search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால்"

    பால் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அத்தியாவசிய பானமாக பருகப்படும் பாலை பெருமைப்படுத்தும் விதமாக, நாளை (ஜூன்1) உலக பால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    * உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி தேசம் இந்தியா. 2018-ல் 176.3 மில்லியன் டன்கள் பாலை நம் நாடு உற்பத்தி செய்துள்ளது.

    * இந்தியாவில் ஆண்டு தோறும் 5000 கோடி லிட்டர் பால் விவசாயிகளால் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.

    * இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் 55 சதவீதம் எருமை மாடுகளிடம் இருந்து பெறப்படுகிறது.

    * மனிதன் மாடுகளின் பாலை அதிகமாக நுகர்கிறான். பால் மற்றும் பால்பொருட்கள் அதிக எண்ணிக்கையில் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    * பாலில் இருந்து தயிர், வெண்ணை, நெய், மோர், கிரீம், பாலாடைக்கட்டி போன்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பாலுடன் பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டு எண்ணற்ற உணவுப் பொருட்கள் தயாராகின்றன.

    * 240 மில்லி பாலில் 88 சதவீதம் நீர்ச்சத்து மிகுந்துள்ளது. புரதப்பொருள் 7.7 கிராமும், கார்போஹைட்ரேட் 11.7 கிராமும், சர்க்கரை 12.3 கிராமும், கொழுப்பு 8 கிராமும் உள்ளது. நார்ப்பொருட்கள் பாலில் காணப்படுவதில்லை. ஒரு கோப்பை பால் பருகுவதால் உடலுக்கு 149 கலோரி ஆற்றல் கிடைக்கிறது.

    * பாலில் பல்வேறு வகை வைட்டமின்களும், தாது உப்புக்களும் உள்ளன.

    * பால் எலும்புகளுக்கு சக்தி தருவதாக நம்பிக்கை உள்ளது. ஆனால் அது எந்த ஆய்விலும் நிரூபணம் செய்யப்படவில்லை.

    * மாடுகளின் பால் கன்றுக்குட்டிகளுக்கானது. அதை நாம் நமது தேவைக்காக பயன்படுத்துகிறோம். பாலில் உள்ள சில சத்துப்பொருட்களை நமது உடல் ஜீரணிப்பதில்லை. கொழுப்பு உள்ளிட்ட தேவையற்ற சத்துப்பொருட்களை நீக்கி பதப்படுத்தப்பட்ட பாலையே மக்கள் பருக வேண்டும். இல்லாவிட்டால் சிலருக்கு பால் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி பேதியும் ஏற்படுவது உண்டு.

    * பாலில் சில சத்துப்பொருட்கள் இருப்பது உண்மைதான். ஆனால் பால் பருகாததால் மனிதர்களுக்கு எந்தவித கேடும் விளைவதில்லை.

    * கடந்த 2018-ம் ஆண்டில் அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரில் உலகின் மிகப்பெரிய பாலாடைக்கட்டி தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. 70 அடி நீளமும், 7 அடி அகலமும் இருந்த இந்த பாலாடைக்கட்டி 4 ஆயிரத்து 437 பவுண்டு எடை கொண்டிருந்தது. இதை 4 ஆயிரத்து 500 சீஸ் பிரியர்கள் துண்டு செய்து சாப்பிட்டார்கள்.

    குட்டீஸ், நீங்கள் அதிகம் விரும்பும் பானம் பாலாகத்தான் இருக்கும். பாலை விரும்பாத குழந்தைகள் வெகு குறைவுதான். பால் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. உலகில் பெரும்பாலானவர்களின் விடியல் ஒரு கோப்பை பாலுடன் அல்லது பால் சேர்த்த காபி- டீ போன்ற பானங்களுடன் பொழுது புலர்கிறது என்பதே உண்மை.

    பாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பாலுடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.


    மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.

    அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.

    தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.

    பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.

    கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்…
    இதய நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அதற்கு ஒரு அருமருந்தாக பால் பொருட்கள் திகழ்கின்றன என சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. #Milk #Heart #Dairy
    சென்னை:

    இதய நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அதற்கு ஒரு அருமருந்தாக பால் பொருட்கள் திகழ்கின்றன என சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    மனிதர்கள் தங்களது அன்றாட உணவில் ஒரு டம்ளர் பால், ஒரு கப் தயிர் அல்லது ஒரு துண்டு பாலாடை கட்டி, எப்போதாவது வெண்ணை அல்லது நெய்யை சேர்த்துக் கொண்டால் போதுமானது.

    உணவில் அன்றாடம் பால் பொருட்கள் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 5 கண்டங்களில் உள்ள 21 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1 லட்சத்து 36 ஆயித்து 384 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் 9 வருடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதில் பாலில் உள்ள கொழுப்பு சத்து மனிதர்களை இதய நோய்களில் இருந்து காப்பாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 22 சதவீதம் இதய நோய்களில் இருந்தும், 34 சதவீதம் பக்கவாதம் நோயில் இருந்தும் காக்கும் திறன் கொண்டது.

    இந்த ஆய்வறிக்கை சமீபத்தில் ‘லேன்செட்’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவில் தான் பெருமளவில் இதய நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


    கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஒருவித இதயநோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

    1990-ம் ஆண்டில் 2 கோடியே 50 லட்சம் பேர் இதய மற்றும் பக்கவாதத்தால் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 45 லட்சமானது.

    இதய நோய் தாக்குதல்களால் கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஆந்திரா, இமாச்சல பிரதேசம், மராட்டியம், கோவா மற்றும் மேற்கு வங்காளத்தில் மரண விகிதம் அதிகமாக உள்ளது.

    எனவே இதய நோயில் இருந்து தப்பிக்க பால் பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். #Milk #Heart #Dairy
    நாட்டில் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்கள் தரமானது அல்ல என்று விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. #Milk #DairyProducts
    லூதியானா:

    இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான மோகன் சிங் அலுவாலியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி நமது நாட்டில் பால் அல்லது பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. அன்றாடம் நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது. பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்கின்றனர்.

    மேலும் பால் அடர்த்தியாக இருக்கவும், நீண்ட நாள் பயன்பாட்டுக்காகவும் அதில் திட்டமிட்டே யூரியா, ஸ்டார்ச், பார்மலின் போன்றவற்றையும் கலக்கின்றனர். இதுபோன்ற கலப்படம் உடல் உறுப்புகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.



    பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால் இந்தியாவில் 2025-ம் ஆண்டில் 87 சதவீத மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான பல்வேறு நோய்களுக்கு உள்ளாக நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை எச்சரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Milk #DairyProducts
    குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து பெற மதிய உணவுத் திட்டம் மூலம் பள்ளிகள், அங்கன்வாடிகளில் பால் மற்றும் பால் பொருட்களை அளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. #Milk #Anganwadi
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த நிதியாண்டில் பால் உற்பத்தி 176.35 மில்லியன் டன்னாக அதிகரித்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வரும் 2021-22-ம் ஆண்டில் இந்தியாவில் பால் உற்பத்தி 254.5 மில்லியன் டன்னாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு போதிய விலை கிடைக்காததால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பால் உற்பத்தியாளர்களால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பாலை பயன்படுத்தும் நோக்கிலும் பாலுக்கு போதிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மத்திய அரசு புதிய திட்டத்தை தீட்டியது. அதாவது பள்ளிகள், அங்கன்வாடிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரத்துக்கு 2 நாட்கள் பால் வழங்கலாம் என்று திட்டம் வகுத்தது.

    இந்த திட்டத்துக்கு மாநில அரசுகளின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய கால்நடை மற்றும் பால் உற்பத்தித்துறை செயலாளர் தருண் ஸ்ரீதர் கூறியதாவது:-


    மதிய உணவுத் திட்டம் மூலம் பள்ளிகள், அங்கன் வாடிகளில் பால் மற்றும் பால் பொருட்களை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டிருந்தது. இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் மாநிலம் ஏற்கெனவே இதை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினர் போதிய ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்ய முடியும் என்று அரசு கருதுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Milk #Anganwadi
    மகாராஷ்டிரா மாநிலத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராடி வந்த நிலையில், விலையை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #MaharashtraMilkProtest
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர், சங்லி, சட்டாரா, புனே ஆகிய மாவட்டங்களில் அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் மக்களுக்கு தேவையான பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதுதவிர, அஹமத்நகர், நாசிக், ஜலகோன், நாண்டெட் மற்றும் பர்பானி மாவட்ட மக்களும் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.

    பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் 17 ரூபாய்க்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. பின்னர், பதப்படுத்தி, குளிரூட்டி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் 42 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கொள்ளை லாபத்தை சுட்டிக் காட்டிய பால் உற்பத்தியாளர்கள், கொள்முதல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயரத்தி தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பால் உற்பத்தியாளர்களிடம் அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    இதற்காக கடந்த 3 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்று பால் கொள்முதல் விலையை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 1 லிட்டர் பாலின் குறைந்தபட்ச விலை 25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு ஜூலை 21-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MaharashtraMilkProtest
    பாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பாலுடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.
    மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.

    அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.

    தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.



    பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.

    கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்... 
    நாளை (ஜூன் 1-ந்தேதி) உலக பால் தினம். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானமான பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளாகும்.
    இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானமான பால் ஐ.நா. சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது. இதன் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த ஐ.நா. சபை, 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந்தேதியை உலக பால் தினமாக கடைபிடித்து வருகிறது.

    பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளாகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம், லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டை சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கி உள்ளன.

    பால் தோல் பளபளப்பை கொடுக்கிறது. அதிகப்படியான கால்சியம் சத்தினை கொண்டு இருப்பதால் எலும்பினை வலுவாக்குகிறது. இதய நோய் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கும் பயன்படுகிறது.

    பாலின் வேதியியல் மாற்றங்களின் மூலம் பாலில் இருந்து பல உப பொருட்களை பெறலாம். பாலை நொதிக்க செய்வதன் மூலம் கட்டிப்பட செய்து தயிரை பெறலாம். பின்னர் தயிரை கடைந்து கொழுப்புச் சத்து நிறைந்த வெண்ணெயையும், பக்க பொருளான நீர்த்தன்மையான மோரையும் பெறலாம். வெண்ணெயை உருக்கி நறுமணமும், சுவையும் மிக்க நெய்யை பெறலாம். பாலை நொதிக்க செய்வதன் மூலம் பாலாடை கட்டியையும் பெறலாம்.

    ஒரு லிட்டர் மாட்டுப் பாலில் 30 முதல் 35 கிராம் புரதம் கலந்துள்ளது. பாலில் கலந்துள்ள முக்கிய புரத வகை கேசின் எனப்படும் உப்புகள், தாதுகள் மற்றும் வைட்டமின்கள், கால்சியம், பாஸ்டேட், மெக்னிசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரின் என அனைத்தும் கிடைக்கின்றன. பாலில் உப்புகள் மற்றும் தாதுகள் அல்லாத வைட்டமின்களும் கலந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, பி6, பி12, சி, டி, கே ஆகியவையும் கலந்துள்ளன.

    5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 400 மில்லி பால் சாப்பிடுவது நல்லது. இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டோர் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது சிறந்தது என மருத்துவர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். நாளை (ஜூன் 1-ந்தேதி) உலக பால் தினம்.

    எம்.காஞ்சனா
    பாலில் வைட்டமின்களும், கால்சியமும் உள்ளடங்கி இருக்கின்றன. அதிகபடியான கலோரிகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு பால் உதவுகிறது.
    பாலில் வைட்டமின்களும், கால்சியமும் உள்ளடங்கி இருக்கின்றன. அதிகபடியான கலோரிகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு பால் உதவுகிறது. பசுவின் பால், எருமை பால் ஆகிய இரண்டு விதமான பால் வகைகள்தான் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. இந்த இரண்டு வகையான பால்களிலும் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

    முக்கியமாக கொழுப்பு மற்றும் புரத சத்தில் வேறுபாடு காணப்படுகிறது. எருமை பாலை விட பசும் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கிறது. மேலும் எருமைபாலை விட பசும் பால் இலகுவான தன்மை கொண்டது. பச்சிளம் குழந்தைகளுக்கு பசுவின் பால் உகந்ததாக இருக்கிறது. பன்னீர், குல்பி, தயிர், நெய் ஆகியவை தயாரிப்பில் எருமை பால் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பாலின் தன்மை அடர்த்தியாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. பசுவின் பாலை விட எருமை பாலில் ஆக்சிடேசன் செயல்பாடு அதிகமாக இருக்கிறது. அதனால் பசுவின் பாலைவிட அதனை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பொதுவாக எந்த பாலாக இருந்தாலும் அது அதன் கன்றுகளுக்கானது. மனிதர்களுக்கானது அல்ல. இன்னொருபுறம் இயற்கையாகவே பால் பலருக்கு சரியாக செரிமானம் ஆவதில்லை. அதனால் நேரடியாக பாலை பருகுகிறவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    ×