என் மலர்
நீங்கள் தேடியது "SIT"
- தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
- பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .
இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இதனையடுத்து பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ரேவண்ணா நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடிக்கு தகவல் தெரிவித்தேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
- கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .
இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "ரேவண்ணா பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்.
இந்த பாவத்திற்காக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
மிக மோசமான பாலியல் குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் - இதுதான் மோடியின் உத்தரவாதம்!" என்று தெரிவித்துள்ளார்.
- பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் சென்றார்.
- ரேவண்ணாவை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார்.
இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், ம.ஜ.த. முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 4 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை கர்நாடக அரசு நியமித்தது. இதற்கிடையே ஜெர்மனியில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவரை கைதுசெய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், அவரை கைதுசெய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதற்கிடையே கடந்த 27-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னை சிலர் சதிசெய்து சிக்க வைத்துள்ளனர். என் மீதான புகாருக்காக தேவகவுடா, குமாரசாமி, எனது பெற்றோர், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
31-ம் தேதி பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்தார். இதையடுத்து விமான நிலையத்தில் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார். அங்குள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர். பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான மகளிர் போலீஸ் குழுவினர் அழைத்துச் சென்றனர். 35 நாட்களாக வெளிநாட்டில் இருந்த அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணை குழு போலீசார் காரில் சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன் பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க சிறப்பு விசாரணை குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் பிரஜ்வல் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தாவான முன்னாள் பிரதமர் தேவகவுடா கடும் எச்சரிக்கை விடுத்தார்.
தனது பொறுமையைச் சோதிக்க வேண்டாம். நாடு திரும்பி விசாரணையை சந்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும், எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் போட்டியிட்டார். அந்த தொகுதிக்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
#WATCH | Karnataka: Suspended JD(S) leader Prajwal Revanna, who is facing sexual abuse charges was brought to the CID office, in Bengaluru. He has been arrested by SIT and is likely to be brought to the government hospital for medical examination. pic.twitter.com/ndKZghNpvD
— ANI (@ANI) May 30, 2024
- பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் குழு அமைப்பு.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் NCC திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட NCC பயிற்றுநர்கள் ஆறு பேரில், ஐந்து பேரும், இந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய போலியான NCC பயிற்றுநர்கள் இதே போன்று, மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றை அமைத்திட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்
மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், தலைமையில் ஒரு பல்நோக்கு குழு (Multi Disciplinary Team - MDT) ஒன்றை அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்.
இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா மற்றும் சத்யா ராஜ், காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முறைகேடு தொடர்பான வழக்கை லோக் ஆயுக்தாவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
- சி.ஐ.டி. தலைவருக்கு மிரட்டல் விடுத்ததாக ஏ.டி.ஜி.பி. அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு,
கர்நாடக மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஹெச்.டி. குமாரசாமிக்கு எதிராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் மற்றும் அவர்களுடைய உதவியாளர் சுரேஷ் பாபு ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுத்ததுடன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. எம். சந்திரசேகர் அளித்த புகார் அடிப்படையில் பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமாரசாமி தொடர்பான முறைகேடு வழக்கை விசாரணை நடத்தி வரும் கர்நாடக மாநில லோக்ஆயுக்தாவின் சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவருக்கு மிரட்டல் விடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ சாய் வெங்கடேஷ்வரா மினரல்ஸ் நிறுவனத்திற்கு சுரங்க குத்தகை சட்டவிரோதமாக வழங்கியதாக குமாரசாமி மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி பெற்ற பிறகு, அதிகாரிக்கு குமாரசாமி தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. செப்டம்பர் 28 மற்றும் 29-ந்தேதிகளில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், மிரட்டலும் விடுத்ததாக சந்திரசேகர் தெரிவித்தள்ளார்.
- ஆபாச வீடியோக்களை இவர் யார் யாருடன் எல்லாம் பகிர்ந்து கொண்டார் என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரிக்க உள்ளனர்.
- ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வந்த என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முதல் தகவல் அறிக்கையும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 3 பெண் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் பாலியல் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். அண்ணாநகர் துணை கமிஷனர் சினேக பிரியா, ஆவடி துணைக் கமிஷனர் ஜெய் மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று மாணவியிடமும், பல்கலைக் கழக நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டி உள்ள போலீசார் நேற்று கோட்டூர்புரத்தில் உள்ள பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது வீட்டில் இருந்த பல்வேறு சொத்து ஆவணங்கள், லேப்டாப், பெரிய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஞானசேகரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் குவிந்து கிடந்தன. இந்த நிலையில் லேப்டாப்பிலும் அதே போன்று ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக லேப் டாப்பை ஆய்வு செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆய்வின் போது ஞானசேகரன் லேப்டாப் மூலமாக யார் யாருடன்? இணையதளத்தில் தொடர்பில் இருந்தார் என்கிற விவரங்களும் தெரியவரும்.
ஆபாச வீடியோக்களை இவர் யார் யாருடன் எல்லாம் பகிர்ந்து கொண்டார் என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரிக்க உள்ளனர்.
பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள ஞானசேகரன் என்ஜினீயரிங் மாணவியை போன்று வேறு மாணவிகள் யாரையாவது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தினாரா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஞானசேகரனை பொறுத்தவரையில் ஆபாச படங்களை பார்த்து ரசிப்பதுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களையும் ஆபாசமாக வீடியோ எடுத்து ரசிக்கும் பழக்கம் இருப்பவர் என்கிற தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஞானசேகரனின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆபாச வீடியோக்களில் குடும்ப பெண்கள் மற்றும் மாணவிகள் யாரும் இருக்கிறார்களா என்பது பற்றிய விசாரணையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது பாலியல் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
பாலியல் விவகாரத்தில் இன்னொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் போலீசில் அளித்த புகாரில் ஞானசேகரனின் செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த சாருடனும் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஞானசேகரன் கூறியதாக வெளியான தகவலால் 'யார் அந்த சார்?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதன் முடிவில் ஞானசேகரன் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
