என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்‌ஷி அகர்வால்"

    • இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பொய் இன்றி அமையாது உலகு'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

    இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பொய் இன்றி அமையாது உலகு'. இதில் விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் சாக்ஷி அகர்வால், ஸ்வயம்சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


    பொய் இன்றி அமையாது உலகு

    பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை பேட்டை' வசந்த் இசையமைத்திருக்கிறார். காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் இணைந்து தயாரித்திருக்கிறது.


    பொய் இன்றி அமையாது உலகு

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.


    பொய் இன்றி அமையாது உலகு

    'பொய் இன்றி அமையாது உலகு' திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, '' நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக்கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள். அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும்.


    பொய் இன்றி அமையாது உலகு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கிறது. இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற 'லவ் டுடே' படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். நகைச்சுவையுடன் கலந்த ஃபீல் குட் படைப்பாக 'பொய் இன்றி அமையாது உலகு' தயாராகி இருக்கிறது'' என்று கூறினார்.




    • தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
    • தற்போது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படத்தில் நடித்துள்ளார்.

    தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சாக்ஷி அகர்வால்

    சாக்ஷி அகர்வால்

     இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில் சாக்ஷி அகர்வால் மூவர்ணத்திலான ஆடையை அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குடியரசு தினத்திற்காக அதிரடி காட்டிய

    சாக்ஷி அகர்வாலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
    • சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.

    தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷ் அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.

     

    சாக்ஷி அகர்வால்

    சாக்ஷி அகர்வால்

    இந்நிலையில் சாக்ஷி அகர்வால் புடவையில் இருக்கும் புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, லாங் டிரைவ் போலாமா? என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
    • சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.

    தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷ் அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.


    சாக்ஷி அகர்வால்

    இந்நிலையில் சாக்ஷி அகர்வால் பாவாடை, தாவணியில் இருக்கும் புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில்பகிர்ந்து 'ஒரு ஆடை உங்களது முழு தோற்றத்தையும் எப்படி மாற்றும்' என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.


    • பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
    • இவர் மைக்கல் ஜாக்சன் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களை சாக்ஷி அகர்வால் கைவசம் வைத்திருக்கிறார்.


    சாக்ஷி அகர்வால்

    சாக்ஷி அகர்வால்

    இந்நிலையில் சாக்ஷி அகர்வால் மைக்கல் ஜாக்சன் ஸ்டைலில் உடை அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சாதாரண பெண் மட்டுமல்ல, தனித்துவம் தான் எனது வல்லமை என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
    • சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாளான இன்று அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களை சாக்ஷி அகர்வால் கைவசம் வைத்திருக்கிறார்.



    சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாளான இன்று அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை கோவாவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகை சாக்ஷி அகர்வால் சமீபத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.
    • சில தினங்களுக்கு முன்பு சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை கோவாவில் கொண்டாடினார்.

    தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.



    சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களை சாக்ஷி அகர்வால் கைவசம் வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை கோவாவில் கேக் வெட்டி கொண்டாடினார்.



    இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




    • ஆக்சன், வில்லி, கிளாமர் என அனைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் அசத்தி வருபவர் சாக்‌ஷி அகர்வால்.
    • கடந்த ஆறு மாதத்தில் அவர் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

    பிக்பாஸ் மூலம் பட்டி தொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். தற்போது தமிழ் திரையுலகின் வளர்ந்துவரும் இளம் நடிகையாக அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்சன், வில்லி, கிளாமர் என அனைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் அசத்தி வரும் சாக்ஷி, தென்னிந்திய சினிமாவின் ஹாட் ஹீரோயினாக மாறி வருகிறார்.


    கடந்த ஆறு மாதத்தில் அவர் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் "நான் கடவுள் இல்லை" படத்தில் முழுநீள ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றிய அவர், தனது அற்புதமான நடிப்பில் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காட்டினார். அதே போல் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து, சமீபத்தில் வெளியான 'பஹீரா' படத்தில் எதிர்நாயகியாக வில்லி வேடத்தில் அனைவரையும் அதிர வைத்தார். தற்போது ஹங்கமா (hungama) ஓடிடியில் வெளியாகியுள்ள "என் எதிரே ரெண்டு பாப்பா" படத்தில் ஹாட் கிளாமர் ஹீரோயினாக கலக்கியிருக்கிறார்.

    எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொள்ளும் சாக்ஷி அகர்வால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கலக்கி வருகிறார் சாக்ஷி.

    சமீபத்திய திரைப்படங்கள் குறித்து அவர் பேசியதாவது:-

    "பிக்பாஸ் எனக்கு மிகப்பெரிய அடையாளம், பிக்பாஸ் எல்லோரிடமும் என்னை பற்றி அறிமுகம் தந்தது. பிக்பாஸ் அறிமுகத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது. உண்மையில் என் திரைப்பட வாய்ப்புக்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. திரைப்படம் என்பது எனது கனவு. அதனால் தான் டான்ஸ், ஆக்சன் கற்றுக்கொள்ள தனியாக கிளாஸ் போய்க்கொண்டிருக்கிறேன். "நான் கடவுள் இல்லை" படத்தில் நான் நடித்த ஆக்சன் காட்சிகள் நன்றாக இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி."


    பல மொழிகளில் நடிக்கிறீர்களே, மொழிப்பிரச்சனை இருக்கிறதா?

    "அப்படியெல்லாம் தோன்றியதில்லை. தென்னிந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இங்கு வாழ்க்கை ஒன்று தான். கலைஞர்கள் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். மொழிப்பிரச்சனை எனக்கு பெரிதாக தெரிந்ததே இல்லை. "

    உங்கள் கனவு கதாபாத்திரம் என்ன? என்ன மாதிரி கதாபாத்திரங்கள் நடிக்க விருப்பம்?

    "என் கதாபாத்திரங்கள் ஒரே சாயலில் இருக்கக் கூடாது. ஒரே மாதிரி பாத்திரங்களில் ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் எனது திறமையை வெளிப்படுத்தவே விருப்பம். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு கிராமத்து வேடத்தில் நடிக்க வேண்டும். எனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

    • நடிகை சாக்‌ஷி அகர்வால் பல படங்களில் நடித்து வருகிறார்.
    • விரைவில் சாக்‌ஷி அகர்வாலை பாலிவுட் படத்திலும் காணலாம்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். தற்போது தமிழ் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.


    மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார் இவர்.


    அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, ரஜித் கண்ணா இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படமான 'சாரா'வில் பரபரப்பாக நடித்து வருகிறார். மேலும், '8 தோட்டாக்கள்' புகழ் வெற்றிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன், 'கெஸ்ட் 2' உட்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.


    கியூட் ஹீரோயினாக கலக்கி வரும் சாக்ஷி அகர்வாலுக்கு, தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து, பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் சாக்ஷி அகர்வாலை பாலிவுட் படத்திலும் காணலாம். இந்த தீபாவளி, நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக, பான் இந்திய தீபாவளியாக அமைந்துள்ளது.

    • நடிகை சாக்‌ஷி அகர்வால் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.


    இவர் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.


    இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில், இவர் டார்ஜிலிங்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.


    • விஜயகாந்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
    • நடிகை சாக்‌ஷி அகர்வால் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை காலமானார்.

    இன்று தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் நேரில் வந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெளிநாடுகளுக்கு சென்ற திரை பிரபலங்கள் பலர் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சாக்ஷி கூறியிருப்பதாவது:-

    கேப்டன் விஜயகாந்த் சார்.. அவருக்கு இந்த நிலை ஏற்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் பல வருடங்கள் அவர் வாழ்ந்து எங்களையும் வாழ வைப்பார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர் இறந்ததை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

    என்னைப் பொறுத்தவரை நான் ஓர் இளம் நாயகி.. என்னிடம் மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டதுண்டு. கேப்டன் இருந்த காலகட்டத்தில் சினிமா தலை சிறந்து விளங்கியது.

    படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன்கள் முதல் கதாநாயகன் வரை அனைவரையுமே சமமாக நடத்துவற்கு காரணமானவர் கேப்டன். இன்று அவர் உயிரோடு இல்லை என்றாலும், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என நம்புகிறோம்.

    கேப்டனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • கிராமத்து பெண் போல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் பாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார்

    ரஜினி நடித்த காலா, அரண்மனை-3, நான் கடவுள் இல்லை, திருட்டு வி.சி.டி. உள்பட பல்வேறு தமிழ், மலையாள படங்களில் நடித்து வருபவர் சாக்ஷி அகர்வால். தற்போது மலையாளத்தில் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தற்காப்பு கலை பயிற்சி, களறி பயிற்சிகளை பயின்று வந்தார்.

    மேலும் கிராமத்து பெண் போல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.




    இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மருமகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழில் இவருக்கு பல படங்கள் கைவசம் உள்ளன.

    மேலும் கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பல மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிகிறது.தமிழில் வித்தியாசமான வேடங்கள் மூலம் கதாநாயகியாக  அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என அசத்தி வருகிறார்.




    மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் சாக்ஷி நடிக்க இருக்கிறார்.




    மேலும் சாக்ஷிக்கு தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து,  பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் பாலிவுட் படத்திலும் அவர் நடிக்க உள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×