என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுராக் காஷ்யப்"

    • பிராமணர்கள் உங்களை எரித்து விடுவார்கள்" என்று ஒருவர் கமெண்ட் செய்தார்.
    • சன்ஸ்காரின் (சம்ஸ்காரங்களின்) ராஜாக்களிடம் இருந்து பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல்கள் வருகின்றன.

    புலே திரைப்படம் 

    அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடிப்பில் உருவாகி வரும் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் புலே. மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரைச் சுற்றி உருவாகும் இந்தப் படம் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.

    ஆனால் திரையரங்குகளில் வெளியாகும் முன் பல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் ( CBFC ) கேட்டுக் கொண்டுள்ளது. சாதி தொடர்பான வாசகங்களை சென்சார் போர்டு நீக்கக் கோரியதால் படம் வெளியாவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இதை கண்டித்து இன்ஸ்டாகிராமில் பேசியிருந்தார்.

    பதிவு

    அதில், இந்தியாவில் சாதிகளே இல்லை என்றால் புலே தம்பதியினர் எதற்கு போராடினார்கள்?. இந்த படத்தால் பிராமணர்கள் வெட்கப்படுகிறார்கள். சாதிய, மதவாத அரசினால் இதுபோல் இன்னும் எத்தனை படங்கள் முடக்கப்பட்டுள்ளனவோ?. இந்தப் படங்கள் அவர்களை அப்படி என்னச் செய்கிறது என திறந்த மனதுடனும் வெளியே பேசமாட்டார்கள். மிகவும் கோழைத்தனமானவர்கள். தடாக் 2 படத்தின் திரையிடலின்போது தணிக்கை வாரியம் எங்களிடம் மோடி சாதிகளை ஒழித்துவிட்டார் என்று கூறினார்கள். அதே நேரத்தில் சந்தோஷ் திரைப்படம் இந்தியாவில் வெளியாகவில்லை.

    தற்போது, பிராமணர்கள் புலே படத்தை எதிர்க்கிறார்கள். சாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆவீர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்?. மோடியின் கூற்றுப்படி இந்தியாவில் சாதியப் பாகுபாடு இல்லை என்பதால் உங்கள் பிராமண சமூகம் இங்கே இல்லை. அல்லது எல்லோரும் சேர்ந்து எல்லோரையும் முட்டாளாக்குகிறார்கள் " என்று பதிவிட்டிருந்தார்.

    கமெண்ட்

    அவரின் இந்த பதிவுக்கு நிறைய கமெண்ட்கள் வந்தன. அதில் ஒரு பயனர், "பிராமணர்கள் உங்கள் தந்தைமார்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அவர்களை எதிர்கிறீர்களோ, அதை விட அதிகமாக அவர்கள் உங்களை எரித்து விடுவார்கள்" என்று கமெண்ட் செய்தார்.

    இதற்கு பதில் அளித்த அனுராக் காஷ்யப், "பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன், என்ன செய்வீர்கள்?" என்று காட்டமாக பதில் அளித்தார். இந்த கருத்து சர்ச்சையான நிலையில், பிராமண சமூகத்தினரை புண்படுத்தியதாக அனுராக் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

     இந்நிலையில் இந்த கருத்துக்களால் தனது மகள் மற்றும் குடும்பத்தினருக்கு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல் அழைப்புகள் வருவதாக குறிப்பிட்டு அனுராக் காஷ்யப் தனது காமென்டுக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

    மன்னிப்பு

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது எனது மன்னிப்பு கூறல். எனது பதிவுக்காக அல்ல. நான் சொன்ன அந்த ஒரு வரிக்காக மட்டும். அது தவறான விதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு வெறுப்பு வளர்க்கப்படுகிறது.

    உங்கள் மகள், குடும்பம், நண்பர்கள் ஆகியோர் சன்ஸ்காரின் (சம்ஸ்காரங்களின்) ராஜாக்களிடம் இருந்து பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல்களை பெறும் அளவுக்கு எந்த ஒரு செயலும் தகுதியானது அல்ல. நான் சொன்னதை நான் திரும்பப் பெற மாட்டேன்.

    நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னைத் திட்டுங்கள். என் குடும்பத்தினர் எதுவும் சொல்லவில்லை. மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், இதோ. பிராமணர்களே, பெண்களை விட்டுவிடுங்கள். மனுதர்மத்தை தவிர, பெண்களை மதிக்க வேண்டும் என்பது நமது மற்ற வேதங்களில் கூறப்பட்டுள்ளன. நீங்கள் எந்த பிராமணர் என்பதை முடிவு செய்யுங்கள். இதோ என்னிடமிருந்து மன்னிப்பு," என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • தடாக் 2 படத்தின் திரையிடலின்போது தணிக்கை வாரியம் எங்களிடம் மோடி சாதிகளை ஒழித்துவிட்டார் எனக் கூறினார்கள்.
    • சாதிய, மதவாத அரசினால் இதுபோல் இன்னும் எத்தனை படங்கள் முடக்கப்பட்டுள்ளனவோ?.

    அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடிப்பில் உருவாகி வரும் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் புலே. மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரைச் சுற்றி உருவாகும் இந்தப் படம் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.

    ஆனால் திரையரங்குகளில் வெளியாகும் முன் பல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் ( CBFC ) கேட்டுக் கொண்டுள்ளது.

    'மஹர்', 'மாங்', 'பேஷ்வாய்' மற்றும் 'மனுவின் சாதி அமைப்பு' போன்ற வார்த்தைகள் உட்பட குறிப்பிட்ட சாதி குறிப்புகளை நீக்குமாறு தயாரிப்பாளர்களிடம் CBFC கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே படம் வெளியாவதில் தடை ஏற்பட்டுள்ளது.

    இது திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

    இந்நிலையில் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், என் வாழ்க்கையில் நான் நடித்த முதல் நாடகம் ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் பூலே பற்றியது. இந்தியாவில் சாதிகளே இல்லை என்றால் அவர்கள் எதற்கு போராடினார்கள்?.

    இந்த படத்தால் பிராமணர்கள் வெட்கப்படுகிறார்கள். மத்திய தணிக்கைக் குழுவை தாண்டி மற்றவர்கள் எப்படி படத்தினை பார்க்கிறார்கள்? இந்த ஒட்டுமொத்த அமைப்புமே மோசமாக இருக்கிறது. இந்தப் படம் மட்டுமல்ல ஏற்கனவே சந்தோஷ், தடாக் 2, பஞ்சாப் 95, டீஸ் ஆகிய படங்களுக்கும் இந்தப் பிரச்சனைகளால் இந்தியாவில் வெளியாகாமல் இருக்கின்றன.

    சாதிய, மதவாத அரசினால் இதுபோல் இன்னும் எத்தனை படங்கள் முடக்கப்பட்டுள்ளனவோ?. இந்தப் படங்கள் அவர்களை அப்படி என்னச் செய்கிறது என திறந்த மனதுடனும் வெளியே பேசமாட்டார்கள். மிகவும் கோழைத்தனமானவர்கள்.

    தடாக் 2 படத்தின் திரையிடலின்போது தணிக்கை வாரியம் எங்களிடம் மோடி சாதிகளை ஒழித்துவிட்டார் என்று கூறினார்கள். அதே நேரத்தில் சந்தோஷ் திரைப்படம் இந்தியாவில் வெளியாகவில்லை.

    தற்போது, பிராமணர்கள் புலே படத்தை எதிர்க்கிறார்கள். சாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆவீர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்?. மோடியின் கூற்றுப்படி இந்தியாவில் சாதியப் பாகுபாடு இல்லை என்பதால் உங்கள் பிராமண சமூகம் இங்கே இல்லை. அல்லது எல்லோரும் சேர்ந்து எல்லோரையும் முட்டாளாக்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

    • வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
    • படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.

    வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி வரிகளில் மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
    • இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார்

    வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடல் நேற்று வெளியாக இருந்தது. பாரதிராஜாவின் மகன் மனோஜ் இறந்ததால் பாடலின் வெளியீட்டை இன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி ‘பகாசூரன்’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் குறித்து இயக்குனர் அனுராக் காஷ்யப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.

     

    பகாசூரன்

    பகாசூரன்


    'பகாசூரன்' திரைப்படம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 17-ஆம்) தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பகாசூரன் திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை கேட்க முடிகிறது. வாழ்த்துக்கள் என்னுடைய நண்பர் நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50வது படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்திற்கு மகாராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    அனுராக் காஷ்யப் 

    அனுராக் காஷ்யப் 

    இப்படத்தின் கதாநாயகன் போலவே எதிர்கதாநாயகன் கதாபாத்திரமும் வலுவானதாக இருப்பதால் அதில் முக்கிய நடிகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க வேண்டும் என்பதில் படக்குழு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடித்தி வருவதாகவும் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்குமுன்பு விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாலிவுட் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப்.
    • இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கென்னடி’.

    பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இவர் இயக்கத்தில் ராகுல் பட், சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கென்னடி'. கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அவருடைய 'கென்னடி' திரைப்படம் திரையிடப்பட்டதால் இந்த விழாவில் அனுராக் காஷ்யப் பங்கேற்றிருந்தார்.

    அதன் பிறகு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, இந்தப் படம் நடிகர் விக்ரமை மனதில் வைத்து எழுதியிருந்தேன். இதனால்தான் படத்திற்கும் 'கென்னடி' என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏனெனில் நடிகர் விக்ரமின் ஒரிஜினல் பெயர் 'கென்னடி'. ஆனால் அவர் என் அழைப்புக்கு எந்த பதிலும் அளிக்காததால் வேறொருவரை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று, அதன்படி இந்த படத்தில் நடிக்க நடிகர் ராகுல் சம்மதித்தார் என்று கூறி இருந்தார்.


    அனுராக் காஷ்யப்

    இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், "இந்தப்படத்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் அதற்கு நான் பதிலளிக்கவில்லை என்றும் நண்பர் ஒருவர் மூலமாக அறிந்த உடன் உங்களை தொடர்புகொண்டு எனக்கு உங்களுடைய எந்த மெயிலும், மெசேஜூம் வரவில்லை என தெரிவித்தேன். மேலும் நீங்கள் என்னை தொடர்பு கொண்ட மெயில் ஐடி மற்றும் தொடர்பு எண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாற்றிவிட்டேன் என்றும் அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதையும் விளக்கமளித்தேன். அந்த தொலைபேசி உரையாடலில் நான் சொன்னது போல, உங்களின் 'கென்னடி' படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். காரணம் அது என்னுடைய பெயரை கொண்டிருப்பதால். அன்புடன் கென்னடி என்ற சீயான் விக்ரம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு பதில் அளித்துள்ள அனுராக் "முற்றிலும் சரி பாஸ் . மக்களின் தகவலுக்காக, வேறொரு நடிகரிடம் நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்று அவர் கண்டறிந்தபோது, அவர் என்னை நேரடியாக அழைத்தார், அவரிடம் வேறு வாட்ஸ்அப் எண் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அவர் என்னை அணுகுவதற்கு சரியான தகவலைக் கொடுத்தார், மேலும் ஸ்கிரிப்டைப் படிப்பதில் ஆர்வம் காட்டினார், ஆனால் அதற்குள் நாங்கள் அனைவரும் ஒரு மாத ஷூட்டிங்கில் இருந்தோம். படத்திற்கு "கென்னடி" என்ற பெயரைப் பயன்படுத்தவும் அவர் அனுமதி அளித்தார். நான் பேட்டியில் கூறியது பின்னால் உள்ள கதை, படம் எப்படி கென்னடி என்று அழைக்கப்பட்டது. சியானோ அல்லது நானோ ஒன்றாக வேலை செய்யாமல் ஓய்வு பெற மாட்டோம் என்று நிச்சயமாக நான் நினைக்கிறேன். நாம் சேது காலத்திற்கு முந்தைய காலத்திற்கு செல்கிறோம் என குறிப்பிட்டு உள்ளார்.


    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன்.
    • இவர் தற்போது அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கும் கென்னடி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    சன்னி லியோன் நடிந்த அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கும் கென்னடி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக சன்னி லியோன் கேன்ஸ் நகருக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் நீலப் படங்களில் நடித்துக் கொண்டிருந்து விட்டு தொலைக்காட்சி மற்றும் திரையுலகிற்கு வந்தபோது எதிர்கொண்ட எதிர்ப்பை பற்றி பேசினார்.


    கென்னடி படக்குழு

    என்னுடைய அந்நாள் காதலர் தற்போதைய என்னுடைய கணவர் டேனியலிடம் நான் இந்தியா வரவில்லை என்னை எல்லோரும் வெறுப்பார்கள் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் என்னை பங்கெடுக்க வைத்தார். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்கள் சமையலறை வரை என்னை கொண்டுபோய் சேர்த்தது. இதனால் என்னுடைய முந்தைய முகம் முழுவதுமாக மாறியது.

    அதில் இருக்கும்போதே நான் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அதன் பிறகு நான் சினிமாவுக்குள் வருவதற்கு பெரிய தடை இருந்தது. என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்தன. பெண்கள் அதிகம் பேர் என்னிடம் பேசினார்கள் என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.



    • சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'.
    • இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதை சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.



    'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதை சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார். அதில், 15 ஆண்டுகள் ஆன இப்படம் என்னை கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் படத்தை இயக்க மிகவும் ஊக்கப்படுத்தியது. சசிகுமார் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.



    • ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



    'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் மேலும் ஒரு இயக்குனர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அனுராக் காஷ்யப் இதற்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப்.
    • இவர் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.


    அனுராக் காஷ்யப்

    இந்நிலையில், அனுராக் காஷ்யப் படத்தில் நடித்தது குறித்து பிரபல நடிகை அம்ருதா சுபாஷ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, அனுராக்குடன் எனது முதல் நெருக்கமான காட்சிகளை ஸேக்ரெட் கேம்ஸ் பாகம் இரண்டில் நடித்தேன். ஆண், பெண் பேதங்கள் இல்லை. அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தார். அவர் இயக்குனர் குழுவை அழைத்தார். இக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேரங்களை சரியான தேதிகளில் அமைக்க உதவும் வகையில் எனது மாதவிடாய் தேதி குறித்து அவர்தான் என்னிடம் கேட்டறிந்தார். அத்தகைய தேதிகளில் உங்களால் இக்காட்சிகளில் நடிக்க முடியுமா? எனவும் கேட்டார். என்று கூறினார்.


    அம்ருதா சுபாஷ்

    அம்ருதா சுபாஷ் சமீபத்தில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும்.
    • இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா கதையம்சம் கொண்ட "ஹட்டி" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக இருக்கிறது.

    இந்த திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக் திருநங்கையாக நடித்திருக்கிறார். இது தொடர்பான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. போஸ்டரின்படி நவாசுதீன் சித்திக் அடையாளம் காண முடியாத அவதாரத்தில் பார்த்த ரசிகர்கள், உண்மையில் இது அவர்தானா என ஆச்சரியத்தில் உள்ளனர்.

     

    ஹட்டி குறித்து அனுராக் காஷ்யப் கூறும் போது, "ஹட்டியை உருவாக்க அக்ஷத் மற்றும் அவர் குழு உழைத்த கடின உழைப்பைக் கண்டு, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அக்ஷத் எனக்குப் பல வருடங்களாக உதவி இயக்குநராக இருந்துள்ளார். இயக்குநராக அவர் அறிமுகமான படத்திலேயே நடிகராக முன் வரிசையில் இடம் பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது."

    "ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும். மேலும் நீங்கள் இதுவரை பார்த்திராத உலகைக் காட்டும். இந்த புதிய உலகத்தில் நவாஸை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்த படத்தின் வெளியீட்டிற்காக நான் காத்திருக்கிறேன், பார்வையாளர்கள் கண்டிப்பாக இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

    ×