search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102167"

    முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    நேருவின் நினைவு தினத்தையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார்.




    டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்த மே 23-ந்தேதி சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு மொத்தம் உள்ள 543 இடங்களில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதியுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது.

    272 இடங்களை கைப்பற்றும் கட்சியே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். இல்லையெனில் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் உருவாகும்.

    வருகிற 23-ந் தேதி 542 தொகுதிகளின் ஓட்டுக்களும் எண்ணி முடிவு அறிவிக்கப்பட உள்ளன. அன்று மதியம் மீண்டும் பா.ஜனதா ஆட்சியில் அமருமா? அல்லது வேறு கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா என்பது தெரிய வரும். ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியானது.

    ஆனால் 4-வது கட்ட தேர்தலுக்குப் பிறகு அரசியல் வட்டாரத்தில் மாநில கட்சிகளின் கை தான் ஓங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. மாநில கட்சிகள் சுமார் 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக மத்தியில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாரதிய ஜனதாவுக்கோ அல்லது காங்கிரசுக்கோ அதிக இடங்கள் கிடைக்காது என்றும், எனவே மாநில கட்சிகள் உதவியுடன்தான் புதிய ஆட்சி அமைக்க முடியும் என்றும் கருத்து நிலவுகிறது.

    மாநில கட்சிகளில் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. சிவசேனா, அ.தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் ஆகிய கட்சிகள் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. இடது சாரிகள் தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட சுமார் 20 மாநிலகட்சிகள் எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனித்து தேர்தலை சந்தித்துள்ளன. இந்த கட்சிகள் தான் மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் கிங் மேக்கர்களாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் இந்த மாநில கட்சிகள், மத்தியில் ஆட்சி அமைக்கும் வி‌ஷயத்தில் மாறுபட்ட மனநிலையுடன் உள்ளன.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதா ஆட்சி அமைவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் 23-ந் தேதி தேர்தல் முடிவுக்கு முன்னதாக 21-ந் தேதியே டெல்லியில் மாநில கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட முயற்சி செய்தார். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.


     

    இதற்கிடையே தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ், மாநில கட்சிகளின் “கூட்டாட்சி முன்னணி” (3-வது அணி)தான் மத்தியில் புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பாரதிய ஜனதா, காங்கிரஸ் இல்லாத புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக உள்ளது.

    பிரதமர் கனவில் இருக்கும் மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோரும் இதே மனநிலையில் உள்ளனர்.

    ஆனால் நேற்று சந்திரசேகர ராவும், சில மாநில கட்சித் தலைவர்களும் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதற்கு, தேவைப்பட்டால் காங்கிரசின் ஆதரவை வெளியில் இருந்து பெறலாம் என்பதே அந்த முக்கிய முடிவாகும். இதனால் காங்கிரசும், மாநில கட்சிகளும் நெருங்கிவரத் தொடங்கியுள்ளன.

    இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சியும் மும்முரமாகி உள்ளது. ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், கமல்நாத் போன்றவர்கள் மாநில கட்சித்தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பேச்சு நடத்தி வருகிறார்கள்.

    பாரதிய ஜனதா தடாலடியாக ஏதாவது செய்வதற்கு முன்பு எல்லா மாநில கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுத்து விட வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காதும், காதும் வைத்த மாதிரி ஓசையின்றி காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார். அதன் முதல் கட்டமாக தனது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பா.ஜனதா பக்கம் செல்லாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் சோனியா ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.

    “டெல்லியில் வருகிற 23-ந் தேதி ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்கால அரசியல் பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று அந்த அழைப்பில் சோனியா குறிப்பிட்டுள்ளார். இதற்கான சோனியாவின் அழைப்பு கடிதம், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    23-ந் தேதிதான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அன்றைய தினம் முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் ஒன்று திரட்ட சோனியா அழைப்பு விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தையும் ஓரணியாக திரட்டும் அடித்தளம் அமைவது குறிப்பிடத்தக்கது.


     

    சோனியாவின் இலக்குபடி கூட்டப்படும் இந்த கூட்டத்தில் காங்கிரசின் கூட்டணி கட்சிகளான தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

    பிஜூ ஜனதா தளம் தலைவரும், ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக்கை 23-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் போனில் தொடர்பு கொண்டு வலியுறுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள். எனவே கமல்நாத் மூலம் நவீன்பட்நாயக்கை வளைக்க முயற்சி நடந்து வருகிறது.

    அது போல சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன்ரெட்டி, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோரையும் 23-ந் தேதி கூட்டத்துக்கு அழைத்து வர காங்கிரசார் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகும் போது காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களைப் பொறுத்து முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

    காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றினால், அவர்களது கை ஓங்கும். அப்படி இல்லாமல் மாநில கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றினால், அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்படும். இதில் எது நடக்கும் என்பது தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையும்.

    ஆனால் மாயாவதி, மம்தா பானர்ஜி இருவரும் பிரதமர் பதவி மீது பிடிவாதமான மனநிலையில் உள்ளனர். அதுவும் அவர்களுக்கு கிடைக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கையை பொறுத்தே அமையும். எனவே தேர்தல் முடிவுகள் இவர்களது அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும்.

    பாராளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் - சோனியா, ராகுல், மன்மோகன் சிங் பங்கேற்பு Sonia Gandhi, Rahul Rafale Protest Outside Parliament
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள கட்சித்தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசார் காகிதத்தில் செய்யப்பட்ட மாதிரி விமானங்களை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தற்போதைய ரபேல் ஒப்பந்தத்தை விட முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம்தான் சிறந்தது என, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட ராணுவ அமைச்சக அதிகாரிகள் குழுவில் இடம்பெற்று இருந்த 7 அதிகாரிகளில் 3 பேர் கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

    இதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி 2 வாதங்களை வைத்திருந்தார். அதாவது, சிறந்த விலை மற்றும் விரைவான வினியோகம் என அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த வாதங்கள் அனைத்தும் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியால் தவிடுபொடியாகி இருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதைப்போல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆங்கில நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி கூறுகையில், ‘திருடன் அகப்பட்டு விட்டார்’ என்று தெரிவித்து இருந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போடப்பட்டு இருந்த ஒப்பந்தத்தை விட தற்போதைய 36 விமானங்கள் 55 சதவீதம் விலை அதிகம் எனவும், யூரோபைட்டர் நிறுவனம் வழங்கிய 25 சதவீத தள்ளுபடியை கணக்கில் கொள்ளாததால் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். Sonia Gandhi, Rahul Rafale Protest Outside Parliament


    உ.பி.யில் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை சுற்றுப்பயணம் செல்கிறார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    லக்னோ: 

    வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.

    இதற்கிடையே, காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.



    இந்நிலையில், உ.பி.யின் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை முதல் சுற்றுப்பயணம் செல்கிறார்.

    இதுதொடர்பாக, உ.பி. மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜிஷான் ஹைடர் கூறுகையில், தவிர்க்க முடியாத காரணங்களால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டபடி அமேதி தொகுதியில் நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார், அங்கு பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபடவுள்ளார் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    லக்னோ: 

    வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.



    இந்நிலையில், காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமேதி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனில் சிங் கூறுகையில், உ.பி. செல்லும் சோனியா மற்றும் ராகுல் காந்தி பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    மேகதாது அணை பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை கூறிய தமிழிசைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #MekedatuDam
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி மூலம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

    ஆய்வு செய்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்தது தவறு. இதை கண்டித்து தமிழக சட்டசபையில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

    இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அங்கு போய் சோனியா சொல்ல வேண்டியதுதானே. ராகுல் சொல்ல வேண்டியது தானே என்று தமிழிசை சொல்வது சிறுபிள்ளைதனமாக உள்ளது.

    கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. முல்லை பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டதா? கர்நாடகத்தில் பா.ஜனதாவும் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்கள். எனவே, அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவார்கள்.

    இதை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசுதானே. அதை விட்டுவிட்டு கட்சிகள் மீது குறை சொல்வது விதண்டாவாதம்.

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை என்பது உண்மைதான். இப்போது பழைய கதைகளை பேசி பயன் இல்லை. எடப்பாடி அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு, மேகதாது பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை திறமையான வழக்கறிஞர்களை கொண்டு திறம்பட நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மலர் அஞ்சலி செலத்தினார்கள். ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாட்டில் துறைமுகம் பகுதி த.மா.கா. நிர்வாகி திருமலை தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் எஸ்.சி.துறை தலைவர் செல்வ பெருந்தகை, தணிகாசலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சிரஞ்சீவி, சொர்ணா சேதுராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம்பாட்சா, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகர், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பிராங்ளின் பிரகாஷ், மயிலை தரணி, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், பி.வி.தமிழ்செல்வன், ஓட்டேரி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், மலேசியா பாண்டியன், ஊட்டி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில், இன்று மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. #Thirunavukkarasar #MekedatuDam
    உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் இறுதிப்போட்டியை எட்டினார். #WorldBoxing #Sonia
    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், வடகொரியாவின் ஜோ சன் வாவை எதிர்கொண்டார். மூன்று ரவுண்ட் கொண்ட இந்த ஆட்டத்தில் இருவரும் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினர். முதல் இரண்டு ரவுண்டில் இருவரும் சரிசம ஆதிக்கம் செலுத்தியது போன்றே தெரிந்தது. 3-வது ரவுண்டில் தொடக்கத்தில் தற்காப்பு பாணியை கையாண்ட சோனியா கடைசி கட்டத்தில் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு, நடுவர்களின் கவனத்தை ஈர்த்தார்.

    முடிவில் 5-0 என்ற கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 30-27) சோனியா சாஹல் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    அரியானாவைச் சேர்ந்த 21 வயது சோனியா சாஹல் கூறுகையில், ‘இறுதிசுற்றுக்கு வருவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அதுவும் குறைந்த வயதிலேயே இந்த நிலையை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரைஇறுதியை பொறுத்தவரை கடைசி ரவுண்டில் ஆதிக்கத்தை நிலைநாட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர். அதனால் எனது ஆட்ட பாணியை உடனடியாக மாற்றிக்கொண்டு, வேகத்தை மேலும் தீவிரப்படுத்தி, வெற்றியை வசப்படுத்தினேன். எனது இறுதிப்போட்டிக்குரிய எதிராளி, கடுமையான குத்துகளை விடக்கூடியவர். அதற்கு ஏற்ப நான் தயாராக வேண்டியது அவசியம். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் தங்கப்பதக்கம் வெல்ல விரும்புகிறேன்’ என்றார்.

    மற்றொரு அரைஇறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் (64 கிலோ பிரிவு), சீனாவின் டான் டோவுடன் கோதாவில் இறங்கினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த சிம்ரன்ஜித் கவுர், எதிராளியை பின்நோக்கி ஓடும் வகையில் விடாமல் தாக்குதல் தொடுத்தார். ஆனாலும் ஏதுவான இடைவெளியில் சிம்ரன்ஜித் கவுரின் முகத்தில் டான் டோ சில குத்துகளை விட்டு, ஆட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றினார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் சிம்ரன்ஜித் கவுர் 1-4 என்ற கணக்கில் (27-30, 30-27, 27-30, 27-30, 28-29) தோற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றார். உலக போட்டியில் சிம்ரன்ஜித் கவுர் பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

    இன்று (சனிக்கிழமை) மாலை இறுதிப்போட்டிகள் நடக்கின்றன. 6-வது தங்கப்பதக்கத்துக்கு குறி வைத்துள்ள இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொள்கிறார். சோனியா சாஹல் தனது இறுதி சுற்றில் ஜெர்மனியின் வானெர் கேப்ரியலியுடன் மல்லுகட்டுகிறார். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #WorldBoxing #Sonia
    தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற 23-ந்தேதி பிரசாரம் செய்கிறார்கள். #SoniaGandhi #RahulGandhi
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.



    ஆளும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கூட்டணி (தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி) பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 5 முனை போட்டி நிலவுகிறது.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருகிற 23-ந்தேதி பிரசாரம் செய்வார்கள்.

    மேட்கல் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்று பேசுகிறார்கள். மாலை 5 மணிமுதல் 6.30 மணி வரை இந்த கூட்டம் நடக்கிறது. இதற்காக இருவரும் 23-ந்தேதி மாலை 4 மணிக்கு பெகும்பேட் விமான நிலையத்தை சென்றடைவார்கள்.

    தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு சோனியாகாந்தி முதல் முறையாக அங்கு செல்கிறார்.

    இதை மாநில காங்கிரஸ் தலைவர் ரெட்டி தெரிவித்துள்ளார். #SoniaGandhi #RahulGandhi

    பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா சாஹல், பிங்கி ராணி, சிம்ரன்ஜித் கவுர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். சவீட்டி பூரா தோல்வி கண்டு வெளியேறினார். #WorldBoxing #Championship #Sonia #Pinki #Simranjeet
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், 2014-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் நடுவர்கள் முடிவின் படி 3-2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில் சர்ச்சை ஏற்பட்டது. தோல்வி கண்ட ஸ்டானிமிரா பெட்ரோவா கருத்து தெரிவிக்கையில், ‘நடுவர்கள் ஊழல் செய்து விட்டனர். இது நியாயமான முடிவு அல்ல’ என்று குற்றம்சாட்டினார். முன்னதாக போட்டி நடுவர் சோனியா சாஹல் வெற்றி பெற்றதாக அறிவித்த போது ஸ்டானிமிரா பெட்ரோவா சிரித்தபடி ஆள்காட்டி விரலை உயர்த்தி அதிருப்தி தெரிவித்தார். ‘நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியாயமான முடிவு தான்’ என்று சோனியா சாஹல் தெரிவித்தார்.

    51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை அலிசி எபோனி ஜோன்சை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதேபோல் 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் மெகன் ரிட்டை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

    75 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை எல்சிபெடா வோஜ்சிக்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். சரிதா தேவிக்கு (60 கிலோ) அடுத்து தோல்வி கண்டு வெளியேறிய 2-வது இந்திய வீராங்கனை சவீட்டி பூரா ஆவார். 
    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர். #IndiraGandhi #SoniaGandhi #RahulGandhi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



    இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது உருவச் சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.

    இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இதேபோல் இந்திரா காந்தியின் செயல்பாடுகளை பாராட்டியும், அவரது பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டும் பலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.  #IndiraGandhi #SoniaGandhi #RahulGandhi
    குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 48 பேர் இலவச விமான பயணம் மேற்கொண்டனர். #JawaharlalNehru #ChildrensDay

    ஆலந்தூர்:

    மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னை விமான நிலையம் இன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் ஆகியவற்றுடன் இணைந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கனவு பயணம் என்ற இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    இதற்காக விமான நிலையம் அருகே உள்ள அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 48 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்திற்கு காலை அழைத்துவரப்பட்டனர்.

     


    சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் விமானத்தில் அவர்கள் சுமார் 45 நிமிடம் பயணம் செய்தனர். காலை 9.45 மணிக்கு புறப்பட்டு சென்ற அவர்கள் மீண்டும் 10.30 மணிக்கு சென்னை திரும்பினர்.

    இதில் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆச்சரியத்துடனும் பயணம் செய்தனர். #JawaharlalNehru #ChildrensDay

    ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #JawaharlalNehru #ChildrensDay #SoniaGandhi
    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.



    டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில அலுவலகங்கள், கிளை கமிட்டி அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. #JawaharlalNehru #ChildrensDay #SoniaGandhi
    ×