செய்ய வசதியாக போய்விட்டது.
ரமேஷ்பாபுவை கொலை செய்ய திட்டம் தீட்டிய கொலை கும்பல், கடந்த 20-ந் தேதியே நாகை மாவட்டத்தில் திருக்கடையூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கார்களில் சுற்றி வந்துள்ளனர். ரமேஷ் பாபுவை தீவிரமாக நோட்டமிட்டே இந்த கொலை அரங்கேற்றியுள்ளனர்.
இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை, பகுதியை சேர்ந்த 3 ரவுடிகளிடம் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ரமேஷ்பாபு கொலை தொடர்பாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எண்.2-ல் நீதிபதி முன்னிலையில் சீர்காழி மதுத்துறை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன் (வயது 28), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்பிரபு(34) மற்றும் புதுச்சேரி, மேல்காத்த மங்கலம் தேனீநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (22) ஆகிய 3 பேர் சரண் அடைந்தனர். சரண் அடைந்த அவர்கள் 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே கோர்ட்டில் சரண் அடைந்த பார்த்திபன் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் நேற்று இரவே சேலத்தில் புறப்பட்டு சென்றனர்.
சேலம் சிறையில் உள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் தான் ரமேஷ்பாபுவின் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணியில் யார் இருந்தனர் என்றும் தெரிய வரும் என தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
சீர்காழி காவல் நிலையத்தில் நாகப்பட்டிணம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சஞ்சய்சேகர் அலுவல் ஆய்வு பணி மேற்கொண்டார்.அப்போது காவல்நிலையத்தில் உள்ள பதிவேடுகள், குற்றபதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்தார். வழக்கு விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நிருபர்களிடம் எஸ்.பி. தேஷ்முக்சஞ்சய் கூறுகையில், சீர்காழியில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும், குற்ற நடவடிக்கைகளை தடுத்திடும் வகையிலும், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் 38 இடங்களில் உயர் அதி நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளது. அதன் கன்ட்ரோல்யூனிட் மற்றும் கண்காணிப்பு மானிட்டர்கள் என அனைத்து கணினி சேவைகளும் மகளிர் காவல்நிலையத்தில் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது.
தேர்வு பெற்ற காவலர்களுக்கு பயிற்சி காலம் முடிந்தவுடன் உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின்படி போதிய காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்கும் வகையில் சைரன் வைத்த இருசக்கரவாகனத்தில் ரோந்து போலீசார் நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர் என்றார். ஆய்வின்போது டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் உடனிருந்தனர்.#tamilnews
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அடுத்த கீழமூவர்கரை என்ற மீனவ கிராமம் உள்ளது. இதே பகுதி சுனாமி தெருவை சேர்ந்த சரவணன் (வயது 32) என்ற மீனவர் நேற்று அதிகாலை பைபர் படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றார்.
அவருடன் அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், பெருமாள், செல்லப்பன், தங்கத்துரை ஆகியோரும் படகில் சென்றனர்.
நேற்று மாலை அவர்கள் படகில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் கடலில் வீசிய வலையை வெளியே இழுத்து கொண்டிருந்தனர். ஆனால் வலையை இழுக்க முடியவில்லை. இதனால் ஏதோ பெரிய மீன் சிக்கியிருக்கலாம் என்று நினைத்து அவர்கள் சேர்ந்து போராடி வலையை இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.
அந்த வலையில் 10 மூட்டைகள் இருந்தன. இதனால் அதில் என்ன இருக்கிறது? என பிரித்து பார்த்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மூட்டையில் கஞ்சா இருந்தது. அவைகள் அனைத்தும் பாக்கெட் செய்யப்பட்டு இருந்தது.
பின்னர் கஞ்சா மூட்டைகளை பத்திரமாக கரைக்கு நேற்று இரவு மீனவர்கள் கொண்டு வந்தனர். வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கியது குறித்து திருவெண்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டனர். 10 மூட்டைகளிலும் மொத்தம் 42 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.
இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடத்தி செல்லும் போது கடலோர போலீசாருக்கு பயந்து கடலில் வீசப்பட்டதா? கஞ்சாவை கடலில் வீசிய கும்பல் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மீனவர்கள் வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கிய சம்பவம் திருவெண்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #fishermen